நான்கு விமானங்கள் பாக்கித்தானுக்கு குத்தகையில்

இலங்கை விமான சேவையான ஸ்ரீலங்கன் தனது புதிய Airbus A330 விமானங்களில் நான்கை பாகிஸ்தான் விமான சேவைக்கு (PIA) குத்தகை அடிப்படையில் வழங்கவுள்ளது. உடனடியா ஒன்றும், பின்னர் மூன்றுமாக மொத்தத்தம் PIA யினால் குத்தககைக்கு எடுக்கப்டும். 2012 ஆம் ஆண்டில் கொள்வனவு செய்யப்பட்ட 7 இவ்வகை விமானங்களில் நான்கே இவ்வாறு குத்தகைக்கு விடப்படவுள்ளது. . ஸ்ரீலங்கன் விமான சேவை தபோது சுமார் $3.25 பில்லியன் கடனில் உள்ளது. குத்தகைக்கு விடப்படும் விமானங்கள் ஒவ்வொன்றும் மாதம் ஒன்றுக்கு சுமார் […]

சிரியாவில் அமெரிக்க குண்டுக்கு 100 வரை பலி

சிரியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை அமெரிக்க வான்படை வீசிய குண்டு ஒன்றுக்கு சுமார் 100 பொதுமக்கள் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. வேறு சிலர் பலியானோர் தொகை 200 க்கும் அதிகம் என்றுள்ளனர். சிரியாவின் Manbij என்ற நகருக்கு சுமார் 15 km வடக்கே இந்த குண்டு வீசப்பட்டு உள்ளது. . IS என்ற குழுவுக்கு பயந்து ஓடிய பொதுமக்கள் மீதே இந்த குண்டு வீசப்பட்டு உள்ளது. தப்பி ஓடிய பொதுமக்களை IS என்று தவறாக கருத்தியதே இதற்கு […]

ரஜனி படத்துக்கு வெள்ளி விடுதலை

இந்தியாவின் தென் பகுதியில் உள்ள பல நிறுவனங்கள் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை விடுமுறை செய்கின்றன. ரஜனியின் ‘கபாலி’ திரைப்படம் அன்றைய தினம் இந்தியாவில் வெளியிடப்படுவதே இதற்கு காரணம். இப்படம் சுமார் 12,000 திரைகளில் அன்றைய தினம் வெளியிடப்படவுள்ளது. . பணியாளர் பெருமளவில் சுகயீனம் என்று கூறி பணிக்கு வாராது விடுவார்கள் என்றும், தமது தொலைபேசிகளை துண்டித்து விடுவார்கள் என்றும் தாம் கருதுவதாக இந்த நிறுவனங்கள் கூறியுள்ளனவாம். அதனாலேயே தாம் முன்கூட்டியே விடுமுறை அறிவித்துள்ளதாக கூறியுள்ளன. . Air […]

தாய்வானில் பஸ் விபத்து, 26 பலி

தாய்வானில் உல்லாசப்பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ் ஒன்று தீ பற்றிக்கொண்டதால் 24 பயணிகளும், சாரதியும், உல்லாச பயணிகளின் வழிகாட்டியும் பலியாகி உள்ளனர். இந்த 24 பயணிகளும் சீனாவின் Liaoning மாநிலத்தவர்கள். இவர்கள் தமது உல்லாச பயணம் முடிந்து சீனாவுக்கு திரும்புவதகாக விமான நிலையம் செல்கையிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. . சாரதியும், வழிநடத்துபவரும் தாய்வானை பிறப்பிடமாக கொண்டவர்கள். . விபத்து நடந்த இடத்து தீ அணைக்கும் படை அதிகாரி “பஸ்ஸில் அகப்பட்டவர்கள் தப்பிக்க போதிய நேரம் இருந்திருக்கவில்லை” என்றுள்ளார். […]

அமெரிக்காவில் மேலும் 3 போலீசார் கொலை

அமெரிக்காவின் லூசியானா (Louisiana) மாநிலத்து Baton Rough நகரில் மீண்டும் பல போலீசார் மீது துப்பாக்கி தாக்குதல் இடம்பெற்று உள்ளது. இன்று ஞாயிரு காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 3 போலீசார் மரணம் அடைந்ததுடன், 3 பேர் காயம் அடைந்தும் உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. இந்த கொலை போலீஸ் தலைமையகத்துக்கு அண்மையிலேயே இடம்பெற்று உள்ளது. . பொலிஸாருக்கு ஒரு பொய் தகவல் அனுப்பி, போலீசார் அவ்விடத்துக்கு உதவிக்கு வந்தபோதே இந்த தாக்குதல் இடப்பெற்று உள்ளதாக கூறப்படுகிறது. . […]

