அமெரிக்க கொரோனா மரணம் திடீரென அதிகரித்தது

அமெரிக்காவில் இன்று திங்கள் கொரோனா காரணமாக மரணித்தோர் தொகை தீடீரென அதிகரித்து உள்ளது. இதுவரை அமெரிக்காவில் 74 பேர் பலியாகி உள்ளனர். அத்துடன் வைரஸ் தொற்றிக்கொண்டோர் தொகையும் 4,287 ஆக அதிகரித்து உள்ளது. . மரணித்தோருள் வாஷிங்டன் மாநிலத்தில் மரணித்த 48 பேரும், கலிபோர்னியாவில் மரணித்த 11 பேரும், நியூயார்க் மாநிலத்தில் மரணித்த 8 பேரும், பிளோரிடாவில் மரணித்த 5 பேரும் அடங்குவர். . கலிபோர்னியா மாநிலத்தில் மட்டும் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானோர் தொகை 572 […]

புதன் முதல் கனடாவும் உள்வரவை மூடுகிறது

பரவிவரும் கொரோனா காரணமாக புதன்கிழமை (மார்ச் 18) முதல் அந்நிய நாட்டவர் கனடாவுள் நுழைவது தடை செய்யப்படவுள்ளது. இந்த அறிவிப்பை பிரதமர் இன்று கூறியுள்ளார். . கடனடிய குடிமக்கள், நிரந்தர வதிவிட உரிமை கொண்டோர் தொடர்ந்தும் உள்வர அனுமதிக்கப்படுவர். அத்துடன் அமெரிக்க குடிமக்களும் கனடாவுள் செல்ல தற்போதைக்கு அனுமதிக்கப்படுவர். . புதன்கிழமை முதல் Toronto, Montreal, Calgary, Vancouver ஆகிய விமான நிலையங்களில் மட்டுமே வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்கள் தரையிறக்கப்படும். இந்த விமான நிலையங்களில் பயணிகளை […]

இந்திய YES Bank காலாண்டு நட்டம் $2.5 பில்லியன்

இந்தியாவின் பெரியதோர் தனியார் வங்கியான YES Bank கடந்த காலாண்டில் $2.5 பில்லியன் நட்டத்தில் இயங்கி உள்ளது. தற்போது இந்த வங்கி ஊழல் காரணமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. . YES Bank நம்பிக்கை அற்றவர்களுக்கு பெரும் கடன்களை வழங்கி இருந்தது. அவ்வாறு கடன் பெற்றோர் கடனை மீண்டும் அடைக்காது தப்பிவிட்டனர். அதனால் வங்கி அதில் தமது வைப்பை செய்தோருக்கு அவர்களின் பணத்தை திருப்பி வழங்க முடியாது உள்ளது. . நிலைமையை அறிந்த இந்தியாவின் Reserve […]

உலகம் எங்கும் மறிக்கப்படும் குடிவரவுகள்

வேகமான கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகம் எங்கும் குடிவரவுகள் மறிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக விமான நிலையங்கள் மூலமான குடிவரவுகள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. . ஐரோப்பாவில் இருந்தன விமான வரவுகளை வெள்ளி முதல் அமெரிக்கா தடை செய்துள்ளது. பாரிய அளவிலான விமான போக்குவரத்தை கொண்ட வடஅமெரிக்கா-ஐரோப்பா விமான பயணங்கள் பயணிகள் மத்தியில் பெரும் இடரை தோற்றுவித்து உள்ளன. . அமெரிக்காவின் Dallas, Chicago போன்ற விமான நிலையைகளை இறுதி நேரத்தில் அடைந்த ஐரோப்பிய விமான பயணிகள் […]

2036 வரை ஆட்சியில் இருக்க பூட்டின் நடவடிக்கை

இன்று சனிக்கிழமை ரஷ்யாவின் சனாதிபதி பூட்டின் (Vladimir Putin) ஒப்பமிட்டுள்ள சட்டம் ஒன்று அவர் 2036 ஆம் ஆண்டுவரை சனாதிபதி பதவியில் இருக்க வழி செய்துள்ளது. அதாவது இந்த சட்டம் அவர் மேலதிகமாக இரண்டு தடவைகள் சனாதிபதி ஆக பதிவில் இருக்க வசதி செய்துள்ளது. . தற்போதைய சட்டப்படி பூட்டின் 2024 ஆம் ஆண்டுவரை மட்டுமே சனாதிபதியாக பதவியில் இருக்க முடியும். இன்றைய சட்டம் அவரின் இரண்டு மேலதிக 6-வருட ஆட்சிகளுக்கு வழி செய்துள்ளது. . 2000 […]

