Pompeo உட்பட ரம்ப் ஆட்சி அதிகாரிகள் 28 பேர் மீது சீனா தடை

ரம்ப் ஆட்சியில் வெளியுறவு செயலாளராக ஆக கடமையாற்றிய Mike Pompeo உட்பட மொத்தம் 28 பேர் மீது சீன தடை விதித்து உள்ளது. இந்த தடை காரணமாக 28 பேரும் சீனா, ஹாங் காங், மக்கா (Macao) ஆகிய இடங்களுக்கு பயணிக்க முடியாது. அத்துடன் இவர்களுடன் தொடர்பு கொண்ட வர்த்தகங்கள் சீனா, ஹாங் காங், மக்கா ஆகிய இடங்களில் செயற்படவும் முடியாது. ரம்பின் Health and Human Services செயலாளர் Alex Azar, வர்த்தக ஆலோசகர் Peter […]

வாடகை தாய்மூல குழந்தைகளை கைவிட்ட சீன நடிகை

வாடகை தாய்மூல குழந்தைகளை கைவிட்ட சீன நடிகை

Zheng Shuang என்ற பிரபல சீன நடிகை (வயது 29) தனக்கும், Zhang Heng (வயது 30) என்ற தயாரிப்பாளருக்கும் அமெரிக்காவில் இரண்டு வாடகை தாய்மார்கள் மூலம் (surrogacy) பெற்ற இரண்டு குழந்தைகளையும் கைவிட்டுள்ளார். இந்த நடிகையின் செயல் சீனாவில் அவர்மீது எதிர்ப்பை உருவாகியுள்ளது திருமணமாகாதா நடிகை Zheng தயாரிப்பாளர் Zhang உடனான உறவை முறித்துக்கொண்டதே குழந்தைகளை கைவிட காரணம் என்று கூறப்படுகிறது. குழந்தைகள் தற்போது அமெரிக்காவில் தங்கியுள்ள தந்தை Zhang உடன் வாழ்கின்றன. ஆண் குழந்தை […]

பைடென் அமெரிக்க சனாதிபதியானார்

பைடென் அமெரிக்க சனாதிபதியானார்

ஒபாமா காலத்து உதவி சனாதிபதி ஜோ பைடென் (Joe Biden) இன்று புதன்கிழமை (2021/01/20) அமெரிக்காவின் 46 ஆவது சனாதிபதியாக பதவி ஏற்றுள்ளார். உள்ளூர் நேரப்படி மதியம் 12:00 மணியளவில் இந்த பதவியேற்பு நிகழ்ந்தது. பதவி ஏற்பு நிகழ்வில் ரம்பின் உதவி சனாதிபதி Mike Pence, முன்னாள் ஜனாதிபதிகள் ஒபாமா, கிளின்டன், புஷ் ஆகியோரும் பங்கு கொண்டிருந்தனர். வரலாற்றில் முதல் தடவையாக வெளியேறும் சனாதிபதி ரம்ப் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. கரோனா காரணமாக மக்கள் பங்கொள்ள முடியாத நிலையில் […]

மன்னரை அவமதித்த 63 வயது பெண்ணுக்கு 43 ஆண்டு சிறை

மன்னரை அவமதித்த 63 வயது பெண்ணுக்கு 43 ஆண்டு சிறை

தாய்லாந்தில் மன்னரை அவமதித்த Anchan என்ற 63 வயது பெண்ணுக்கு அந்நாட்டு இரகசிய நீதிமன்றம் 43 ஆண்டு சிறை தண்டனையை விதித்துள்ளது. முதலில் 87 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டாலும் பின்னரே அது 43 ஆண்டு ஆக குறைக்கப்பட்டது. மேற்படி பெண் செய்த குற்றம் இன்னொருவர் இணையத்தில் பதித்த மன்னர் Vajiralongkorn தொடர்பான ஒலி பதிவு ஒன்றை social media மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டதே (share). மன்னருக்கு எதிராக வெளிநாடுகளில் உள்ள தாய்லாந்து மக்கள் செய்யும் […]

சிக்காகோ விமான நிலையத்தில் 3 மாதங்கள் வாழ்ந்த பயணி

சிக்காகோ விமான நிலையத்தில் 3 மாதங்கள் வாழ்ந்த பயணி

Aditya Singh என்ற 36 வயது அமெரிக்க Los Angels வாசி சிக்காகோ நகரில் உள்ள O’Hare விமான நிலையத்தில் கடந்த 3 மாதங்கள் வாழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு சோதனைகளின் பின் பயணிக்க உள்ள பயணிகளை மட்டுமே கொண்டிருக்கும் பகுதியிலேயே இவர் வாழ்ந்தமை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 19ம் திகதி Los Angels நகரில் இருந்து விமானம் மூலம் O’Hare வந்த இவர் ஜனவரி 16ம் திகதி வெள்ளிக்கிழமை வரை பாதுகாப்பு அதிகாரிகளின் கண்களில் […]

