சவுதிக்கு தீவுகளை வழங்கிய எகிப்தின் சிசி

அண்மையில் சவுதியின் தலைவர் King Salman எகிப்து சென்றபோது அந்த இரண்டு நாடுகளுக்கும் இடையில், Tiran நீரிணைக்கு மேலாக, பாலம் ஒன்று அமைக்கும் திட்டம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. உண்மையில் இந்த அறிவிப்புக்கு பின்னால் பல இரகசியங்கள் இருந்தமை இப்போது தெரியவந்துள்ளது. . சவுதிக்கும் எகிப்துக்கும் இடையில், Tiran நீரிணையும் செங்கடலும் சந்திக்கும் பகுதியில் இரண்டு குடியிருப்புகள் அற்ற தீவுகள் உள்ளன. இந்த இரண்டு தீவுகளும் 1950 ஆம் ஆண்டு முதல் எகிப்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்துள்ளது. ஆனால் […]

ஒபாமா ஹிரோஷிமா செல்லக்கூடும்

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அடுத்த மாதம் ஜப்பான் செல்கிறார். அங்கு செல்வதன் முக்கிய நோக்கம் G7 கூட்டத்தில் கலந்துகொள்வது என்றாலும், அவர் ஹிரோஷிமாவில் உள்ள அணுக்குண்டு போடப்பட்ட இடத்துக்கும் செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் அவ்விடம் சென்ற அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் John Kerry அதுபற்றி ஒபாமா சிந்திப்பதாக கூறியுள்ளார். அவ்வாறு ஒபாமா குண்டு போடப்பட்ட இடம் செல்லின், இதுவே ஆட்சியில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி அவ்விடம் செல்லும் முதல் நிகழ்வாகும். . அவ்வாறு ஒபாமா அங்கு […]

CIA என்ற ஊளவு நிறுவனமும் பனாமா கணக்கில்

இன்று வெளியான Panama Paper தகவல்களின்படி CIA என்ற அமெரிக்க உளவு நிறுவனமும் பனாமா கணக்குகளை பாவித்து உள்ளது. Mossack Fonseca என்ற நிறுவனத்தின் கணக்குகள் மூலம் CIA தனது கையாட்களுக்கு பணம் வழங்கியுள்ளது. அதில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி றேகன் காலத்து Iran-Contra விடயமும் அடங்கும். . றேகனின் நிர்வாகம், இஸ்ரவேல் மூலம் ஈரானுக்கு ஆயுதங்கள் விற்று அந்த வருமானத்தின் ஒரு பகுதியை நிக்கரகுவா இடதுசாரி எதிர்ப்பு அரசுக்கு வழங்கியிருந்தது. இதை செய்தபோது ஆயுத விற்பனை […]

லிபியாவில் தான் தவறு என்கிறார் ஒபாமா

அமெரிக்காவின் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று ஒபாமாவிடம் நீங்கள் செய்த மிகப்பெரிய தவறு என்ன என்று கேட்டபோது லிபியாவிலேயே தான் பெரிய தவறு செய்துள்ளதாக கூறியுள்ளார். அதாவது லிபியாவின் கடாபியை 2011 ஆம் ஆண்டில் அழித்த தாம் அதற்கு பின்னரான அந்நாட்டின் நிர்வாகத்தை தம் கருத்தில் கொண்டிருக்கவில்லை என்றுள்ளார். . கடாபியின் காலத்தில் ஓரளவு சட்டம் ஒழுங்குடன் இருந்த லிபியா இன்று உடைந்து பலவேறு குழுக்களால் ஆளப்பட்டு வருகிறது. அந்த குழப்பத்தை பயன்படுத்தி IS அங்கு பெருமளவில் வளர்ந்துள்ளது. . […]

வானவேடிக்கைக்கு இந்தியாவில் 100 பேர் பலி

இந்தியாவின் கேரளா மாநிலத்தின் தென் பகுதியில் உள்ள கோலம் (koolam) என்ற நகரில் உள்ள ஆலயம் ஒன்றிலேயே (Puttingal ஆலயம்) இந்த விபத்து இன்று ஞாயிறு இடம்பெறுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக அரச அலுவலகர்கள் வானவேடிக்கைக்கு அனுமதி வழங்க மறுத்து இருந்தனர். ஆனாலும் ஆலயம் பெருந்தொகையான வெடிபொருட்களை ஆலயத்துள் வைத்திருந்துள்ளனர். . ஆலயத்துள் இருந்த வெடிபொருட்கள் தீப்பற்றியபபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. . இந்த விபத்துக்கு மேலும் 200 பேர்வரை காயமடைந்தும் உள்ளனர். .

சவுதி-எகிப்து இடையே 15 km பாலம்?

