அங்கத்துவத்தில் ADBயை மிஞ்சும் AIIB

1966 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஊக்குவிப்பில், ஜப்பானை தலைமைப்படுத்தி உருவாக்கப்பட்டது ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB). தற்போது அதில் 67 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஆனால் ADBயின் அங்கத்துவ நாடுகளின் எண்ணிக்கையை மிஞ்சவுள்ளது சீனாவால் உருவாக்கப்பட்ட AIIB (Asian Infrastructure Investment Bank). AIIBயில் தற்போது 57 அங்கத்துவ நாடுகள் உள்ளன. ஆனால் அந்த எண்ணிகள் மேலும் 20 ஆல் அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகிறது. . புதிதாக வேறு நாடுகள் AIIBயில் இணைவதற்கு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்ட கால […]

சார்க் மாநாடு பின்போடப்பட்டுள்ளது

அடுத்த மாதம் 9ம், 10ம் திகதிகளில் பாகிஸ்தானில் இடம்பெறவிருந்த சார்க் மாநாடு காலவரையறை இன்றி பின்போடப்பட்டு உள்ளது. இத்தகவலை பாகிஸ்தான் இன்று வெள்ளி அறிவித்து உள்ளது. . அண்மையில் பாகிஸ்தான் ஆயுத குழு ஒன்று எல்லை கடந்து இந்திய இராணுவ முகாம் ஒன்றை தாக்கியதில் 28 இந்திய இராணுவத்தினர் பலியாகி இருந்தனர். இதனால் விசனம் கொண்ட இந்தியா தான் பாகிஸ்தான் மாநாட்டில் பங்கு கொள்ளப்போவது இல்லை என்று அறிவித்து இருந்தது. . பின்னர் ஆப்கானிஸ்தான், பங்களாதேசம், பூட்டான் […]

பாகிஸ்தானுள் நுழைந்து இந்தியா தாக்குதல்

பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியுள் நுழைந்து, அங்கிருந்த ஆயுத குழு மீது தாம் தாக்குதல் நடாத்தி உள்ளதாக இந்திய இராணுவம் கூறியுள்ளது. கடந்த கிழமை பாகிஸ்தானில் நிலைகொண்டுள்ள ஆயுத குழு ஒன்று இந்தியாவின் கட்டுப்பாடில் உள்ள காஷ்மீர் பகுதியுள் நுழைந்து, இந்திய இராணுவ முகாம் ஒன்றை (Uri) தாக்கி இருந்தது. அதில் 18 இந்திய இராணுவத்தினர் பலியாகி இருந்தனர். . இந்தியாவின் தாக்குதலுக்கு உண்மையில் எவ்வளவு எதிரிகள் பலியாகினர் என்பதை அறிய முடியாவிடினும், இந்தியா தாம் […]

ரஷ்யன் எண்ணெய்யில் இந்தியா $3.2 பில்லியன் முதலீடு

Oil India Limited, Indian Oil Corporation Limited, Bharat Petro Resources ஆகிய இந்திய நிறுவனங்கள் ரஷ்யாவின் இரண்டு மசகு எண்ணெய் அகழ்வுகளில் சுமார் $3.2 முதலிட இந்திய அரசு இன்று அனுமதி வழங்கி உள்ளது. . அதன்படி ரஷ்யாவின் அரச நிறுவனமான Vankor oil fieldலில் இந்திய நிறுவனங்கள் $2.02 பில்லியனை முதலீடு செய்யும். இம்முதலீடு மூலம் இந்திய நிறுவனங்கள் Vankor உரிமையில் 23.9% பெரும். இங்கிருந்து இந்தியா 6.56 மில்லியன் மெட்ரிக் எண்ணெயை பெறும். […]

சார்க் மாநாட்டில் இந்தியா பங்குகொள்ளா

அடுத்த மாதம் 9ஆம், 10ஆம் திகதிகளில், பாகிஸ்தானின் இஸ்லாமபாத் நகரில் இடம்பெறவுள்ள சார்க் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளாது என்று இந்திய வெளியுறவு அமைச்சு இன்று அறிவித்துள்ளது. அண்மையில் பாகிஸ்தானில் இருந்து வந்த ஆயுத குழு ஒன்று இந்திய படை முகாம் ஒன்றை தாக்கி 18 படையினரை கொலை செய்ததன் காரணமாகவே இந்தியா இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. . இடம்பெறவுள்ள மாநாடு 19வது சார்க் மாநாடாகும். இந்தியா போல் ஆப்கானிஸ்தான், பங்களாதேசம், மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளும் பங்கு […]

பிலிப்பீன்ஸ் ஜனாதிபதி சீனா, ரஷ்யா உறவில்?