வியாழன் முதல் உல்லாச பயணிகள், கடுமையான நிபந்தனைகள்

வியாழன் முதல் உல்லாச பயணிகள், கடுமையான நிபந்தனைகள்

வியாழக்கிழமை (2021/01/21) முதல் இலங்கை உல்லாச பயணிகளை இலங்கைக்குள் அனுமதிக்க உள்ளது. ஆனால் இலங்கை வரும் உல்லாச பயணிகள் கடுமையான நிபந்தனைகளை கடைப்பிடித்தல் அவசியம். இலங்கை வரும் உல்லாச பயணிகள் (tourist விசா) அரசினால் அனுமதிக்கப்பட்ட 55 விடுதிகளில் ஒன்றிலேயே தங்கியிருந்தால் அவசியம். இக்காலத்தில் இந்த விடுதிகளுக்கு இலங்கையர் அனுமதிக்கப்பட்டார். பயணிகள் இலங்கை வருவதற்கு ஆகக்கூடியது 4 நாட்களுக்குள் செய்துகொள்ளப்பட்ட negative Covid-19 PCR பரிசோதனை முடிவுகளை கொண்டிருத்தல் அவசியம். ஆகக்கூடியது 7 நாட்கள் வரை இலங்கையில் […]

இடைநிறுத்தப்பட்ட நாசாவின் மிகப்பெரிய ஏவு இயந்திர ஒத்திகை

இடைநிறுத்தப்பட்ட நாசாவின் மிகப்பெரிய ஏவு இயந்திர ஒத்திகை

இன்று சனிக்கிழமை நாசா (NASA) தனது மிகப்புதிய RS-25 என்ற ஏவு இயந்திரத்தை ஒத்திகை செய்துள்ளது. மொத்தம் 8 நிமிடங்கள் இந்த பரிசோதனை இடம்பெற இருந்தாலும், 1 நிமிடம் 15 செக்கன்களில் பரிசோதனை இடைநிறுத்தப்படுள்ளது. பாதகமான தரவுகளே காரணம் என்றாலும், விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. வரும் காலங்களில் நாசா இந்த இயந்திரத்தை பயன்படுத்தியே அண்டவெளி பயணங்களை மேற்கொள்ளும். அண்டவெளி பயணங்களுக்கான ஏவுகலம் இந்த RS-25 என்ற பெயர்கொண்ட இயந்திரங்களில் நான்கை கொண்டிருக்கும். இந்த 4 இயந்திரங்களும் மொத்தம் […]

இந்தோனேசியாவில் நிலநடுக்கம், 42 பேர் பலி

இந்தோனேசியாவில் நிலநடுக்கம், 42 பேர் பலி

இந்தோனேசியாவின் சுலவெசி (Sulawesi) தீவில் வெள்ளிக்கிழமை சாமத்தில் இடம்பெற்ற 6.2 அளவிலான நிலநடுக்கத்துக்கு தற்போதைய கணிப்புப்படி குறைந்தது 42 பேர் பலியாகியும், சுமார் 650 பேர் காயமடைந்து உள்ளனர். பலர் தற்போதும் இடிபாடுகளுள் முடங்கி உள்ளனர்.ஒரு இடத்தில் உள்ள 8 கட்டடங்களுள் மட்டும் சுமார் 20 பேர் அகப்பட்டு உள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் கனரக வாகனங்களின் உதவியுடன் இடம்பெறுகின்றன. நிலநடுக்கம் சில இடங்களில் பாரிய மண் சரிவுகளையும் ஏற்படுத்தி உள்ளது. அந்த சரிவுகளுக்கும் பலர் பலியாகி […]

பாகிஸ்தான்-பங்களாதேச உறவை சீனா வளர்க்கிறது?

பாகிஸ்தான்-பங்களாதேச உறவை சீனா வளர்க்கிறது?

பாகிஸ்தானுக்கும், பங்களாதேசத்துக்கும் இடையிலான உறவை சீனா வளர்கின்றது என்று இந்தியா அச்சம் கொண்டுள்ளது. கடந்த கிழமை பாகிஸ்தான் பங்களாதேசத்தினருக்கான விசா நிபந்தனையை நீக்கி உள்ளது. அத்துடன் 1971ம் ஆண்டு யுத்தங்களில் இடம்பெற்ற கொலைகளுக்கு பாகிஸ்தான் மன்னிப்பு கேட்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. வலிமை குறைந்திருந்த கிழக்கு பாகிஸ்தான் வலிமை கூடிய மேற்கு பாகிஸ்தானில் இருந்து பிரிந்து பங்களாதேசம் ஆனா காலத்தில் இருந்து இரண்டு நாடுகளுக்கும் இடையில் உறவு குன்றி இருந்தது. இரண்டும் இஸ்லாமிய நாடுகள் என்றாலும் அவர்களுக்கு இடையில் […]

இரண்டாம் தடவையாக சனாதிபதி ரம்ப் impeached

இரண்டாம் தடவையாக சனாதிபதி ரம்ப் impeached

அமெரிக்க காங்கிரசின் ஒரு பாகமான House அவை இன்று புதன்கிழமை சனாதிபதி மீது impeach என்ற பதவி விலக்கல் தீர்மானத்தை எடுத்துள்ளது. Democratic கட்சியின் பெரும்பான்மையை கொண்ட House அவை ரம்பை impeach செய்வது இது இரண்டாம் தடவை. அதனால் ரம்ப் மட்டுமே இரண்டு முறைகள் impeach செய்யப்பட்ட சனாதிபதி ஆகிறார். Impeachment தீர்மானத்துக்கு ஆதரவாக 232 வாக்குகளும் (அனைத்து Democratic வாக்குகள் + 10 Republican வாக்குகள்), எதிராக 197 வாக்குகளும் (அனைத்தும் Republican வாக்குகள்) […]