இன்று எகிப்து சென்றுள்ள சவுதி அரசர் Salman, சவுதிக்கும் எகிப்துக்கும் இடையே, Tiran நீரிணை மேலாக, பாலம் அமைக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளார். இவ்விடத்தில் பல பகுதிகள் ஆழம் குறைந்த கடல் என்றாலும் சுயஸ் கால்வாயினூடு செல்லும் கப்பல்கள் பயன்படுத்தும் பகுதி சுமார் 6 km நீளமும் 290 மீட்டர் ஆழமும் கொண்ட கடல் பகுதியாகும். . இவ்வகை திட்டம் ஒன்று சவுதியால் 2005 ஆம் ஆண்டிலும், முபாரக் காலத்தில், முன்வைக்கப்பட்டு இருந்திருந்தாலும் அது பின்னர் கைவிடப்பட்டு இருந்தது. அப்போது […]

பிரித்தானிய பிரதமருக்கும் பனாமாவில் கணக்கு

Panama Paper என்ற தலைப்பில் அண்மையில் வெளிவந்த சொத்து ஒளிப்பு அம்பலம் ஆக்கல் வலையில் தற்போது பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனும் சிக்கியுள்ளார். பிரதமரும் அவரது மனைவியும் பிரதமரின் தந்தை இயன் கமரூனின் Baltimore Investment Trust என்ற Mossack Fonseca கணக்கு மூலம் பனாமாவில் 30,000 பவுண்ட்ஸ் சொத்தை வைத்திருந்துள்ளனர். . கடந்த செவ்வாய் அன்று பிரதமர் தனது சொத்து எதுவும் Mossack Fonseca மேற்பார்வையில் இருந்திருக்கவில்லை என்று கூறி இருந்தார். பத்திரிகையாளர் கேள்வி ஒன்றுக்கு […]

ஆர்மீனியா, அயபர்யான் மோதல்

சிரியாவில் நடப்பதுபோல் ஆர்மீனியாவுக்கும் அயபர்யானுக்கும் இடையில் ஒரு பினாமி யுத்தம் ஆரம்பித்துள்ளது. Cold War காலத்தில் USSRஇன் கட்டுப்பாடில் இருந்த ஆர்மீனியாவும் அயபர்யானும் USSR  உடைவின் பின் இரண்டு நாடுகள் ஆகின. ஆனால் ஆர்மீனியன் மக்களை பெருமளவில் கொண்ட Nagorno-Karabakh என்ற பகுதி அயபர்யானுள் அடங்கிவிட்டது. ஆர்மீனியாவின் இராணுவ மற்றும் பொருளாதார உதவியுடன் அயபர்யானுள் உள்ள இந்த ஆர்மீனியார் அயபர்யான் இராணுவத்துடன் மோதி வந்துள்ளது. . கடந்த காலங்களில் இந்த மோதல் ஓய்வு அடைந்திருந்தாலும் அண்மைக்காலங்களில் மோதல்கள் […]

சொத்துக்கள் ஒளிப்பால் ஐஸ்லாந்து பிரதமர் ராஜினாமா

கடந்த சில நாட்களாக வெளிவந்துகொண்டிருக்கும் பனாமா நாட்டை மையமாக கொண்ட பினாமி நிறுவனங்கள் விடயம் காரணமாக ஐஸ்லாந்து (Iceland) பிரதமர் பதிவியை ராஜினாமா செய்துள்ளார். Panama Papers என்று அழைக்கப்படும் இந்த விசாரணை ஐஸ்லாந்து பிரதமரும் அவரது மனைவியும் பனாமா நாட்டில் பினாமி நிறுவனங்களை ஆரம்பித்து அதன் மூலம் தமது சொத்துக்களை ஒளித்து வைத்தாக கூறியிருந்தது. அதற்கு Mossack Fonseca என்ற சட்டத்தரணிகள் குழு உதவி செய்துள்ளது. . உண்மை வெளிவந்தபோது ஐஸ்லாந்து பிரதமரை பதவி விலகும்படி […]

சொத்துக்களை ஒளிக்க 214,000 பினாமி நிறுவனங்கள்

The International Consortium of Investigative Journalists (ICIJ) என்ற அமைப்பு, பிரித்தானியாவின் BBC, ஜெர்மனின் Süddeutsche Zeitung பத்திரிக்கை போன்றன இணைந்து நடாத்திய விசாரணை ஒன்றின்படி பனாமா (Panama) நாட்டில் பதிவாகியுள்ள Mossack Fonseca என்ற சட்டத்தரணிகள் நிறுவனம் 214,000 பினாமி நிறுவனங்களை தமது வாடிக்கையாளர் சார்பில் கண்காணித்து உள்ளது. இந்த வாடிக்கையாளர் தமது சொத்துக்களை ஒளித்து வைப்பதற்கே இவ்வாறு பனாமா போன்ற நாடுகளில் பினாமி நிறுவனங்களை வைத்துள்ளனர். இந்த விசாரணை கடந்த 40 வருட […]