அணுக்குண்டுடையோர் இன்றி அதை அழிக்க ஐ.நா. மாநாடு

ஐக்கிய நாடுகள் சபை அவ்வப்போது சம்பந்தப்பட்டோர் இல்லாது அவர்களின் கைவசமுள்ள விடயங்கள் சம்பந்தமாக பெரும் மாநாடுகள் அல்லது பேச்சுவார்த்தைகள் நடாத்துவது உண்டு. அந்த வகையில் ஐ. நா. இன்று திங்கள் முதல் அணுக்குண்டுகள் இல்லாத உலகை உருவாக்க பேச்சுவார்த்தை ஒன்றை நடாத்துகிறது. சுமார் 100 நாடுகள் இதில் பங்கு கொள்கின்றன. ஆனால் அனைத்து அணுகுண்டுகள் கொண்ட நாடுகள் உட்பட, 30க்கும்  மேற்பட்ட நாடுகள் இந்த மாநாட்டில் பங்கு கொள்ளவில்லை. இந்த மாநாட்டு தீர்மானம் சட்டப்படியானதும் அல்ல. . […]

270 இந்தியர்களை வெளியேற்ற அமெரிக்கா முயற்சி

அமெரிக்காவில் தங்கியிருக்கும் சுமார் 270 இந்தியர்களை அமெரிக்கா திருப்பி அனுப்ப முனைகிறது. கடந்த அமெரிக்க அரசுகள் இவ்விடயத்தில் அக்கறை கொண்டிருக்கவில்லை என்றாலும், தற்போதைய டிரம்ப் அரசு இவர்களை இந்தியாவுக்கு அனுப்பும் முயற்சியில் மும்மரமாக ஈடுபட்டு உள்ளது. . இவர்களில் பலர் பல்வேறு விசாகளின் மூலம் அமெரிக்கா வந்து, பின்னர் விசா முடிவின்போது நாடு திரும்பாமல் அமெரிக்காவிலேயே தாங்கியவர் ஆவர். . Pew Research Center என்ற ஆய்வு அமைப்பின் 2016 ஆண்டு கருத்துப்படி சுமார் 500,000 இந்தியர் […]

ரஜனியின் இலங்கை பயணம் இரத்து

ரஜனி இலங்கை வரும் தனது பயணத்தை இரத்து செய்துள்ளார். வரும் 9ஆம் திகதி ஞானம் அமைப்பால் (Gnanam Foundation) கட்டப்பட்ட 150 வீடுகளின் சாவிகளை உரியவர்களுக்கு வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்ளவே இவர் இலங்கை வர இருந்தார். ஆனால் சில தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ரஜனியின் இலங்கை பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தபோதே இவர் தனது பயணத்தை இரத்து செய்துள்ளார். . ரஜனியின் இலங்கை பயணத்துக்கு இந்திய அரசியல்வாதிகளாக வைக்கோ மற்றும் திருமணவாளன் ஆகியோர் கண்டனம் தெரிவித்து இருந்தனர். ராஜனியோ […]

விமானப்பணியாளரை அடித்த சிவசேனை அரசியல்வாதி

இந்தியாவின் சிவசேனை (Shiv Sena) கட்சியை சார்ந்த, Maharashtra மக்களவை (Lok Sabha) உறுப்பினர் Ravindra Vishwanath என்பவர் Air India விமான பணியாளர் ஒருவரை வெள்ளியன்று அடித்து தாக்கியுள்ளார். நான் பணியாளரை 25 தடவைகள் தனது செருப்பால் அடித்தேன் என்று இவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு கூறியுள்ளார். துணிவிருந்தால் டில்லி போலீசார் தன்னை கைது செய்யட்டும் பார்ப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். . Pune நகரில் இருந்து டெல்லி சென்ற Air India விமானத்தில் இவர் […]

இலங்கை வரும் நியூசிலாந்து தூதுவரலாயம்

இலங்கையில் நியூசிலாந்துக்கான தூதுவராலயம் ஒன்றை அமைக்க நியூசிலாந்து அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த செய்தியை நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் Murray McCully வெளியிட்டு உள்ளார். . “Sri Lanka offers increasing value and diversity to our exports, and is a trade gateway to a fast-growing part of Asia” என்றுள்ளார் McCully. . நியூசிலாந்து அரசின் 2017 ஆண்டு வரவுசெலவு திட்டத்தில் இலங்கை தூதுவராலய நிர்மாணத்துக்கு $6.2 மில்லியன் […]

