ஐரோப்பிய ஒன்றிய பிரிவு பிரித்தானியாவையே பாதிக்கும்

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது, பிரித்தானியாவுக்கே அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஒரு ஆய்வு கூறியுள்ளது. பிரித்தானிய அரசுக்கென தாரிக்கப்பட்ட இந்த இரகசிய ஆய்வு (confidential report) இன்று திங்கள் பகிரங்கத்துக்கு வந்துள்ளது. பிரித்தானிய அரசும் அவ்வாறு ஒரு அறிக்கை உள்ளதை மறுக்கவில்லை. . சிறிது காலத்தின் முன் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதா என்று பிரித்தானிய மக்களிடம் தேர்தல் மூலம் கேட்டிருந்தது. அப்போது மக்கள் வெளியேறுவதை ஆதரித்து இருந்தனர். ஆனாலும் பிரித்தானியா தற்போது […]

Air Indiaவின் 49% உரிமைக்கு வெளிநாட்டு நிறுவனம்

Air India விமான சேவையில் 49% உரிமைக்கு முதலிட ஒரு வெளிநாட்டு விமான சேவை முன்வந்துள்ளது என்று இந்தியாவின் விமான சேவை செயலாளர் R . N. Choubey கூறியுள்ளார். நட்டத்தில் இயங்கும் Air India விமான சேவையை தனியார் வசப்படுத்த இந்தியா நீண்ட காலமாக முயற்சி செய்து வந்துள்ளது. ஆனால் தற்போதே ஒரு விண்ணப்பம் கிடைத்துள்ளது. . இவ்வாறு 49% உரிமையை கொள்ள விரும்பும் வெளிநாட்டு விமானசேவையின் பெயர் இதுவரை பகிரங்கம் செய்யப்படவில்லை. . சிங்கப்பூர் […]

ஆப்கானிஸ்தானில் தற்கொலை தாக்குதல், 95 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் (Kabul) இன்று சனிக்கிழமை இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் ஒன்றுக்கு குறைந்தது 95 பேர் பலியாகியும், 200 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர். . இந்த தாக்குதல் பழைய உள்நாட்டு அலுவலக அமைச்சின் முன் இடம்பெற்று உள்ளது. வழமையாக இந்த வீதி பொதுமக்கள் பாவனைக்கு மூடப்பட்டு இருந்தாலும், தாக்குதல் நடாத்திய வாகனம் ஒரு அம்புலன்ஸ் போல இருந்தமையால் உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்டு இருந்தது என்கிறது அரசு. . தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் பெருமளவு வெளிநாட்டு […]

சிரியாவில் அமெரிக்க-துருக்கி மோதல்?

சிரியாவில் IS குழு கணிசமாக அழிக்கப்பட்ட நிலையில், அங்கு இப்போது அமெரிக்காவுக்கும், துருக்கிக்கும் இடையில் மோதல் உருவாக்கக்கூடிய நிலை தோன்றி உள்ளது. அமெரிக்கா வளர்த்த YPG என்ற சிரியா நாட்டு Kurdish குழு மீது அண்மையில் துருக்கி மேற்கொண்டுவரும் இராணுவ தாக்குதலே அமெரிக்காவுக்கும், துருக்கிக்கும் இடையில் முறுகல் நிலையை உருவாக்கி உள்ளது. . IS குழு இருந்தபோது, அவர்களுக்கு எதிராக போராட அமெரிக்கா YPG என்ற ஆயுத குழுவை வளர்த்து இருந்தது. அப்போது YPG குழுவுக்கு அமெரிக்கா […]

எகிப்தின் ஜனாதிபதி வேட்பாளர் கைது

Sami Annan என்ற எகிப்தின் முன்னாள் ஜெனரல் தான் வரும் ஜனாதிபதி தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி சிசிக்கு (Sissi)  எதிராக, போட்டியிட உள்ளதாக கடந்த வெள்ளி அறிவித்து இருந்தார். ஆனால் அவர் இன்று செவ்வாய் சிசி தரப்பால் கைது செய்யப்பட்டு உள்ளார். சிசி தலைமையிலான எகிப்தின் இராணுவம் தற்போது இந்த முன்னாள் ஜெனரலை விசாரணை செய்கிறது. . ஜெனரல் சிசி 2013 ஆம் ஆண்டு இராணுவ கவிழ்ப்பு மூலம் ஆட்சிக்கு வந்திருந்தார். முபாரக்குக்கு ஆராதவு வழங்கிய மேற்கு […]

