மும்பாய் புகையிரத நிலைய நெரிசலுக்கு 22 பேர் பலி

வெள்ளிக்கிழமை காலை மும்பாய் புகையிரத நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலுக்கு 22 பேர் பலியாகியும், மேலும் 30 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் உள்ளனர். இந்த நெரிசல் இரண்டு நிலையங்களுக்கு இடையில் உள்ள நடை பாலம் ஒன்றில் இடம்பெற்று உள்ளது. . பிரபாதேவி நிலையத்துக்கும் (Prabhadevi station) பரோல் (Parel station) நிலையத்துக்கும் இடையில் உள்ள ஒருங்கிய பாலத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்று உள்ளது. . நெரிசலுக்கான காரணம் இதுவரை திடமாக அறியப்படவில்லை. அனால் ஒரு சீமெந்து […]

வடகொரிய வர்த்தகங்களை மூடுகிறது சீனா

சீனாவில் இயங்கிவரும் வடகொரியாவின் வர்த்தகங்களை மூடுமாறு கூறியுள்ளது சீனா. இந்த கட்டளையின்படி சீனாவில் அமைந்துள்ள அனைத்து வடகொரிய வர்த்தகங்களும் 120 நாட்களுக்குள் மூடப்படல் அவசியம். இந்த கட்டளை ஐ.நா. கட்டளைக்கு உடன்படும் வகையில் அமைந்துள்ளது. . வடகொரியா 90% ஏற்றுமதி வருமானத்தை சீனாவிடம் இருந்தே பெறுகிறது. . டிரம்ப் அரசு வடகொரியாவுக்கு எதிரான சீனாவின் நடவடிக்கைகளை கொண்டாடினாலும், சீனாவின் உள்நோக்கம் என்னவென்பது புதிராகவே உள்ளது. . ஆதியில் இருந்தே சீனா பேச்சுவார்த்தைகளுக்கு உதவி செய்யலாம் என்றும், ஆனால் […]

சில Papua அகதிகள் அமெரிக்கா பயணம்

ஆஸ்ரேலியா நோக்கி செல்கையில் கைதுசெய்யப்பட்டு Papua New Guineaவின் Manus தீவில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த அகதிகளில் 25 பேர் அமெரிக்கா செல்கிறார்கள். இவர்களுள் இலங்கை தமிழர், Rohingya இஸ்லாமியர், ஆப்கானிஸ்தானியர், பாகிஸ்த்தானியர்,  பங்களாதேசியர், ஈரானியர், சோமாலியர் ஆகியோர் அடங்குவர். செவ்வாய் பயணிக்கும் 25 பேரும் ஆண் அகதிகள். மேலும் 27 அகதிகள் Nauruவில் இருந்து புதன்கிழமை பயணிக்கிறார்கள். . முன்னாள் ஜனாதிபதி ஒபாமா 1,250 அகதிகளை ஆஸ்ரேலியாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள இணங்கி இருந்தார். பதிலாக ஆஸ்ரேலியா […]

பொருளாதார வல்லமையில் இலங்கை 85ம் இடத்தில்

World Economic Forum இன்று தனது 2017-2018 காலத்துக்கான Global Competitiveness Index அறிக்கையை வெளியிட்டு உள்ளது. இந்த கணிப்புக்கு மொத்தம் 137 நாடுகள் எடுத்து கொள்ளப்பட்டன. . சுவிற்சலாந்து 5.86 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தில் உள்ளது. இந்த நாடே 2016-2017 காலத்திலும் 5.81 புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் இருந்தது. . அமெரிக்கா 5.85 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்திலும், சிங்கப்பூர் 5.71 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளன. 2016-2017 காலத்தில் அமெரிக்கா […]

அமெரிக்க Governor போட்டியில் இலங்கை தமிழ் பெண்

அமெரிக்காவின் மேரிலாண்ட் (Maryland) என்ற மாநிலத்து Governor தேர்தல் வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ளது. இந்த தேர்தலில் இலங்கை வம்சம் வந்த கிரிஷாந்தி விக்கினராசா (Krishanti Vignarajah) என்ற தமிழ் பெண்ணும் போட்டியிடுகிறார். . ஒபாமாவின் மனைவி Michelle Obama அமெரிக்காவின் first lady ஆக இருந்தபோது கிரிஷாந்தி policy director ஆக சுமார் 2 வருடங்கள் கடமை புரிந்தவர். இவர் அமெரிக்காவின் State Department பதவியையும் கொண்டிருந்தவர். அதற்கு முன்னர் சிக்காகோ சட்ட நிறுவனம் ஒன்றிலும் […]