துருக்கி இராணுவ ஆட்சி கவிழ்ப்பு தோல்வியில், 265 பலி

துருக்கி இராணுவத்தின் ஒரு பகுதியால் செய்யப்பட்ட ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. அந்நாட்டு ஜனாதிபதி Recep Tayyip Erdogan நாட்டின் தென் பகுதியில் விடுமுறையை செலவிடுகையில் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கை ஆரம்பமானது. விடயத்தை அறிந்த ஜனாதிபதி cell phone video மூலம் தனது ஆதரவாளர்களை வீதியில் இறங்கி போராட அழைத்தார். அதன்படி பல்லாயிரம் மக்கள் வீதியில் இறங்கினர். . குறிப்பாக இஸ்தான்புல் நகரில் மக்கள் கை உடனடியாக மேலோங்கியது. ஜனாதிபதி இஸ்தான்புல் நகரை சார்ந்தவரே. ஆனால் […]

துருக்கியில் இராணுவ ஆட்சி?

. இன்று புதன் இரவு துருக்கியில் பதற்ற நிலை தோன்றியுள்ளது. அங்கிருந்து வரும் செய்திகள் அங்கு இராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளதோ என்று சந்தேகப்பட வைத்துள்ளன. துருக்கி இராணுவம் வீதிகளில், குறிப்பாக இஸ்தான்புல், மற்றும் அங்கரா ஆகிய நாகர் வீதிகளில் குவிக்கப்பட்டு உள்ளன. . ஆனால் அந்நாட்டு பிரதமர் தமது அரசே பதவியில் உள்ளதாக கூறியுள்ளார். சில இராணுவ குழுக்கள் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட முனைந்தாலும், நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டுவர “security forces had taken necessary […]

பிரான்ஸில் கூட்டத்துள் மோதிய வாகனம், 73 வரை பலி

பிரான்ஸின் தேசிய தினமான Bastille Day நிகழ்வு ஒன்றுள் வேகமாக சென்ற வாகனம் ஒன்று மோதியதில் சுமார் 73 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 100 இக்கும் அதிகமானோர் காயமடைந்து உள்ளனர். இன்று 14 ஆம் திகதி பிரான்ஸின் தென் பகுதியில் உள்ள Nice என்ற இடத்திலேயே இந்த தாக்குதல் இடம்பெற்று உள்ளது. . அந்நாடு தொலைக்காட்சி சேவையான BFM TV தெரிவித்த கருத்துப்படி வெள்ளை நிற வாகனம் ஒன்று தேசிய தின நிகழ்வில் கலந்திருந்த கூட்டத்துள் […]

ஈரானுக்கு எதிராக இஸ்ரவேலும் சவுதியும் கூட்டு

கடந்த சனிக்கிழமை, 9ஆம் திகதி, பிரான்சின் பாரிஸ் நகரில் இடம்பெற்ற ஈரான் எதிர்ப்பு ஊர்வலம் ஒன்று ஈரானின் தலைமைகளுக்கு வெறுப்பை ஊட்டியுள்ளது. ஈரானின் அரச எதிர்ப்பு குழுக்களுடன் சவுதியும், இஸ்ரவேலும் இணைந்து செயல்படுவதே இந்த வெறுப்புக்கு காரணம். . MEK என்று அழைக்கப்படும் Mujahedeen-e-Khalq ஈரான்-ஈராக் யுத்த காலத்தில் சதாமின் ஆதரவுடன் ஈரானுக்கு எதிராக இயங்கிய ஆயுத குழு ஒன்று. இந்த குழுவை அமெரிக்கா உட்பட பல நாடுகள் பயங்கரவாத குழு என்று தடை செய்திருந்தன. ஆனால் […]

கொழும்புக்கு போட்டியாக தமிழ்நாட்டில் துறைமுகம்?

தமிழ்நாட்டின் நாகர்கோவிலுக்கு அண்மையில் உள்ள Colachel  என்ற இடத்தில் பெரிய துறைமுகம் ஒன்றை அமைக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இது இலங்கையின் கொழும்பு துறைமுகத்துக்கு போட்டியாக அமையலாம். ஆனால் கொழும்பில் இருந்து வாய்ப்புக்களை இந்த புதிய துறைமுகம் பறிக்கும் வல்லமை அற்றதாகவே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கொழும்பு வழங்கும் குறைந்த செலவிலான சேவையை தமிழ்நாடு வழங்க முடியாது என்று கூறப்படுகிறது. . இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த இந்திய நாணயங்கள் 27,000 கோடி வரை தேவைப்படும் என்றும் கூறப்படுகிறது. […]