இந்தியாவில் கொடுமையான வெப்பம்

கடந்த சில நாட்களாக இந்தியாவின் பல பாகங்களில் வெப்பநிலை கொடுமையாக உள்ளது. இதன் காரணமாக மக்களை தேநீர் போன்ற சூடான பானங்களை அருந்த வேண்டாம் என்று கேட்டுள்ளது அரசு. பதிலாக குளிர் பானங்களை அருந்தவும், பழங்களை உண்ணவும் மக்கள் கேட்கப்பட்டு உள்ளனர். . ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள Churu என்ற நகரிலேயே அதி கூடிய வெப்பநிலை பதிவாகி உள்ளது. கடந்த சனிக்கிழமை இங்கு வெப்பநிலை 50.6 C ஆக இருந்துள்ளது. திங்கள் வெப்பநிலை 50.3 C ஆகவும், […]

​இஸ்லாமிய அமைச்சர்கள் பதவி துறப்பு

இலங்கையின் அனைத்து இஸ்லாமிய மதம் சார்ந்த அமைச்சர்களும், உப அமைச்சர்களும் கூடவே இரண்டு ஆளுநர்களும் தமது பதவிகளை துறந்துள்ளனர். தமக்கு எதிராக சில கடும்போக்கு சிங்கள அரசியல் மற்றும் பௌத்த மத தலைமைகள் கொண்டுள்ள ​வெறுப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கிலேயே இந்த பதவி துறப்பு இடம்பெறுள்ளது. . அமைச்சர்களும், ஆளுநர்களும் தமது பதவிகளை துறந்தாலும், அவர்கள் தொடர்ந்தும் தமது பாராளுமன்ற ஆசனங்களை கொண்டிருப்பார். அத்துடன் அவர்கள் ஆளும் கட்சியிலேயே தொடர்ந்தும் அங்கம் வகிப்பர். அதனால் ரணில் […]

இந்திய கல்விநிலைய தீக்கு 19 மாணவர் பலி

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள Surat என்ற நகரில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்துக்கு 19 மாணவர்கள் பலியாகியும், 20 மாணவர்கள் காயமடைந்து உள்ளனர். மரணித்தோரில் 16 பேர் மாணவிகள். . தீ விபத்து இடம்பெற்றபோது இந்த தனியார் கல்விநிறுவன (tuition) வகுப்பறையில் சுமார் 50 மாணவர்கள் இருந்துள்ளனர். தீக்கான காரணம் மின் ஒழுக்கு என்று கூறப்படுகிறது. . Takshashila Arcade என்ற இந்த கட்டிடம் ஒரு தட்டு கட்டும் […]

பலஸ்தீனர் இன்றி பலஸ்தீனர் மாநாடு

அமெரிக்க அதிகாரிகள் பலஸ்தீனர்களுக்கு உதவுவது தொடர்பாக மாநாடு ஒன்றை பஹ்ரேய்ன் (Bahrain) நாட்டின் மனமா (Manama) நகரில் வரும் ஜூன் 25 ஆம் மற்றும் 26 ஆம் திகதிகளில் நிகழ்த்தவுள்ளதாக கூறியுள்ளனர். அனால் பாலஸ்தீனர்கள் அந்த மாநாடு தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது என்றுள்ளனர். . நேற்று அமெரிக்கா இந்த மாநாடு தொடர்பான செய்தியை அறிவித்து இருந்தாலும், தமக்கு இந்த விசயம் தொடர்பாக எதுவும் தெரியாது என்றுள்ளார் பலஸ்தீன பிரதமர். . இந்த மாநாட்டின் தலைப்பே (Peace […]

இந்தியாவில் மீண்டும் மோதி ஆட்சி?

இந்தியாவில் மீண்டும் மோதி தலைமையிலான அரசே ஆட்சிக்கு வரும் என்று வாக்கெடுப்பின் பின்னரான கணிப்புகள் (exit polls) கூறுகின்றன. மொத்தம் 542 ஆசனங்களில் மோதியின் பா.ஜ. கட்சி தலைமையிலான National Democratic Alliance (NDA) என்ற கூட்டணிக்கு 287 முதல் 350 வரையிலான ஆசனங்கள் கிடைக்கலாம் என்று வெவ்வேறு கணிப்புகள் கூறுகின்றன. . இன்று ஞாயிறு முடிந்த இந்தியாவின் 17 ஆவது பொது தேர்தலில் பெரும்பான்மை ஆட்சியை அமைக்க குறைந்தது 272 ஆசனங்கள் தேவை. . 2014 […]

