கர்நாடகாவில் கலவரம், காவேரி காரணம்

கடந்த சில நாட்களாக 100க்கும் அதிகமான தமிநாட்டுக்கு சொந்தமான பஸ்கள், லாரிகள் கர்நாடகாவில், குறிப்பாக பெங்களூரில், தீ மூட்டப்பட்டு உள்ளன. தொடர்ந்த கலவரங்களின் போது ஒரு கலகக்காரர் பொலிஸாரின் சூட்டுக்கு பலியாகியும் உள்ளார். . அண்மையில் இந்தியாவின் Supreme Court கர்நாடகா மாநிலம் தமிழ்நாட்டுக்கு 15,000 சதுர அடி நீரை ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நாளும் காவேரி வழியே விடவேண்டும் என்று தீர்ப்பு கூறி இருந்தது. இதனால் கோபம் கொண்ட கர்நாடகா ஆர்ப்பாட்டக்காரர் தீ மூட்டும் செயலில் […]

மூடியுள்ள மில்லியன் டொலர் வீடுகள்

அமெரிக்கா, கனடா போன்ற நாட்டு பெருநகர்களில் மூடப்பட்டு இருக்கும் மில்லியன் டொலர் பெறுமதியான வீடுகள் தொடர்பில் கனடாவின் The Goble and Mail பத்திரிகை கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. . டொரோண்டோ (Toronto), வான்கூவர் (Vancouver) போன்ற பெரு நகர்களில் வாழும் மக்கள் கொள்வனவு செய்ய முடியாத அளவில் வீட்டு விலைகள் உயர்த்திருந்தாலும், இந்நகர்களில் பெருமளவு வீடுகள், குறிப்பாக Condo எனப்படும் உயர்மாடி வீடுகள் உரிமையாளர்களால் மூடி வைக்கப்பட்டு உள்ளனவாம். இவ்வாறு மூடியுள்ள வீடுகளின் உரிமையாளர் பலரும் […]

கொழும்பு துறைமுகம் வருகிறது MSC Maya

கொழும்பு துறைமுகத்துக்கு மிக பெரியதோர் வர்த்தக கப்பலான MSC Maya வரவுள்ளது. பனாமாவில் பதிவு செய்யப்பட்ட Maya 20 அடி நீளமான 19,224 கொள்கலன்களை காவக்கூடியது. 2015 ஆம் ஆண்டில் தென்கொரியாவில் கட்டப்பட்ட இந்த கப்பல் சுமார் 395 மீட்டர் நீளமானது. இதன் இயந்திரங்கள் 83,780 hp (குதிரைவலு) வலுவை வழங்கக்கூடியன. இந்த மாதம் 16 ஆம் திகதி இது கொழும்பை வந்தடையும். . தற்போது நான்கு கொள்கலன் கப்பல்கள் உலகின் மிகப்பெரிய கப்பல்கள் என்ற இடத்தில் […]

மிஹின் விமானசேவை இவ்வருடத்தில் நிறுத்தம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆதரவில், 2007 ஆம் ஆண்டில், சேவையை ஆரம்பித்திருந்த மிஹின் லங்கா விமான சேவை இந்த வருட இறுதிக்குள் சேவையை முற்றாக நிறுத்தும் என்று அரசு அறிவித்துள்ளது. இதன் சேவைகளை ஸ்ரீலங்கன் விமானசேவை தொடரும் என்று ஸ்ரீலங்கனின் அதிகாரி அஜித் டயஸ் கூறியுள்ளார். . மிஹின் விமானசேவை ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் ஊழல், முறைகேடு போன்ற பல காரணங்களால் நட்டத்தில் இயங்கி வந்திருந்தது. மிஹின் சேவை இலங்கை அமைச்சரவையின் அங்கீகாரம் இன்றியே ஆரம்பிக்கப்பட்டிருந்தது. […]

இந்திய-பிரான்ஸ் நீர்மூழ்கி தரவுகள் அம்பலத்தில்

பிரான்சின் DCNS என்ற நிறுவனத்தின் உதவியுடன் இந்தியா ஆறு Scorpene வகை நீர்மூழ்கிகளை தயாரிக்க இணங்கியது. இந்திய தன்னிடம் உள்ள சோவியத் காலத்து நீர்மூழ்கிகளுக்கு பதிலாக இந்த புதிய Scorpene வகை நீர்மூழ்கிகளை கடல் படைக்கு வழங்கவிருந்தது. அந்த ஆறில் ஒரு நீர்மூழ்கி சில மாதங்களின் முன் வெள்ளோதிடத்திலும் ஈடுபட்டு உள்ளது. . ஆனால் அந்த நீர்மூழ்கிகளின் முக்கிய தரவுகள் அண்மையில் முன்னாள் ஊழியர் ஒருவரால் பகிரங்கப்படுத்தப்பட்டு உள்ளது. அந்த உண்மைகள் தற்போது எல்லோர் கைகளிலும் உள்ளதால், […]

