பாகிஸ்தான் விமானம் வீழ்ந்தது, 99 பேர் வரை பலி

பாகிஸ்தானின் வடகிழக்கு நகரான லாகூரில் (Lahore) இருந்து கராச்சியில் (Karachi) உள்ள Jinnah International Airport சென்ற Pakistan International Airlines (PIA) விமானம் ஒன்று (Flight 8303) மொத்தம் 91 பயணிகளுடனும், 8 பணியாளர்களுடனும் வீழ்ந்து மோதி உள்ளது. அதில் பயணித்த பெரும்பாலானோர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. . Jinnah விமான நிலையத்தில் இருந்து சுமார் 3.2 km தொலைவில் உள்ள Model Colony என்ற குடியிருப்பு பகுதியிலேயே இந்த விமானம் தரை இறங்கு முன், உள்ளூர் […]

அமெரிக்காவில் வேலைகளை இழந்தோர் தொகை 38.6 மில்லியன்

கரோனா காரணமாக அமெரிக்காவில் தொழிலாளர் தமது வேலைகளை இழக்கும் வேகம் குறைந்து வந்தாலும், கடந்த 7 நாட்களிலில் மேலும் 2.4 மில்லியன் பேர் தமது தொழிலை இழந்து உள்ளனர். அதனால் மார்ச் மாதம் முதல் மொத்தம் 38.6 மில்லியன் பேர் தமது தொழிலை இழந்து உள்ளனர். . முடக்கம் காரணமாக கடந்த பெப்ருவரி மாதம் தொழில் புரிந்தோரில் 1/4 பங்கினர் தமது தொழிலை இழந்து உள்ளனர். அதனால் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு இன்மை 14.7% ஆக உயர்ந்து உள்ளது. […]

அமெரிக்காவை வெறுத்து, சீனாவை விரும்பும் ஜெர்மனி

ஜெர்மனி மக்களுக்கு அமெரிக்கா மீது இருந்த நல்லெண்ணம் குறைந்து, அதேவேளை சீனா மீதான நல்லெண்ணம் அதிகரித்து உள்ளதாக கருத்து கணிப்பு ஆய்வு ஒன்று அறிந்துள்ளது. குறிப்பாக கரோனா வரைஸ் தொடர்பான அமெரிக்க சனாதிபதி ரம்ப் அரசின் செயல்பாடுகளே ஜெர்மன் நாட்டவருக்கு விசனத்தை உருவாகியுள்ளது. ஜெர்மனியின் Koerber Institute என்ற அமைப்பும், அமெரிக்காவின் Pew Institute என்ற அமைப்பும் இந்த கருது கணிப்பு ஆய்வை செய்துள்ளன. . மேற்படி கணிப்பின்படி 73% ஜெர்மனியினர் அமெரிக்கா மீதான தமது நல்லெண்ணம் […]

The Lancet: ரம்ப் பொய்கதை கூறி WHO வை தாக்குகிறார்

தனது தவறுகளை மற்றவர்கள் மீது திணித்து தப்பிக்கொள்ளும் இயல்பு கொண்ட ரம்ப் மீண்டும் ஒருமுறை அவ்வகை செயலை செய்து அகப்படுக்கொண்டார். ஆரம்ப காலங்களில் கரோனா விசயத்தில் புத்திசாலிதமாக செயல்பட்டு முற்காப்பு நடவடிக்கைகளை செய்ய தவறிய ரம்ப், அமெரிக்காவில் 1.5 மில்லியன் மக்கள் கரோனா தொற்றியும், 90,000 மக்கள் பலியாகியும் உள்ள நிலையில், WHO மீது பாய்கிறார் ரம்ப். . சில நாட்களுக்கு முன் ரம்ப் WHO வுக்கு எழுதிய மிரட்டல் கடிதம் ஒன்றில், தனது வாதத்தை உறுதிப்படுத்த, […]

பர்மாவில் மிகப்பெரிய போதை கைப்பற்றல்

பர்மாவின் வடகிழக்கே இயங்கிவந்த போதை தயாரிப்பு நிலையம் ஒன்றை முற்றுகையிட்ட அந்நாட்டு போலீசார் வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவிலான போதையை கைப்பற்றி உள்ளனர்.  இந்த செய்தியை திங்கள் வெளியிட்ட United Nations Office on Drugs and Crime (UNODC) அமைப்பு மேற்படி போதை தயாரிப்புக்கு உலக அளவிலான சமூகவிரோத கும்பல்களின் ஆதரவு இருந்திருக்கும் என்றும் கூறியுள்ளது. . இந்த முற்றுகையில் 3,748 லீட்டர் methyl fentanyl, 193 மில்லியன் methamphetamine குளிசைகள், 500 kg crystal methamphetamine, […]