உலகின் முதல் 1% செல்வந்தர்களிடம் 82% வருமானம்

2017 ஆம் ஆண்டுக்கான உலகின் மொத்த வருமானத்தின் (wealth) 82% உலகின் முதல் 1% செல்வந்தர்களை அடைந்துள்ளது என்கிறது பிரித்தானியாவை தளமாக கொண்ட Oxfam என்ற அமைப்பு. அந்த அறிக்கையின்படி, 2017 ஆம் ஆண்டில், உலகின் முதல் 1% செல்வந்தர்களின் சொத்துக்கள் சுமார் $762 பில்லியனால் அதிகரித்து உள்ளது. . அதேவேளை கடந்த வருடத்தில் உலகின் 50% மக்களின் சொத்துக்கள் எந்தவித அதிகரிப்பையும் அடையாது இருந்துள்ளது. . 2017 ஆம் ஆண்டில் உலகில் மொத்தம் 2,043 பேர் […]

துருக்கி சிரியாவின் Kurdish மீது தாக்குதல்

துருக்கி (Turkey) இராணுவம் சிரியாவில் (Syria), துருக்கி எல்லையை அண்டியுள்ள Afrin நகரை கைக்கொண்டுள்ள YPG என்ற Kurdish குழு மீது இன்று ஞாயிறு தாக்குதலை ஆரம்பித்து உள்ளது. . YPG என்ற Kurdish குழுவை அமெரிக்காவும், மேற்கு நாடுகளும் IS குழுவை அழிக்க வளர்த்திருந்தன. . ஆனால் NATO உறுப்பு நாடான துருக்கி சிரியாவில் உள்ள Kurdish Democratic Union கட்சியையும், அதன் ஆயுத அமைப்பான YPG குழுவையும் பயங்கரவாத குழுக்களாகவே கணிக்கிறது. . துருக்கி […]

தென் ஆபிரிக்காவில் தண்ணீர் பஞ்சம், ஆளுக்கு 25 லீட்டர்

கடந்த சில மாதங்களாக தென் ஆபிரிக்காவின் Cape Town நகரில் பெரும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் அங்கு தண்ணீர் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. வரும் ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் இந்த கட்டுப்பாடு மேலும் உக்கிரம் அடையும். . போதிய மழை இன்மை, தரமான நீர் பயன்பாட்டு கொள்கை இன்மை, அதீத வெப்பம் போன்ற காரணங்களால் Cape Town நகரம் கடந்த அக்டோபர் மாதம் முதல் ஆளுக்கு 50 லீட்டர் நீர் என்ற கட்டுப்பாட்டை […]

இந்தியாவின் அக்கினி-5 இன்று வெற்றிகர ஏவல்

இந்தியா தனது அக்கினி-5 என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM – Intercontinental Ballistic Missile) இன்று வியாழன் காலை வெற்றிகரமாக ஏவியுள்ளது. ஒரிசா மாநிலத்தில் உள்ள அப்துல் கலாம் தீவில் (Abdul Kalam Island) உள்ள ஏவு தளத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த கணை சுமார் 19 நிமிடங்களில் 4,800 km பயணித்து இந்து சமுத்திரத்துள் வீழ்ந்துள்ளது. . சுமார் 55 அடி நீளம் கொண்ட இந்த ஏவுகணை 1.5 தொன் அணுக்குண்டு […]

இந்திய தொழிலாளர் முறைப்பாடு, கனடா துர்க்கா ஆலயம் மறுப்பு

கனடாவின் Toronto நகரில் உள்ள ஸ்ரீ துர்க்கா ஆலயத்தில் கட்டுமான வேலைகள் செய்ய இந்தியாவில் இருந்து வந்திருந்த தற்காலிக வேலையாளர் அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு மற்றும் தங்குமிடம் தொடர்பாக குறைபாடுகளை முன்வைத்துள்ளனர். ஆனால் ஆலயம் அந்த குறைபாடுகளை மறுக்கிறது. . கனடாவின் ஒளிபரப்பு கூட்டுத்தாபனமான CBC (Canadian Broadcasting Corporation) இந்த குறைபாடுகளை விசாரணனை செய்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. . இந்தியாவில் இருந்து வந்திருந்த தொழிலாளிகளான 51 வயதுடைய சேகர் குருசாமி, 46 வயதுடைய சுதாகர் […]

1 2 3