ஆஸ்திரேலியா நிறுவனங்கள் இலங்கையில் ஊழல்

இரண்டு ஆஸ்திரேலியா நிறுவனங்கள் இலங்கை, கொங்கோ (Congo) ஆகிய நாடுகளில் அரசில்யவாதிகளுக்கு இலஞ்சம் வழங்கி வர்த்தக நன்மைகள் பெற்றுள்ளதாக The Sydney Morning Herald செய்தி வெளியிட்டுள்ளது. . Snowy Mountains Engineering Company என்ற நிறுவனம் இப்போது Australian Federal Police (AFP) விசாரணையில் உள்ளதாம். இந்த நிறுவனம் 2011 ஆம் ஆண்டில், நன்கொடை பணம் மூலம், $2.3 மில்லியன் செலவில் செய்யப்பட்ட அபிவிருத்தி வேலைகளை செய்யும் பொறுப்பை பெற்றுக்கொள்ள இலங்கை அரசியல்வாதிகளுக்கு இலஞ்சம் வழங்கியதாக […]

ஒலிம்பிக் 2016 நிறைவு

பிரேசிலின் (Brazil) தலைநகர் ரியோவில் (Rio) நடைபெற்றுவந்த 2016 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் இன்று ஞாயிறு நிறைவு பெற்றது. பெருளாதார மந்த நிலைக்குள்ளும், உள்நாட்டு அரசியல் குழப்பங்களுக்கு மத்தியிலும் பிரேசில் இந்த ஒலிம்பிக் போட்டியை செய்து முடித்துள்ளது. . இம்முறையும் அமெரிக்காவே 46 தங்க பதக்கங்கள் உட்பட மொத்தம் 121 பதக்கங்களை பெற்று முதலாவது இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள சீனா 70 பதக்கங்களை, மூன்றாம் இடத்தில் உள்ள பிரித்தானியா 67 பதக்கங்களையும் வென்றுள்ளன. . […]

இந்திய தயாரிப்பில் F-16 யுத்த விமானம்?

அமெரிக்கா தற்போது பயன்படுத்திவரும் யுத்த விமானங்களில் முக்கிய விமானம் Falcon என்று அழைக்கபப்டும் F-16 யுத்த விமானங்கள். 1976 ஆம் ஆண்டுமுதல் சுமார் 4,500 F-16 யுத்த விமானங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அதில் பெரும்பாலானவை அமெரிக்க படைகளால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அமெரிக்கா மட்டுமன்றி பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், துருக்கி, பாகிஸ்தான் போன்ற பல மேற்கு சார்பு நாடுகளும் இந்த யுத்த விமானத்தை பயன்படுத்துகின்றன. . USSR ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த போது அமெரிக்காவின் அரவணைப்பில் இருந்த பாகிஸ்தான் இந்த வகை […]

முதல் Quantum செய்மதியை ஏவியது சீனா

Quantum தொழில்நுட்பம் முறையிலான தொலைத்தொடர்பை ஏற்படுத்தக்கூடிய செய்மதி ஒன்றை சீனா செய்வாக்கிழமை அதிகாலை ஏவி உள்ளது. இதுவே இவ்வகை செய்மதிகளில் முதலாவது ஆகும். கனடா, அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் ஆகியன இவ்வகை தொழில்நுட்பத்தில் வேகமாக செயல்பட்டாலும், சீனா முந்தியுள்ளது. . Quantum தொழில்நுட்பம் subatomic particles களின் குணாதிசயங்களை பயன்படுத்தி செயல்படுவது ஆகும். Quantum physics ஆய்வுகளுக்கு சீனா பல பில்லியன் டொலர்கள் செலவை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேவேளை அமெரிக்கா $200 மில்லியனை மட்டுமே […]

இந்திய அமைச்சருக்கு ஒலிம்பிக்கில் எச்சரிக்கை

இந்திய மத்திய அரசின் விளையாட்டு துறை அமைச்சர் Vijay Goel க்கு பிரேசிலில் ஒலிம்பிக் போட்டியை நடாத்தும் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. . இந்த அமைச்சர் பெரும்தொகையான தனது பரிவாரங்களுடன் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் நுழைய முற்படுவதாகவும், காவலாளிகள் அவ்வாறு உரிய பத்திரம் இன்றி செல்வதை தடுக்க முனையும்போது அடாவடி செயல்களில் இறங்குவதாகவும் குற்றம் சாட்டப்படுள்ளது. இவருக்கு சில பகுதிகளுக்கு செல்ல அனுமதி இருந்தாலும், இவரின் பரிவாரங்களை எந்தவித அனுமதியும் இல்லை. . புதன் கிழமை இவரின் […]