ஆச்சேயில் நிலநடுக்கம், 25 பேர் பாலி

இந்தோனேசியாவின் சுமத்திரா தீவின் வடபகுதியில் உள்ள ஆச்சேயில் (Aceh) புதன் காலை 5:00 மணியளவில் இடம்பெற்ற நிலநடுக்கத்துக்கு 25 பேருக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். அமெரிக்க Geological Survey அமைப்பின் கணிப்பின்படி 6.5 அளவிலான நடுக்கம், நிலத்துக்கு கீழ் 17.2 km ஆழத்தில் இடம்பெற்று உள்ளது. மேலும் பலர் இடிபாடுகளுள் அகப்பட்டும் இருக்கலாம் என்று க்கூறப்படு உள்ளது. . சுனாமி ஆபத்து இல்லை என்றும் கூறப்படு உள்ளது. . 2004 ஆம் ஆண்டு இவ்விடத்தில் இடம்பெற்ற 9.1 […]

முதல்வர் ஜெயலலிதா மரணம்

தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் இன்று தனது 68 ஆவது வயதில் காலமானார். இவரின் மரணத்தை இன்று திங்கள் இரவு Apollo வைத்தியசாலை அறிவித்து உள்ளது. பொதுவாகவே அரசியல்வாதிகளின் குடும்பத்தில் பிறந்து அரசியலுக்கு வந்த பெண்களை போல் அல்லது, இவர் சுயமாக அரசியலுக்கு வந்து முதலமைச்சர் ஆனார். .  1960 ஆம் ஆண்டுமுதல் இவர் 140 படங்களுக்கு மேல் நடித்து உள்ளார். சுமார் 20 வருடங்கள் சினிமாவில் இருந்த இவர், பின்னர் 1982 ஆம் ஆண்டில் அண்னா […]

இலங்கை உள்ளூர் விமான சேவைக்கு சீன Y-20

இலங்கை அரசாங்கம் புதிதாக உள்ளூர் விமான சேவை ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாகவும், அந்த சேவையை இலங்கை விமானப்படை செயல்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்காக இலங்கை இரண்டு சீன Y-20 விமானங்களை கொள்வனவு செய்யவுள்ளதாக சீன பத்திரிகை கூறியுள்ளது. . சீனாவின் Xian Aircraft Industrial Corporation நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த Y-20 விமானம் இந்த வருடம் ஜூலை மாதத்திலேயே முதன் முதலாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. இலங்கை இந்த விமானத்தை கொள்வனவு செய்யின், சீனாவுக்கு வெளியே முதலில் Y-20 […]

இலங்கைக்கு புதிய Marines, அமெரிக்கா பயிற்சி

இலங்கைக்கு புதிதாக Marines படை (Marines Corps) அமைக்கப்பட்டுள்ளது. அந்த புதிய படைக்கு அமெரிக்காவின் Marines பயிற்சி வழங்கி வருகின்றனர். ஆரம்பத்தில் இந்த புதிய படை 7 அதிகாரிகளையும், 150 படையினரையும் (sailors) கொண்டிருக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. . பொதுவாக நாடுகள் தரைப்படை, கடற்படை, விமானப்படை என மூன்று படை பிரிவுகளை கொண்டிருந்தாலும், அமெரிக்கா போன்ற சில நாடுகள் தரையிலும், கடலிலும் இயங்கக்கூடிய ஒரு அணியையும் கொண்டிருப்பது உண்டு. இவ்வகை படையினர் விசேட தாக்குதல்களுக்கு பயப்படுத்தப்படுவர். […]

இந்திய திரையரங்குகளில் கட்டாய தேசியகீதம்

இந்திய திரையரங்குகள் படம் ஆரம்பிக்கு முன் கட்டாயமாக இந்திய தேசியகீதத்தை பாடவேண்டும் என்று இந்திய உயர் நீதிமன்றம் இன்று புதன் கூறியுள்ளது. ஆதிகாலங்களில் இவ்வாறு இந்திய தேசியகீதம் பாடப்பட்டு இருந்திருந்தாலும் அண்மைக்காலங்களில் அவ்வாறு பாடுவது நின்று போயுள்ளது. தற்போது உயர் நீதிமன்றம் மீண்டும் தேசீயகீதம் பாடலை கட்டாயப்படுத்தி உள்ளது. . அவ்வாறு கீதம் பாடப்படும்போது, இந்திய தேசிய கொடி அல்லது கொடி உருவமும் கொண்டிருக்கப்படல் வேண்டுமாம். அதுமட்டுமன்றி திரையரங்கின் கதவுகள் மூடப்பட்டு, அனைவரும் எழுந்து நின்று மரியாதை […]