வங்கத்தில் சூறாவளி அம்பன், 1 மில்லியன் இந்தியர் நகர்வு

வங்காள விரிகுடாவில் தற்போது நிலைகொண்டுள்ள பாரிய சூறாவளி அம்பன் இந்தியாவின் மேற்கு வங்காளம், ஒரிசா ஆகிய மாநிலங்களின் கரையோரங்களை வன்மையாக தாக்கலாம் என்ற காரணத்தால் இந்தியா சுமார் 1 மில்லியன் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்துகிறது. அம்பன் புதன்கிழமை கங்கை ஆறு கடலில் சங்கமிக்கும் பகுதியை தாக்கும் என்று வானிலை அவதானிகள் கூறுகின்றனர். . அம்பன் நிலத்தை தாக்கும்பொழுது சுமார் 115 km/h காற்று வீச்சை கொண்டிருக்கும் என்றும் கணிக்கப்படுள்ளது. நடுக்கடலில் தற்போது நகரும் அம்பன் சுமார் […]

இஸ்ரேலில் 500 நாட்களின் பின் கூட்டு அரசாங்கம்

கடந்த 500 நாட்களாக (சுமார் 18 மாதங்கள்) முறைப்படியான ஆட்சி இன்றி இருந்த இஸ்ரேலில் இன்று ஞாயிறு கூட்டு அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. . கடந்த 500 நாட்களில் அங்கு 3 தேர்தல்கள் இடம்பெற்று இருந்தன. அந்த மூன்று தேர்தல்களில் எந்தவொரு கட்சியும் ஆட்சியை அமைக்க தேவையான ஆசனங்களை வென்று இருக்கவில்லை. மூன்று தேர்தல்களும் ஏறக்குறைய ஒரே முடிவையே வழங்கி இருந்தன. . மேலுமொரு தேர்தலை (4 ஆவது தேர்தலை) நடாத்தினாலும் முடிவு மாறாது என்ற […]

ரம்ப் வழி போகும் அஸ்ரேலியாவை சீனா தண்டிக்கிறது?

அஸ்ரேலியாவின் நான்கு இறைச்சி தயாரிப்பு நிறுவனங்கள் மீது அண்மையில் சீனா தடை விதித்து உள்ளது. அத்துடன் மற்றைய அஸ்ரேலிய இறைச்சி இறக்குமதிகளுக்கும் சீனா புதிதாக 80% இறக்குமதி வரியையும் நடைமுறை செய்துள்ளது. சீனாவின் அஸ்ரேலியா மீதான அண்மைக்கால கடும்போக்கு அஸ்ரேலியா அமெரிக்க சனாதிபதி ரம்ப் வழி செல்வதற்கு வழங்கும் தண்டனைகள் என்று கருதப்படுகிறது. . அஸ்ரேலியாவின் இறைச்சிக்கு மட்டுமன்றி, அவர்களின் barley க்கும் சீனா புதிதாக 80% வரி நடைமுறை செய்துள்ளது. . நீண்ட காலமாக அஸ்ரேலியாசுதந்திரமான […]

Rwanda இனப்படுகொலை சூத்திரதாரி பிரான்சில் கைது

1994 ஆம் ஆண்டு ஆபிரிக்க நாடான றவன்டாவில் (Rwanda) இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சூத்திரதாரியாக இருந்த Hutu இன Felicien Kabuga என்பவர் இன்று சனிக்கிழமை Paris நகருக்கு அண்மையில் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். தற்போது 84 வயதுடைய Kabuga வேறு பெயர் ஒன்றை பயன்படுத்தி வந்துள்ளார். . சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் இவரின் நிறுவனம் ஒன்றே பெரும் தொகை வாள்கள், கத்திகள் போன்ற ஆயுதங்களை இறக்குமதி செய்து, Interahamwe என்ற வன்முறை குழு மூலம் […]

ஒரே ஆய்வுக்கு இரு வருமதியா, அல்லது தொழில்நுட்ப உளவா?

Qing Wang என்ற Cleveland Clinic Foundation (Cleveland, Ohio) அமைப்பின் மருத்துவ ஆய்வாளர் புதன்கிழமை அமெரிக்காவின் FBI போலீசாரால் கைது செய்யப்பட்டு நேற்று வியாழன் நீதிமன்றம் ஒன்றில் நிறுத்தப்பட்டு இருந்தார். இவர் அமெரிக்காவின் நிதி உதவியுடன் செய்யும் ஆய்வுகளுக்கு சீனாவிடம் இருந்தும் நிதி பெற்றுள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. . சீனாவில் பிறந்த Wang தற்போது ஒரு அமெரிக்க குடிமகன். இவர் தான் மேற்கொண்ட ஆய்வு ஒன்றுக்கு அமெரிக்காவின் National Institutes of Health […]