அஸ்ரேலியாவில் மீண்டும் Liberal ஆட்சியில்

அஸ்ரேலியாவின் தேர்தல் முடிபுகளின்படி அங்கு தற்போது ஆட்சியில் உள்ள Liberal கட்சி தலைமையிலான Liberal National அணி மீண்டும் ஆட்சியை அமைக்க உள்ளது. அதனால் தற்போதைய பிரதமர் Scott Morrison தொடர்ந்தும் பிரதமராக பதவியில் இருப்பார். . வாக்குகளை எண்ணும் பணிகள் தொடர்ந்தாலும், இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின்படி ஆட்சியில் உள்ள Liberal அணி 76 ஆசனங்களை கைப்பற்றலாம் என்று கணிக்கப்படுகிறது. மொத்தம் 151 ஆசனங்களை கொண்ட அவையில் குறைந்தது 76 ஆசனங்கள் பெரும்பான்மை ஆட்சியை அமைக்க உதவும். […]

சீனாவுக்கு உளவு செய்த CIA அதிகாரிக்கு 20 ஆண்டுகள்

முன்னாள் CIA (Central Intelligence Agency) அதிகாரியான Kevin Patrick Mallory, வயது 62, என்பவர் சீனாவுக்கு அமெரிக்காவின் பாதுகாப்பு தொடர்பான இரகசியங்களை வழங்கினார் என்ற குற்றம் 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டது. அவரின் அந்த குற்றத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை 20-வருட சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. இவர் சீனா உளவாளியிடம் இருந்து $25,000 பெற்றார் என்றும் கூறப்பட்டுள்ளது. . பதவியில் இருந்தபோது Mallory CIA அமைப்பின் பல இரகசிய செயற்பாடுகளில் […]

திடமான முடிவின்றி பிரித்தானியா, மேயும் பதவி விலகலாம்

ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) இருந்து விலக பிரித்தானியா எடுத்துக்கொண்ட திடமில்லாத முடிவால் பிரித்தானியாவின் அரசியல் குழம்பி உள்ளது. ஐரோப்பாவில் இருந்து வெளியேறும் முடிவு தொடர்பான அடுத்த வாக்கெடுப்பில் பிரதமர் மே இணக்கப்பாடு ஒன்றை முன்வைக்க முடியாவிட்டால், தான் பதவியில் இருந்து விலக உள்ளதாக தற்போது கூறியுள்ளார். . Brexit தொடர்பாக இன்னோர் வாக்கெடுப்பு பிரித்தானிய பாராளுமன்றில் ஜூன் மாதம் முதல் கிழமை இடம்பெறவுள்ளது. இதுவே மேயின் இறுதி முயற்சியாகும். ஏற்கனவே 3 தடவைகள் மேயின் திட்டங்கள் போதிய […]

உலகின் அதிசெல்வந்தர் வாழும் 15 இடங்கள்

அமெரிக்க டாலர் நாணய கணிப்புப்படி உலகில் தற்போது  சுமார் 1,942 பில்லினியர் உள்ளனர். அதாவது இவர்களிடம் $1,000,000,000 அல்லது அதற்கு மேற்பட்ட சொத்துக்கள் உண்டு. அதில் பெரும் பகுதி நிலையற்ற பங்குசந்தை (stock market) சொத்தாகவும் இருக்கும். . Wealth-X என்ற அமைப்பின் ஆய்வின்படி உலகின் மொத்த பில்லினியர்களில் 79% செல்வந்தர் $6.8 டிரில்லியன் ($6,800 பில்லியன்) சொத்தை கொண்டுள்ளனர். இவர்கள் பின்வரும் 15 இடங்களில் வாழ்கின்றனர். . அமெரிக்காவிலேயே அதி கூடிய பில்லினியர்கள் வாழ்கின்றனர். அங்கு […]

வளைகுடா எண்ணெய் கட்டமைப்புகள் மீது தாக்குதல்கள்

கடந்த சில தினங்களாக வளைகுடா எண்ணெய் கட்டமைப்புகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த தாக்குதல்களை செய்வோர் யார் என்று இதுவரை அறியப்படவில்லை. ஆனால் பெரும்பாலான தாக்குதல்கள் சவுதி, மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) ஆகிய இரு நாடுகளின் கட்டமைப்புகள் மீதே இடம்பெற்று உள்ளன. . ஞாயிற்று கிழமை சவுதி அரேபியாவுக்கு சொந்தமான இரண்டு எண்ணெய் தாங்கி கப்பல்கள் UAE க்கு அருகே நிலைகொண்டிருந்தபோது தாக்குதலுக்கு உள்ளாகின. ஒரு கப்பலில் 3 சுமார் மீட்டர் […]