British Airways விரைவில் பெருமளவு பணியாளரை நீக்கும்

கொரோனா வைரஸ் காரணமாக விமான சேவை நிறுவனங்களும், உல்லாசப்பயண சேவை நிறுவனங்களும் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளன. பல விமான சேவை நிறுவனங்கள் ஏற்கனவே இலாபத்தில் இயங்க முடியாது தவிப்பன. அவர்களின் தற்போதைய நிலைமை பாரதூரமானது. . பிரித்தானியாவின் British Airways தமது பணியாளர்களுக்கு ஏற்கனவே தொழில் இழப்புகள் (lay off) வருகின்றன என தனது ஊழியர்களுக்கு கூறி உள்ளது. இந்த தொழில் இழப்புகள் தற்காலிகமானதாக இருக்கலாம் அல்லது நிரந்தரமானது இருக்கலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது. . விமான […]

உலக பங்குச்சந்தைகளின் வீழ்ச்சிகள் தொடர்கின்றன

உலக பங்குச்சந்தைகளின் வீழ்ச்சிகள் இன்றும் தொடர்கின்றன. . வியாழக்கிழமை (மார்ச் 12) அமெரிக்காவின் DOW பங்கு சந்தை 10% ஆல் (அதாவது 2,352 புள்ளிகளால்) மீண்டும் வீழ்ந்துள்ளது. DOW சந்தையின் 125 வருட காலத்தில் இடம்பெற்ற அதிக ஒருநாள் வீழ்ச்சி இதுவே. அமெரிக்க அரசு $1.5 டிரில்லியன் முதலீடுகளை செய்யவுள்ளதாக கூறி இருந்தும் பங்கு சந்தைகள் தொடர்ந்தும் வீழ்கின்றன. . ஓய்வூதிய முதல்கள் போன்ற பெரும் முதலீடுகள் பங்கு சந்தைகளிலேயே முதலீடு செய்கின்றன. . அமெரிக்காவின் விமான […]

ஐரோப்பிய பயணங்களுக்கு அமெரிக்கா 30-நாள் தடை

அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையில் 30-நாள் பயண தடை ஒன்றை அமெரிக்க சனாதிபதி ரம்ப் இன்று புதன் விடுத்துள்ளார். ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதே காரணம் என்றும் ரம்ப் கூறியுள்ளார். . ஐரோப்பிய நாடுகளுக்கான தடை பிரித்தானியாவை உள்ளடக்காது என்றும் ரம்ப்  கூறியுள்ளார். பிரித்தானியர் தொடர்ந்தும் அமெரிக்கா பயணிக்கலாம். . சீனாவுக்கு அடுத்து இத்தாலியே அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு 12,000 கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஐரோப்பாவில் மொத்தமாக 20,000 பேர் பாதிக்கப்படும், 930 […]

அனைத்து விசாக்களையும் நிறுத்தியது இந்தியா

கொரோனா காரணமாக ஏறக்குறைய அணைத்து நாட்டவர்களுக்கான விசாக்களையும் இந்தியா 13 ஆம் திகதி முதல் இரத்து செய்யவுள்ளது. அத்துடன் பர்மாவுடனான எல்லைகளையும் மூடியுள்ளது இந்தியா. இந்தியாவில் கொரோனா பாதிப்பை அடைந்தோர் தொகை அதிகரிப்பதே இந்தியாவின் இந்த கடும் நடவடிக்கைக்கு காரணம். . மார்ச் 13 ஆம் திகதி நடைமுறைக்கு வரும் விசா தடை ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதிவரை நடைமுறையில் இருக்கும் என்றும் சுகாதார அமைச்சால் கூறப்பட்டுள்ளது. . Diplomatic, ஐ.நா. போன்ற விசேட விசாக்களை […]

எண்ணெய்வள யுத்தத்தால் சரிந்த பங்குசந்தைகள்

சனிக்கிழமை சவுதி தனது எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து, அத்துடன் பரல் ஒன்றுக்கான விலையையும் குறைத்தால் இன்று திங்கள் உலக பங்குச்சந்தைகள் பாரிய வீழ்ச்சிக்கு உள்ளாகின. அமெரிக்காவின் DOW Jones Industrial Average இன்று 2,013 புள்ளிகளால் (7.8%) வீழ்ந்துள்ளது. DOW வின் வரலாற்றிலேயே இதுவே நாள் ஒன்றுக்கான அதிக வீழ்ச்சி ஆகும். . அத்துடன் S&P 500 பங்குசந்தை சுட்டி 7.6% ஆல் வீழ்ந்துள்ளது. NASDAQ 7.3% ஆல் வீழ்ந்துள்ளது. கொரோனா வைரஸால் வீழ்ந்துள்ள பங்கு சந்தைகள் […]