அமெரிக்க குடியுரிமையை கைவிட்டார் Boris Johnson

தற்போதைய பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் Boris Johnson பிரித்தானிய, அமெரிக்கா ஆகிய நாடுகளின் குடி உரிமை கொண்டவர். ஆனால் இவர் தனது அமெரிக்க குடியுரிமையை 2016 ஆம் ஆண்டில் சட்டப்படி கைவிட்டுள்ளார் என்கிறது அமெரிக்க அரசின் ஆவணம் ஒன்று. . Boris Johnson பிரித்தானிய பெற்றாருக்கு அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் பிறந்தவர். அதனால் அவருக்கு அமெரிக்க குடியுரிமையும், பிரித்தானிய குடியுரிமையும் கிடைத்தது. ஆனால் அவர் ஐந்து வயதில், தனது பெற்றாருடன், பிரித்தானியா சென்றுள்ளார். . இவர் 2015 […]

IPKF 1985 ஆம் ஆண்டிலேயே தயாராம்

அண்மையில் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள பழைய CIA குறிப்புக்களின் படி இந்திய தனது படைகளை இலங்கைக்கு அனுப்ப 1985 ஆம் ஆண்டிலேயே தயார் படுத்தி உள்ளதாம். இந்த CIA கருத்துப்படி இந்தியா இலங்கையின் விமான தளம் ஒன்றை ஆகாய படைகளை அனுப்புவதன் மூலம் கட்டுப்பாடில் கொண்டுவந்து பின் தமது படைகளை பலப்படுத்தும் திட்டத்தை கொண்டிருந்ததாம். இவ்வகை பயிற்சி ஒன்றை இந்திய படையினர் 1985 ஆண்டில் திருவானத்தபுரம் பகுதியில் செய்து இருந்தனராம். . “The paratroopers probably would try to […]

பொலநறுவையில் மும்மொழி பாடசாலை

இந்தியாவின் உதவியுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரதேசமான பொலநறுவையில் ஓர் பல்கலாச்சார, மும்மொழி பாடசாலை அமைக்கப்படவுள்ளது. இந்த உடன்படிக்கையை இலங்கைக்கான தூதுவர் Taranjit Singh Sandhuவும் இலங்கையின் கல்வி அமைச்சின் செயலாளர் Sunil Hettiarachchiயம் செய்து கொண்டார்கள். . இந்த பாடசாலை கட்டுமானத்துக்கான செலவை, சுமார் 300 மில்லியன் இலங்கை ரூபாய்கள், இந்தியா வழங்கும். இப்பாடசாலைக்கு சிங்கள, தமிழ், இஸ்லாமிய மாணவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவர். இவர்களுக்கு சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகள் பயிற்றுவிக்கப்படும். . இந்த திட்டம் […]

டிரம்ப் தாண்டவ கூத்து 2

பலரும் எதிர்பார்த்தபடி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது சிலநாள் ஆட்சிக்குள் பல கூத்துக்களை நடாத்தியுளார். அவற்றுள் முதலாவது பெரிய கூத்து ஈராக், ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், யேமன் ஆகிய 6 நாடுகளில் இருந்து அமெரிக்கா வருபவர்களை 90 நாட்களுக்கு தடை செய்தல். முதலில் அமரிக்க வதிவுரிமை (green card) பெற்றவர்களையும் இந்த தடை மூலம் திருப்பி அனுப்பினார் டிரம்ப், பின்னர் அதை மாற்றிக்கொண்டனர். . டிரம்பின் இரண்டாவது தாண்டவ கூத்துக்கு ஆஸ்திரேலியா இலக்காகி உள்ளது. கடந்த […]

இலங்கை வரவிருந்த 6 Kg போதை கைப்பற்றல்

இந்தியாவின் தூத்துக்குடி என்ற இடத்தில் இருந்து இலங்கைக்கு கடல் மூலம் கடத்தப்படவிருந்த 6 Kg heroin இந்திய சுங்கத்தால் கைப்பற்றப்பட்டு உள்ளது. அத்துடன் 3 இந்தியரும், 4 இலங்கையரும் கைதும் செய்யப்பட்டு உள்ளனர். செய்வாய் கைதுசெய்யப்பட்ட இந்தியர் புதன் கிழமை நீதிமன்றம் எடுத்துவரப்பட்டு இருந்தனர். . கடந்த ஞாயிறு பிற்பகல் இவ்வாறு போதை இலங்கைக்கு கடத்தப்படவிருந்ததாக துப்பு கிடைத்ததின் பின், இந்திய சுங்க உறுப்பினர்கள் கரையோரத்தை கண்காணித்து வந்துள்ளனர். ஒரு படகு சந்தேகத்துக்கு இடமான முறையில் பயணிக்க, […]

ராஜீவ் கொலையை ஐந்தாண்டு முன்னரே எதிர்பார்த்த CIA

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை புலிகள் கொல்வார்கள் என்பதை அமெரிக்காவின் CIA அமைப்பு படுகொலை இடம்பெறுவதுக்கு 5 வருடங்கள் முன்னரே எதிர்பார்த்திருந்ததாம். இந்த தகவல் அண்மையில் அமெரிக்கா பகிரங்கப்படுத்தி இருந்த 13 மில்லியன் பக்கங்கள் கொண்ட தொகுப்பில் உள்ளது. . 1986 ஆம் ஆண்டு மே மாதம் 22ம் திகதி CIAயினால் எழுதப்பட்ட குறிப்பு ஒன்று அப்போது பிரதமராக பதவியில் இருந்த ராஜீவை, 1989 ஆம் ஆண்டில் அவரின் பதவிக்காலம் முடிய முன், புலிகள் கொலை […]