ரம்ப்-தலபான் இரகசிய பேச்சுவார்த்தை முறிந்தது

நாளை ஞாயிறு அமெரிக்காவில் இடம்பெறவிருந்த ரம்ப்-தலபான் சந்திப்பை இன்று முறித்துக்கொண்டார் அமெரிக்க ஜனாதிபதி ரம்ப். . அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் ஆப்கானிஸ்தானின் தலபான் இயக்கத்துடன் சில காலமாக இரகசிய பேச்சுவார்த்தை நடாத்தி வருகிறார். அங்கு அமெரிக்க படைகள் நடாத்திவரும் 18 வருடகால யுத்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவருவதே ரம்பின் நோக்கம். . ஆனால் ரம்புடன் பேச்சுவார்த்தை நிகழ்த்திவரும் தலபான் தனது தாக்குதல்களையும் தொடர்ந்து வந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றுக்கு ஒரு […]

சந்திர கலத்துடனான தொடர்பை இழந்தது இந்தியா

சந்திரனில் மெதுவாக தரையிறங்கும் நோக்கில் ஏவிய Chandrayaan-2 என்ற தனது சந்திர கலத்துடனான தொடர்புகளை இந்தியா இழந்துவிட்டது என்று இந்தியாவின் விண்ணாய்வு நிலையம் ISRO அறிவித்துள்ளது. அந்த கலத்துடனான தொடர்பை இழந்தது நிரந்தரமானதா அல்லது மீட்கப்படக்கூடியதா என்று இந்திய இதுவரை அறிவிக்கவில்லை. . சந்திரனின் மேற்பரப்பில் இருந்து 2.1 km உயரத்தில் கலம் உள்ளபோதே தொடர்புகள் அற்று போயின. அதுவரை கலத்துடனான தொடர்புகள் நலமாக இருந்துள்ளன. . சந்திரனில் மோதாது, மெதுவாக தரையிறங்கும் (soft landing) இந்தியாவின் […]

சிம்பாப்வே முகாபே மரணம்

சிம்பாப் நாட்டின் (Zimbabwe) முன்னாள் ஜனாதிபதி முகாபே (Robert Mugabe) இன்று தனது 95 ஆவது வயதில் காலமானார். சுதந்திர போராளியாக தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்து, பின் சிம்பாப்வேயின் சர்வாதிகாரியாக மாறிய இவர் 2017 ஆம் ஆண்டில், 37 வருட சர்வாதிகார ஆட்சியின் பின், இராணுவ புரட்சி மூலம் பதவி இறக்கம் செய்யப்பட்டு இருந்தார். . கடந்த ஏப்ரல் மாதம் முதல் இவர் சிங்கப்பூரில் வைத்தியம் பெற்று வந்திருந்தார். . பிரித்தானியர் ஆட்சி காலத்தில் அப்போது […]

பிரித்தானிய பிரதமரின் தம்பி பதவி விலகினார்

தற்போதைய பிரித்தானிய பிரதமர் Boris Johnsonனின் தம்பியார் Jo Johnson இன்று தனது வர்த்தக அமைச்சர் பதவியையும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறந்துள்ளார். பிரதமரும், அண்ணனுமான Boris உடன் கொண்ட Brexit தொடர்பான முரண்பாடே தம்பியின் பதவி துறப்புக்கு காரணம். . Brexit தொடர்பாக இடம்பெற்ற பாராளுமன்ற வாக்கெடுப்பில் தனது விருப்பத்துக்கு ஏற்ப வாக்களிக்காத தம்பி உட்பட 21 Tory (அல்லது Conservative) கட்சி உறுப்பினர்களை கட்சியில் இருந்து விளக்கினார் பிரதமர் ஜான்சன். அதனால் உட்கட்சி முரண்பாடு, […]

மகேந்திரன் இலங்கைக்கு நாடு கடத்தப்படலாம்?

இலங்கை மத்திய வங்கியின் தலைவரை இலங்கைக்கு நாடு கடத்துமாறு இலங்கை சிங்கப்பூரை கேட்கவுள்ளது. தற்போது சிங்கப்பூரில் வாழும் சிங்கப்பூர் வாசியான இவர் மீது $74 மில்லியன் ஊழல் (insider trading) குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது. . 2015 ஆம் ஆண்டில் இவர் சில வர்த்தக உண்மைகளை தனது மருமகனுக்கு வழங்கி இலாபம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவரது மருமகன் அப்போது மகேந்திரனின் முதலீடுகளை மேற்பார்வை செய்தவர். . மகேந்திரன் இலங்கை அரசுக்கு $11 மில்லியன் நட்டம் ஏற்படவும் காரணமாக […]