ஜேர்மனியில் மீண்டும் அங்கெல மேர்க்கெல்

ஜேர்மனியில் இன்று இடம்பெறும் தேர்தலில் அந்நாட்டு அதிபர் (chancellor of Germany) அங்கெல மேர்க்கெல் (Angela Merkel) மீண்டும் அந்நாட்டு அதிபராக தெரிவு செய்யப்படவுள்ளார். முந்திவரும் தரவுகளின்படி அங்கெலவின் கட்சியான CDU (Christian Democratic Union) சுமார் 33% வாக்குகளை பெற்று முன்னணியில் உள்ளது. ஆனாலும் CDU கட்சிக்கு இம்முறை முன்னரிலும் 8.5% குறைவான ஆதரவே கிடைக்கிறது. . இரண்டாவது இடத்தில் உள்ள கட்சியான SPD (Social Democrtic Party) சுமார் 20.6% வாக்குகளை பெறுகிறது. ஐரோப்பிய […]

சீன உதவியுடன் அம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு

சீனாவின் உதவியுடன் அம்பாந்தோட்டையில் புதியதோர் எண்ணெய் குதத்தை அமைக்கவுள்ளதாக இன்று வெள்ளி இலங்கை அரசு கூறியுள்ளது. இந்த புதிய எண்ணெய் சுத்திகரிக்கும் கட்டுமானம் சுமார் $3 பில்லியன் செலவில் அமைக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 116,000 பரல் எண்ணெய்யை நாள் ஒன்றில் சுத்திகரிப்பு செய்யும். . இந்த திட்டத்துக்கு அமெரிக்காவின் குழு ஒன்று உட்பட மொத்தம் மூன்று குழுக்கள் போட்டியிட்டதாகவும், இறுதியில் சீனாவின் குழுவே அந்த உரிமையை வெற்றி கொண்டுள்ளதாகவும் இலங்கையின் Board of Investment […]

பர்மாவுக்கு ஆயுதங்கள் வழங்கவுள்ளது இந்தியா

பர்மாவுக்கு ஆயுதங்கள் வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்து உள்ளது. பர்மாவின் படைகள் அந்நாட்டு Rohingya மக்கள் மீது செய்யும் கொடுமைகளை உலகம் கண்டிக்கும் இந்த நேரத்திலேயே இந்தியா பர்மாவின் படைகளுக்கு ஆயுதங்களை வழங்க முன்வந்துள்ளது. . பர்மாவின் கடற்படை தளபதி தற்போது இந்தியாவுக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டு உள்ளார். இந்த பயண காலத்திலேயே மேற்படி ஆயுத விற்பனை தெடர்பாக உரையாடப்பட்டு உள்ளது. அத்துடன் பர்மாவின் கடற்படைக்கு இந்தியா பயிற்சிகளும் வழங்க இணங்கி உள்ளது. . நேற்று புதன்கிழமை […]

இலங்கையில் குழந்தை பண்ணைகள்

இலங்கையில் குழந்தை பண்ணைகள் இயங்கி வருவதாக கூறுகிறது நெதர்லாந்து தொலைக்காட்சி விவரண படக்காட்சி ஒன்று. Zembla என்ற இந்த நெதர்லாந்து தொலைக்காட்சி நிறுவனம் Adoptibedrog – Deel 2 என்ற தலைப்பில் இன்று செப்டம்பர் 20ம் திகதி மாலை 9:15 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்வே இலங்கையின் குழந்தை பண்ணைகளை அடையாளம் காண்கிறது. . இந்த குழந்தை பண்ணைகளில் இருந்து குழந்தைகள் வெளிநாட்டு கொள்வனவாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாம். 1980ம் ஆண்டுகளிலேயே இங்கிருந்து அதிகம் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டதாகவும், 1987 […]

மெக்ஸிக்கோவில் மீண்டும் நிலநடுக்கம்

இன்று செய்வாய் கிழமை மீண்டும் ஒரு நிலநடுக்கம் மெக்ஸிக்கோவை தாக்கியுள்ளது. மெக்ஸிக்கோவின் தலைநகரான Mexico Cityயை 7.1 அளவிலான (7.1 magnitude) இந்த நிலநடுக்கம் கடுமையாக தாக்கியுள்ளது. இந்த நடுக்கத்துக்கு பலியானோர் தொகை தற்போது 119 ஆக உள்ளது. . உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1:14 மணிக்கு இடம்பெற்ற இந்த நடுக்கத்துக்கு பல மாடி கட்டிடங்களும், பாலங்களும் உடைந்து வீழ்ந்துள்ளன. . அமெரிக்காவின் Geological Survey இந்த நடுக்கத்தின் மையம் Mexico Cityக்கு தெற்கே 122 km […]

1 2 3