நீண்ட காலமாக பிலிப்பீன்ஸ் அமெரிக்கா ஆதரவு நாடாகவே, குறிப்பாக இராணுவ கொள்கைகளில், இருந்து வந்துள்ளது. ஆனால் தற்போதைய சர்ச்சைக்குரிய ஜனாதிபதி Rodrigo Duterte தான் சீனாவுடனும், ரஷ்யாவுடனும் பொருளாதார உறவுகளை புதுப்பிக்க விரும்புவதாக கூறியுள்ளார். கடந்த கிழமை தான் விரைவில் சீனா செல்லவுள்ளதாகவும் இவர் தெரிவித்து உள்ளார். . கடந்த ஜூலை மாதத்தில் ஆட்சிக்கு வந்த இவரால் அமெரிக்கா அச்சம் கொண்டுள்ளது. இவர் ஒபாமாவை தகாத சொற்களால் வசைமாரியும் செய்திருந்தார். இவரின் போதை தொடர்பான கொள்கைகளால் விஷம் […]

கொலம்பியா PARC சமாதானத்தில்

கடந்த சுமார் 50 வருடங்களாக கொலம்பியா (Colombia) அரசுடன் யுத்தத்தில் ஈடுபட்டு வந்திருந்த இடதுசாரிகளான PARC (Revolutionary Armed Forces of Colombia) இயக்கம் முழுமையான சமாதானத்துக்கு இணங்கியுள்ளது. அண்மையில் அரசு வழங்கிய தீர்வை ஏற்பதா அல்லது மறுப்பதா என்று PARC தம்முள் ஒரு கருத்து வாக்கெடுப்பை நடாத்தி இருந்தது. அப்போது பெருமளவு FARC உறுப்பினர்கள் சமாதானத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். . இது தொடர்பில் கருத்து தெரிவித்த FARC தலைவர் சமாதானம்தான் மிக அழகான வெற்றி […]

500 மில்லியன் Yahoo email திருட்டு

இலவச Email சேவை நிறுவனமான Yahoo தம்மிடம் email கணக்கு வைத்திருந்த குறைந்தது 500 மில்லியன் பாவனையாளர்களின் தரவுகள் திருடப்பட்டு உள்ளதாக இன்று கூறியுள்ளது. இந்த திருட்டு 2014 ஆம் ஆண்டில் இடம்பெற்று உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது. திருட்டு ஆரம்பத்தில் அடையாளம் காணப்படவில்லை. திருடப்பட்ட தரவுகளுள் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், password, பிறந்த திகதி, security கேள்விகளும் பதில்களும் அடங்கும் என்று கூறப்படுகிறது. . இந்த திருட்டு காரணமாக, Yahoo பாவனையாளர்களை தமது password, security […]

காஷ்மீரில் 17 இந்திய இராணுவம் பலி

சர்ச்சைக்குரிய இந்திய மாநிலமான காஷ்மீரில் தாக்குதல் ஒன்றுக்கு 17 இந்திய இராணுவம் பலியாகியுள்ளதாக இந்தியா கூறியுள்ளது. ஸ்ரீநகருக்கு மேற்கே, இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அண்மையில், உள்ள Uri என்ற இடத்தில் உள்ள இந்திய படை முகாம் மீதே தாக்குதல் இடம்பெற்று உள்ளது. இந்தியாவின் கூற்றுப்படி பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய ஆயுததாரிகள் இந்த தாக்குதலை நடாத்தி உள்ளனர். . இந்திய ஜெனரல் Ranbir Singh கூற்றுப்படி நான்கு அந்நியநாட்டு பயங்கரவாதிகள், பாகிஸ்தான் அடையாளங்கள் கொண்ட ஆயுதங்கள் பயன்படுத்தி இந்த தாக்குதலை […]

அமெரிக்க தாக்குதலுக்கு 80 சிரியா இராணுவம் பலி

சிரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள Deir el-Zour விமான நிலையத்துக்கு அண்மையில் நிலை கொண்டுள்ள சிரியன் இராணுவம் மீது அமெரிக்க யுத்த விமானங்கள் நடாத்திய தாக்குதலுக்கு 80 வரையானோர் பலியாகி உள்ளனர். இது தவறுதலாக இடம்பெற்ற தாக்குதல் என்கிறது அமெரிக்கா. இவ்விடயத்தால் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே மீண்டு முறுகல் நிலை தோன்றியுள்ளது. ‘ ரஷ்யா இவ்விடயம் காரணமாக உரையாட ஐ.நா. பாதுகாப்பு சபையை உடனடியாக அழைத்துள்ளது. இதனால் விசனம் கொண்ட அமெரிக்காவின் சமந்தா பவர் ரஷ்யாவை கடுமையாக […]