புதிய பிரித்தானிய பிரதமரின் முதல் தோல்வி

முன்னாள் பிரித்தானிய பிரதமர் மே (May) அவரது பதவிக்கு தகுதி அற்றவர் என்று கூறி பதவிக்கு ரம்ப் வகையில் பதவிக்கு வந்த Boris Johnson இன்று தனது முதலாவது Brexit சார்பான தோல்வியை அடைந்துள்ளார். தனது no-deal முறையில் (ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு இணக்கத்தை அடையாது) ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற கொண்டிருக்கவுள்ள வல்லமையை ஜான்சன் இன்று இழந்துள்ளார். . பிரித்தானிய பாராளுமன்றம் இன்று வாக்கெடுப்பு மூலம் கொண்ட தீர்மானம் பிரதமரின் no-deal வெளியேற்ற முறையை தடை […]

NATO அங்க துருக்கிக்கு ரஷ்ய யுத்த விமானங்கள்?

NATO அணியின் முக்கியதொரு அங்க நாடான துருக்கி NATO அணியின் முதல் எதிரியான ரஷ்யா தயாரிக்கும் SU-35 மற்றும் SU-57 யுத்த விமானங்களை கொள்வனவு செய்யக்கூடும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு துருக்கி ரஷ்ய யுத்த விமானங்களை கொள்வனவு செய்யின், துருக்கிக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் முரண்பாடுகள் மேலும் உக்கிரம் அடையும். . 2017 ஆம் ஆண்டு துருக்கி ரஷ்யாவிடம் இருந்து புதிய வகை S-400 என்ற விமான எதிர்ப்பு ஏவுகணைகளை கொள்வனவு செய்ய உடன்பட்டு இருந்தது. அந்த கொள்வனவால் […]

சவுதியின் விமான தாக்குதல்களுக்கு யேமெனில் 100 பேர் பலி

சவுதி தலைமையில் யேமனில் உள்ள Dhamar என்ற இடத்தில் யுத்த விமானங்கள் இன்று ஞாயிறு செய்துகொண்ட தாக்குதல்களுக்கு குறைந்தது 100 பேர் பலியாகி உள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது. அத்துடன் குறைந்தது 40 பேர் காயமடைந்தும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. . யேமெனில் இயங்கும் ஈரானின் ஆதரவு கொண்ட குழுக்ககளின் கட்டுப்பாடில் உள்ள பகுதியிலேயே இந்த தாக்குதல்கள் இடம்பெறுள்ளன. சிதைந்து போயுள்ள யேமெனின் முன்னாள் அரசுக்கு சவுதி ஆதரவு செலுத்துகிறது. . தாம் எதிரணி ஏவுகணைகளை வைத்திருக்கும் […]

ரெக்ஸஸில் மீண்டும் சூடு, 5 பேர் பலி

அமெரிக்காவின் ரெக்ஸஸ் (Texas) மாநிலத்தில் உள்ள Odessa என்ற சிறு நகரில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற கண்மூடித்தனமான தூப்பாக்கி சூடுகளுக்கு குறைந்தது 5 பேர் பலியாகியும், 21 பேர் காயமடைந்தும் உள்ளனர். . ரெக்ஸசின் Dallas நகருக்கும், மேற்கே உள்ள El Paso நகருக்கும் இடையில் உள்ள Odessa என்ற சிறு நகரிலேயே இன்று இந்த கண்மூடித்தனமான சூட்டு சம்பவம் நிகழ்துள்ளது. வியாபார நிலையங்களை நோக்கியே சூடுகள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. . பலியானோருள் துப்பாக்கி சூட்டை நிகழ்த்தியவரும் […]

நாடு கடத்தலிருந்து தப்பிய இலங்கை அகதிகள்

அஸ்ரேலியாவில் இருந்து Australian Border Protection திணைக்களத்தால் இரவோடு இரவாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட இருந்த இலங்கை தமிழ் குடும்பம் தற்காலிகமாக கடத்தலில் இருந்து தப்பியுள்ளது. . இந்த நாடு கடத்தல் தடுப்புக்கு அப்பகுதி Green கட்சி பாராளுமன்ற உறுப்பினர் Jenny Leong கடுமையாக உதவியுள்ளார். . அகதி நிலை நிராகரிக்கப்பட்ட இந்த குடும்பத்தை நேற்று இரவு Australian Border Protection வாடகைக்கு அமர்த்திய Skytraders என்ற விமான சேவை மூலம் இலங்கைக்கு கடத்த இருந்தது. இரவு […]

1 10 11 12 13 14 33