இந்தியா தன் கைவசம் உள்ள MiG-21 (Mikoyan-Gurevich-21) வகை யுத்த விமானங்களை 2025ம் ஆண்டில் சேவையில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. மிகையான அளவில் இந்திய MiG-21 விமானங்கள் விபத்துக்களில் சிக்குவதே இந்த தீர்மானத்துக்கு காரணம். ஜூலை 28ம் திகதி ஒரு MiG-21 ராஜஸ்தான் மாநிலத்தில் விழுந்து நொறுங்கியதில் 2 விமானப்படையினர் பலியாகி உள்ளனர். 2021ம் ஆண்டில் மட்டும் 6 இவ்வகை இந்தியப்படை விமானங்கள் வீழ்ந்து உள்ளன. இந்தியாவிடம் தற்போது இவ்வகை விமானங்கள் சுமார் 70 உள்ளதாக […]
David Jolly, Christine Whitman ஆகிய Republican கட்சி உறுப்பினர்களும் Andrew Yang என்ற Democratic கட்சி உறுப்பினரும் இணைந்து Forward என்ற மூன்றாம் கட்சியை உருவாக்கி உள்ளனர். கடும் போக்கு வலதுசாரி கட்சியான Republican கட்சியும், கடும் போக்கு இடதுசாரி கட்சியான Democratic கட்சியும் அமெரிக்காவை துண்டாடுகின்றன என்பதே Forward கட்சியின் முறைப்பாடு. Forward கட்சி இடதோ அல்லது வலதோ இல்லாமல் மத்திய கொள்கைகளை கொண்டிருக்கும் என்று Forward கூறுகிறது. Andrew Yang கடந்த அமெரிக்க […]
அமெரிக்காவின் House Speaker நான்சி பெலோஷி (Nancy Pelosi) தாய்வான் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் நோக்கில் அங்கு பயணம் ஒன்றை மேற்கொள்ள முனைவது சீனாவுக்கும், தாய்வானுக்கும் இடையே நேரடி மோதலை தோற்றுவிக்கலாம் என்று நம்பப்படுகிறது. அவ்வாறு மோதல் ஆரம்பித்தால் அமெரிக்காவும் அதில் தலையிட நேரிடும். இந்த விசயம் உட்பட பல காரணங்களால் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றி உள்ளது. இந்த முறுகல் நிலையை தணிக்க அமெரிக்க சனாதிபதி பைடென் நியூ யார்க் நேரப்படி இன்று […]
முன்னாள் இலங்கை சனாதிபதி கோத்தபாயாவுக்கு சிங்கப்பூர் மேலும் 14 தினங்கள் தங்கியிருக்க விசா வழங்குகிறது. அந்தப்படி கோத்தபாய ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி வரை சிங்கப்பூரில் தங்கி இருக்கலாம். GotaGoHome ஆர்ப்பாட்டத்தால் விரட்டப்பட்ட கோத்தபாயா மாலைதீவுக்கு இலங்கை விமானப்படை விமானத்தில் தப்பி ஓடி அங்கிருந்து சிங்கப்பூருக்கு சவுதி அரேபியாவின் பயணிகள் விமானம் ஒன்றில் ஜூலை 14ம் திகதி சென்று இருந்தார். அங்கு அவருக்கு முதல் 14 தின private visit விசா வழங்கப்பட்டது. அந்த விசாவே மேலும் […]
International Space Station (ISS) என்ற சர்வதேச விண் ஆய்வுகூடத்தில் இருந்து தாம் 2024ம் ஆண்டில் வெளியேற உள்ளதாக ரஷ்யா செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை எதிர்பாராத அமெரிக்கா மாற்று வழிகளை கையாள தள்ளப்பட்டு உள்ளது. Roscosmos என்ற ரஷ்ய விண்வெளி அமைப்பின் தலைவர் Yuri Borsov இந்த அறிவிப்பை செய்துள்ளார். அவர் முன்னர் இணங்கியதற்கு ஏற்ப தாம் 2024ம் ஆண்டு வரை ISS பணிகளில் பங்கு கொள்வர் என்றும் அதன் பின் ISS இல் இருந்து […]