கொலம்பியாவில் விமானம் வீழ்ந்து 71 பேர் பலி

கொலம்பியாவில் பிரேசில் நாட்டு உதைபந்தாட்ட வீரர்களை ஏற்றி சென்ற வாடகை விமானம் ஒன்று வீழ்ந்ததில் 71 பேர் பலியாகி உள்ளனர். அத்துடன் ஆறு பேர் உயிர் தப்பியும் உள்ளார். மரணமானோரில் பெரும்பாலானோர் உதைபதாட்ட வீரரும், பத்திரிகையாளரும் ஆவர். உள்ளூர் நேரப்படி திங்கள் இரவு 10:00 மணியளவில் விமானி அபாயக்குரல் கொடுத்துள்ளார். அவர் விமானத்தில் இலத்திரனியல் குழப்பம் உருவாகியுள்ளதாக கூறி உள்ளார். பின்னர் அந்த விமானம் வீழ்ந்துள்ளது. . இந்த விமானம் (flight 2933) பிரேசில் நாட்டு உதைபந்தாட்ட […]

பிடேல் காஸ்ரோ 90 வயதில் மரணம்

கியூபாவின் முன்னாள் தலைவர் பிடேல் காஸ்ரோ இன்று தனது 90 ஆவது வயதில் காலமானார். இவர் ஒரு இடதுசாரி தலைவராக அமெரிக்காவின் மிக அருகில் இருந்து வலதுசாரி நாடுகளுக்கு cold war காலத்தில் முக்கிய நிகழ்வுகளை நடாத்தியவர். . ஸ்பெயின் நாட்டிலுருந்து வந்து குடியேறிய ஒருவருக்கு பிறந்த காஸ்ரோ கரும்பு செய்கையில் முன்னணியில் இருந்தவர். இவர் பல்கலைக்கழத்தில் சட்டம் படிக்கும் போதே, அமெரிக்கா நிறுவனங்கள் தமது நாட்டிடை சுரண்டுவதை எதிர்த்தவர். அதன் காரணமாக முதலாளித்துவத்தை எதிர்க்க ஆரம்பித்தார். […]

எம். ஜி. ஆர். சொத்துக்கள் நீதிமன்றம் கையில்

சுமார் 29 வருடங்களின் முன் காலம் சென்ற நடிகர், முன்னாள் தமிழ்நாடு முதல்வர் எம்.ஜி.ஆர். சொத்துக்களின் பொறுப்பை நீதிமன்றம் இன்று வியாழன் எடுத்துள்ளது. இந்த சொத்துக்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்த சென்னை உயர் நீதிமன்றம், அவற்றை நிர்வாகிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் அவர்களை நியமித்து உள்ளது. . 1987 இல் மறைந்த எம். ஜி. ஆர். தனது சொத்துக்களுக்கு பொறுப்பாக ராகவாச்சாரி என்பவரை சட்டப்படி நியமித்து இருந்தார். அத்துடன், ராகவாசரியின் மறைவின் பின் ராஜேந்திரன் என்பவரை […]

கர்நாடக வித்துவான் பாலமுரளிகிருஷ்ணா மரணம்

கர்நாடக இசை வித்துவான் பாலமுரளிகிருஷ்ணா தனது 86ஆவது வயதில் இன்று செவ்வாய் சென்னையில் காலமானார். தனது கர்நாடக இசைதுறைக்கான சேவை காரணமாக இந்தியாவின் ‘பத்ம பூஷன்’ பட்டம் முதல் பல பட்டங்களை பெற்ற இவர் தெலுங்கு, சமஸ்கிருதம், கன்னடம், தமிழ் போன்ற பல மொழிகளில் தனது இசையை பரப்பியுள்ளார். . கர்நாடக இசையில் மட்டுமன்றி இந்திய திரையுலகிலும் இவர் சேவை ஆற்றியுள்ளார். இவர் சுமார் 400 பாடல்கள் பாடியுள்ளதாக கூறப்படுகிறது. சில படங்களில் இவர் நடித்தும் உள்ளார். […]

ஜப்பானில் 7.3 அளவிலான நிலநடுக்கம்

ஜப்பானின் Fukushima பகுதியில், உள்ளூர் நேரப்படி, செய்வாய் காலை 6:00 மணியளவில் 7.3 அளவிலான பெரும் நிலநடுக்கம் இடம்பெற்றுள்ளது. நிலநடுக்கத்தால் உருவாக்கப்பட்ட கடல் அலைகள் 3 மீட்டர் வரை (10 அடிவரை) இருக்கலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது. மக்களை உயர் இடங்களுக்கு செல்லும்படி அதிகாரிகள் கேட்டுள்ளனர். . Fukushima Daiichi அணு மின் உற்பத்தி நிலையம் இங்கு உள்ளமை குறிப்பிடத்தக்கது. இதுவரை அந்த மின் நிலையத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் கூறப்பட்டு உள்ளது. ஆனாலும் முன் எச்சரிக்கையாக அவற்றின் […]