வடக்கு வருகிறார் ரஜனி

பொதுநல சேவை நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்ள வடக்கு வருகிறார் இந்திய நடிகர் ரஜனிகாந்த். இந்த நிகழ்வு ஏப்ரல் மாதம் 9ம் திகதி இடம்பெறும். . தனது பணத்தின் போது இவர் ஞானம் அமைப்பால் (Gnanam Foundation) கட்டப்பட்ட 150 வீடுகளின் சாவிகளை உரியவர்களுக்கு வழங்குவர். Gnanam Foundation சுபாஷ்கரன் என்பவரின் Lyca Productions என்ற அமைப்பின் ஓர் அங்கமாகும். ஞானம் என்பவர் சுபாஷ்கரனின் தாயார் ஆவர். இந்த வீடுகள் வவுனியாவில் உள்ள இரண்டு கிராமங்களில் உள்ளன. . ரஜனி […]

விமான கைப்பையுள் இலத்திரனியல் பொருட்களுக்கும் தடை

அண்மை காலங்களில் விமான பயணிகள் தமது carry-on பைகளுள் பெருமளவு திரவங்கள், கழிகள் எடுத்து செல்வது தடை செய்யப்பட்டு இருந்தது. ஆனால் laptops, tablets, cameras, DVD Players, video games போன்ற இலத்திரனியல் பொருட்கள் எடுத்து செல்லப்படுவது தடை செய்யப்பட்டு இருந்திருக்கவில்லை. இப்போது அவ்வாறான இலத்திரனியல் பொருட்களுக்கும் சில விமானங்களில் தடை வந்துள்ளது. . அமெரிக்கா நோக்கி வரும் சில விமான சேவைகளில் carry-on பைகளில் cell phone அளவுக்கும் பெரிதான இலத்திரனியல் பொருட்கள் எடுத்து […]

இலங்கை சிறுவருக்கு கனடியன் சைக்கிள் ஓட்டம்

இலங்கையின் தென்மேற்கே அதி வறுமையில் வாழும் சிறுவருக்கு உதவும் பொருட்டு கொழும்பில் இயங்கிவரும் Rainbow Centreக்கு நன்கொடை சேர்க்க கனடியர் இருவரும், மேலும் சிலரும் ஓமானில் (Oman) சைக்கிள் ஓடியுள்ளார். கனடாவின் Calgary நகரின் Wallace King, வயது 64, மற்றும் Pat Dodge, Yuri Lipkov உட்பட 6 பேர் இந்த ஓடத்தில் பங்கு கொண்டிருந்தனர். இவர்கள் மொத்தம் $30,000 தமது நன்கொடைக்கு சேர்த்துள்ளனர். . ஓமானில் இவர்கள் நாள் ஒன்றுக்கு சுமார் 200 km […]

சீன பாதுகாப்பு அமைச்சர் திடீர் இலங்கை பயணம்

சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் Chang Wanquan இலங்கைக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இன்று ஞாயிரு புறப்பட்ட Wanquan நேபாளுக்கும் பயணம் செய்வார். சீன அமைச்சரின் பயணம் சம்பந்தமாக இருநாடுகளும் பெரிதாக செய்திகளை வெளியிடவில்லை. . தனது பயணத்தின்போது சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கை அரசாங்க உயர் அதிகாரிகள், Defense Staff College அதிகாரிகள் ஆகியோருடன் பேச்சுவார்த்தைகள் நடாத்துவார். இவரின் பயண காரணம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படாவிடினும், இலங்கை மீது இவர் அழுத்தங்கள் கொடுக்கலாம் என்று கருதப்படுகிறது. […]

பாக்-சீனா வீதிக்கு ஐ.நா. ஆதரவு, இந்திய விசனம்

சீனா தனது Belt and Road Initiative (BRI) திட்டத்தின் அங்கமாக ஒரு பெருந்தெருவை சீனா, பாகிஸ்தான் ஊடு அமைக்கிறது. இந்த பெருந்தெரு பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஸ்மீர் ஊடாகவே செல்கிறது. தற்போது ஐ. நா. தீர்மானம் (resolution) ஒன்றும் இந்த பெருவீதி திட்டத்தில் இணைத்துள்ளது. அதனால் முழு காஸ்மீரையும் தனது என்று கூறும் இந்தியா விசனம் கொண்டுள்ளது. . கடந்த வெள்ளிக்கிழமை ஐ. நா. பாதுகாப்பு செயலகம் (UNSC) ஆபிகானிதான் தொடர்பாக எடுத்துக்கொண்ட தீர்மானம் ஒன்றே […]

1 21 22 23 24 25 27