ரஷ்யா யூக்கிறேனுள் நுழைந்த பின் மேற்கு நாடுகள் ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகளை விதித்து இருந்தன. அவ்வகை கடும் தடைகளுக்கு மத்தியிலும் ரஷ்ய பொருளாதாரம் கணிசமான அளவில் நலமாக உள்ளதாக International Monetary Fund இன்று செவ்வாய் கூறியுள்ளது. எரிபொருள் விலை அதிகமாக இருப்பது ரஷ்ய பொருளாதாரம் நலமாக இருப்பதற்கு ஒரு பிரதான காரணம் என்கிறது IMF. ஆனாலும் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ரஷ்யா மீதான தடையும் ஒரு பிரதான காரணம். யுத்தத்துக்கு முன் $80 […]
சீனாவின் நடுவே செல்லும் Yangtze ஆற்றில் இருந்து தலைநகர் பெய்ஜிங்குக்கு நீர் எடுத்து செல்ல சுமார் $8.9 பில்லியன் செலவில் மிக பெரியதோர் திட்டம் நடைமுறை செய்யப்படவுள்ளது. இந்த திட்ட கட்டுமானம் நிறைவுபெற சுமார் 10 ஆண்டுகள் தேவைப்படும் என்றும் கூறப்படுகிறது. உலகத்திலேயே மிக பெரிய நீர் அணைக்கட்டு Yangtze ஆற்றை மறித்து கட்டப்பட்ட Three Gorges Dam ஆகும். இந்த அணையில் தேங்கி இருக்கும் நீரே சுமார் 1,400 km வடக்கே உள்ள தலைநகர் பெய்ஜிங்குக்கு […]
பர்மாவின் இராணுவம் தாம் 4 மரண தண்டனை வழங்கப்பட்ட எதிர் கட்சியினரை கொலை செய்துள்ளதாக கூறியுள்ளது. இவர்கள் மீது இராணுவம் பயங்கரவாத குற்றங்களை சுமதி இருந்தது. அவர்கள் எவ்வாறு, எப்பொழுது கொலை செய்யப்பட்டார்கள் என்ற விபரங்களை இராணுவம் வெளியிடவில்லை. இந்த 4 பேரும் பர்மாவில் இராணுவ ஆட்சி கவிழ்ப்பு மூலம் பதவியை கைக்கொண்ட இராணுவத்துக்கு எதிராக போராடியவர்கள். இவர்களுக்கான மரண தண்டனை தீர்ப்பு கடந்த ஜனவரி மாதம் வழங்கப்பட்டு இருந்தன. இவர்கள் மீதான வழக்கு பொது (civil) […]
Partha Chatterjee என்ற மேற்கு வங்காள மாநில அமைச்சரை இந்தியாவின் financial-crime விசாரணை பிரிவு இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளது. மேற்படி அமைச்சர் கல்வி அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அரச பாடசாலைகளில் ஆசிரியர்களையும், பணியாளர்களையும் இலஞ்சம் பெற்று பணிக்கு அமர்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேற்கு வங்கத்தில் Chatterjee சுமார் 5 ஆண்டுகள் கல்வி அமைச்சராக இருந்துள்ளார். அக்காலத்தில் இவர் நூற்றுக்கணக்கில் ஆசிரியர்களை பதவியில் அமைர்த்தி உள்ளார். இவர்களில் பலர் […]
உலகுக்கு கோதுமை போன்ற தானியங்களை பெருமளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் யுக்ரைன் பிரதானம். ரஷ்யா யுக்ரைனை ஆக்கிரமித்த பின் யுக்ரைனின் கருங்கடல் மூலமான தானிய ஏற்றுமதி முற்றாக தடைபட்டு இருந்தது. தற்போது துருக்கி, ரஷ்யா, யுக்ரைன் ஆகிய நாடுகள் ஐ.நாவுடன் இணைந்து யுக்ரைனின் தானியத்தை கருங்கடல் மூலம் ஏற்றுமதி செய்ய இணக்கம் ஒன்றில் வெள்ளி கையொப்பம் இடவுள்ளதாக துருக்கி அறிவித்துள்ளது. அண்மையில் ஈரான் சென்ற துருக்கியின் சனாதிபதி அங்கு ரஷ்ய சனாதிபதி பூட்டினை சந்தித்து உரையாடி இருந்தார். […]