தாலித் தம்பதி வெட்டிக்கொலை, ரூ15 கடன் காரணம்

  இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் உள்ள மணிப்பூரி என்ற இடத்தில் தாலித் தம்பதி ஒன்று 15 ரூபா ($0.22) கடன் காரணமாக கோடாலியால் கொத்தி கொலை செய்யப்பட்டு உள்ளனர். . ஒரு கிழமையின் முன் இந்த தம்பதி 3 பிஸ்கட் பைகளை, ஒவ்வொன்றும் 5 ரூபா வீதம், தமது பிள்ளைகளுக்காக கடன் வாங்கியுள்ளனர். கடை உரிமையாளர் (Ashok Mishra), ஒரு தாலித் அல்லாதவர், கடன் பணத்தை மீண்டும் கேட்டுள்ளார். அதற்கு மரணித்த தம்பதி தினக்கூலி கிடைத்தபின் பணத்தை […]

அரச பணத்தில் அம்பானியின் மனைவிக்கு பாதுகாப்பு

  இந்தியாவின் முதலாவது பணக்காரர் முகேஷ் அம்பானி (Mukesh Ambani). இவரின் மொத்த சொத்துக்களின் பெறுமதி சுமார் $20 பில்லியன்.  ஆனால் இவரின் மனைவி Nita அம்பானிக்கு 10 பேர் கொண்ட இந்தியாவின் அதிவிசேட பாதுகாப்பு படை பாதுகாப்பை வழங்குகிறதாம். தனது 27 மாடி வீட்டில் சுமார் 600 வேலையாளர்களுடன் வாழும் இவருக்கு அரச பணத்தில் பாதுகாப்பு வழங்கும் செய்தியை Hindustan Times வெளியிட்டு இருக்கிறது. . இவரின் கணவர் முகேஷ் அம்பானிக்கு 2013 ஆம் ஆண்டு […]

இலங்கையில் 15,000 ஏக்கரை எதிர்பார்க்கிறது சீனா

இலங்கையில் தனது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள சீனா 15,000 ஏக்கர் நிலத்தை (சுமார் 60 சதுர கிலோமீட்டர்) எதிர்பார்க்கிறது. இந்த பொருளாதார (special economical zone) நடவடிக்கை சுமார் 1 மில்லியன் புதிய வேலைவாய்ப்புகளை வழங்கும் என்றும் கூறப்படுகிறது. . சீனா கருத்தில் கொள்ளும் இடம் இலங்கையின் தெற்கே உள்ள Hambantotaவை அண்டிய பகுதியாகும். இப்பகுதியில் புதிதாக கட்டப்பட்ட விமான நிலையம், துறைமுகம் என்பற்றை பயன்படுத்தக்கூடியதாக இந்த பொருளாதார மையம் அமையும். . சீனாவே இந்த பொருளாதார […]

ஜப்பானில் கத்தி குத்துக்கு 19 பலி

  ஜப்பானின் தலைநகர் ரோக்கியோவுக்கு (Tokyo) மேற்கே உள்ள Sagamihara என்ற நகரில் உள்ள செயல்பாடு குறைந்தோருக்கான நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை இடம்பெற்ற கத்தி குத்துகளுக்கு 19 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 25 பேர் காயம் அடைந்தும் உள்ளனர். தாக்குதலை நடத்தியவர் என கருதப்படும், 26 வயதுடைய, Satoshi Uematsu என்பவர் செவ்வாய் காலை 3:00 மணியளவில் போலீசாரிடம் சரண் அடைந்துள்ளார். . சரண் அடைந்தவரிடம் இருந்து பல கத்திகள் மீட்கப்பட்டு உள்ளன. அவற்றில் […]

ஜெர்மனில் தாக்குதல், பலர் பலி

மூனிக் என்ற (Munich) ஜெர்மனின் தென்பகுதி நகரில் வெள்ளி மாலை பலர் கொண்ட குழு ஒரு துப்பாக்கி தாக்குதல்களை செய்து வருகிறது. முதலில் அங்குள்ள Olympia Shopping Centerஇல் இந்த தாக்குதல் வெள்ளி மாலை 8:00 மணியவில் இடம்பெற்று உள்ளது. பின்னர் இந்த தாக்குதல்கள் வேறு பொது இடங்களுக்கும் பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. . உடனடியாக போலீசார் பொதுமக்களை பொது இடங்களுக்கு செல்லாது வீட்டில் இருக்குமாறு கேட்டுள்ளார். அங்குள்ள ரயில் சேவை உடனடியாக ரயில் நிலையத்தில் […]

இந்திய இராணுவ விமானம் வங்கத்தில் தொலைவு

இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று வங்காள விரிகுடாவில் இன்று வெள்ளி தொலைந்துள்ளது. ரஷ்யா தயாரிப்பான Antonov 32 வகை விமானமே இவ்வாறு காணாமல் போயுள்ளது. சென்னையில் இருந்து அந்தமான் தீவுகளை நோக்கி பறக்கையிலேயே இது தொடர்புகளை இழந்துள்ளது. இந்த விமானத்தில் 29 பேர் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. . இந்த விமானத்தை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. சென்னையில் இருந்து புறப்பட்டு 15 நிமிடங்கள் அளவில் தொடர்புகள் இழக்கப்பட்டு உள்ளது. மொத்த […]

நான்கு விமானங்கள் பாக்கித்தானுக்கு குத்தகையில்

இலங்கை விமான சேவையான ஸ்ரீலங்கன் தனது புதிய Airbus A330 விமானங்களில் நான்கை பாகிஸ்தான் விமான சேவைக்கு (PIA) குத்தகை அடிப்படையில் வழங்கவுள்ளது. உடனடியா ஒன்றும், பின்னர் மூன்றுமாக மொத்தத்தம் PIA யினால் குத்தககைக்கு எடுக்கப்டும். 2012 ஆம் ஆண்டில் கொள்வனவு செய்யப்பட்ட 7 இவ்வகை விமானங்களில் நான்கே இவ்வாறு குத்தகைக்கு விடப்படவுள்ளது. . ஸ்ரீலங்கன் விமான சேவை தபோது சுமார் $3.25 பில்லியன் கடனில் உள்ளது. குத்தகைக்கு விடப்படும் விமானங்கள் ஒவ்வொன்றும் மாதம் ஒன்றுக்கு சுமார் […]

சிரியாவில் அமெரிக்க குண்டுக்கு 100 வரை பலி

சிரியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை அமெரிக்க வான்படை வீசிய குண்டு ஒன்றுக்கு சுமார் 100 பொதுமக்கள் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. வேறு சிலர் பலியானோர் தொகை 200 க்கும் அதிகம் என்றுள்ளனர். சிரியாவின் Manbij என்ற நகருக்கு சுமார் 15 km வடக்கே இந்த குண்டு வீசப்பட்டு உள்ளது. . IS என்ற குழுவுக்கு பயந்து ஓடிய பொதுமக்கள் மீதே இந்த குண்டு வீசப்பட்டு உள்ளது. தப்பி ஓடிய பொதுமக்களை IS என்று தவறாக கருத்தியதே இதற்கு […]

ரஜனி படத்துக்கு வெள்ளி விடுதலை

இந்தியாவின் தென் பகுதியில் உள்ள பல நிறுவனங்கள் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை விடுமுறை செய்கின்றன. ரஜனியின் ‘கபாலி’ திரைப்படம் அன்றைய தினம் இந்தியாவில் வெளியிடப்படுவதே இதற்கு காரணம். இப்படம் சுமார் 12,000 திரைகளில் அன்றைய தினம் வெளியிடப்படவுள்ளது. . பணியாளர் பெருமளவில் சுகயீனம் என்று கூறி பணிக்கு வாராது விடுவார்கள் என்றும், தமது தொலைபேசிகளை துண்டித்து விடுவார்கள் என்றும் தாம் கருதுவதாக இந்த நிறுவனங்கள் கூறியுள்ளனவாம். அதனாலேயே தாம் முன்கூட்டியே விடுமுறை அறிவித்துள்ளதாக கூறியுள்ளன. . Air […]

தாய்வானில் பஸ் விபத்து, 26 பலி

தாய்வானில் உல்லாசப்பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ் ஒன்று தீ பற்றிக்கொண்டதால் 24 பயணிகளும், சாரதியும், உல்லாச பயணிகளின் வழிகாட்டியும் பலியாகி உள்ளனர். இந்த 24 பயணிகளும் சீனாவின் Liaoning மாநிலத்தவர்கள். இவர்கள் தமது உல்லாச பயணம் முடிந்து சீனாவுக்கு திரும்புவதகாக விமான நிலையம் செல்கையிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. . சாரதியும், வழிநடத்துபவரும் தாய்வானை பிறப்பிடமாக கொண்டவர்கள். . விபத்து நடந்த இடத்து தீ அணைக்கும் படை அதிகாரி “பஸ்ஸில் அகப்பட்டவர்கள் தப்பிக்க போதிய நேரம் இருந்திருக்கவில்லை” என்றுள்ளார். […]