Jet Airways சேவைகள் முடங்கலாம்

இந்தியாவின் Jet Airways விமான சேவை தனது சேவைகளை முடங்க வைக்கும் நிலைக்கு தள்ளப்படலாம் என்று கூறப்படுகிறது. சுமார் $1 பில்லியன் கடனில் உள்ள Jet Airways மேலும் பல தனது விமானங்களை சேவையில் இருந்து இடைநிறுத்தி வைத்துள்ளது. அந்த விமானங்களுக்கான குத்தகை பணத்தை செலுத்த முடியாமையே சேவை இடைநிறுத்தத்துக்கு காரணம். . Jet Airways விமான சேவையிடம் ஏறக்குறைய 100 விமானங்கள் உண்டு. அவற்றில் சுமார் 50 விமானங்களை தற்போது சேவையில் இருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. […]

முகேஷ் கடனை செலுத்த, அனில் சிறையை தவிர்த்தார்

இந்தியாவின் மிக பெரிய செல்வந்தர்களில் சகோதரர்களான முகேஷ் அம்பானியும், அனில் அம்பானியும் இருவர். தந்தையின் சொத்தை முதலாக கொண்டு இருவரும் வர்த்தகத்தில் வளர்ந்தனர். அவ்வப்போது தம்முள்ளே மோதியும் கொண்டனர். . அண்ணன் முகேஷின் மொத்த சொத்துக்கள் தற்போது சுமார் $52.9 பில்லியன் என்று கூறப்படுகிறது. இவர் தனது மகளின் திருமண விழாவுக்கு மட்டும் அண்மையில் சுமார் $200 மில்லியன் செலவு செய்திருந்தார். . ஆனால் அனில் அம்பானி விரைவில் தனது சொத்துக்களை இழந்து வந்தார். 2008 ஆம் […]

மொசாம்பிக்கில் சூறாவளிக்கு 1,000 பேர் வரை பலி

ஆபிரிக்க நாடான மொசாம்பிக்கை (Mozambique) கடந்த வியாழன் தாக்கிய Idai என்ற சூறாவளிக்கு சுமார் 1,000 பேர் பலியாகி உள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி கூறியுள்ளார். இந்த சூறாவளி Beira என்ற நகரை 177 km/h காற்று வீச்சில் தாக்கி உள்ளது. . சுமார் 500,000 மக்களை கொண்ட Beira நகரில் உள்ள அனைத்து கட்டிடங்களும் எதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டு உள்ளது என்று கூறுகிறது ஐ.நா. . இந்த நகருக்கும் நாட்டின் மற்றைய பகுதிகளுக்குமான பாதைகளும் முற்றாக […]

அஸ்ரேலிய குடிவரவு எதிர்ப்பு செனட்டருக்கு முட்டையடி

குடிவரவாளர்களுக்கு எதிரான கடும்போக்கை கொண்ட அஸ்ரேலிய செனட்டர் (Senator) Fraser Anning கின் தலையில் இளைஞர் ஒருவர் முட்டை அடித்துள்ளார். இதனால் ஆத்திரம் கொண்ட செனட்டர் இளைஞரை தாக்க, இருவருக்கும் இடையே மோதல் உண்டானது. சூழ இருந்தோர் விரைந்து இருவரையும் கட்டுப்படுத்தினர். . இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை மெல்பேர்ன் (Melbourne) நகரில் நிகழ்ந்துள்ளது. Hompton வாசியான 17 வயது இளைஞன் தனது இடது கையால் smart phone மூலம் வீடியோ எடுத்துக்கொண்டே வலது கையால் முட்டையை […]

8 ஆண்டு சிரியாவின் யுத்தத்துக்கு 370,000 பேர் பலி

அந்நியர்களால் ஆட்சி கவிழ்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் சிரியாவில் உருவாக்கப்பட்ட யுத்தத்துக்கு கடந்த 8 ஆண்டுகளில் சுமார் 370,000 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. . 2011 ஆம் ஆண்டு சவுதி, கட்டார், UAE, அமெரிக்கா உட்பட சில மேற்கு நாடுகள் அசாத்தை (Bashar al-Assad) பதவியில் இருந்து விலக்கி தமக்கு சாதகமான ஒருவரை பதவியில் அமர்த்த குழப்பத்தை உருவாக்கின. ஆரம்பத்தில் அசாத் பாரிய தோல்விகளை அடைந்து வந்தார். அனால் ரஷ்யாவும், ஈரானும், கூடவே லெபனானின் ஹொஸ்புல்லா இயக்கமும் […]

நியூசிலாந்து பள்ளிவாசல்களில் சூடு, 49 பேர் பலி

நியூசிலாந்தின் Christchurch நகரில் உள்ள இரண்டு இஸ்லாமிய பள்ளிவாசல்களில் இன்று வெள்ளிக்கிழமை, உள்ளூர் நேரப்படி பிற்பகல் சுமார் 1:30 மணியளவில், துப்பாக்கி சூட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளன. Al Noor மற்றும் Linwood பள்ளிவாசல்களிலேயே மேற்படி சூட்டு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. . இந்த இரண்டு தாக்குதல்களுக்கும் குறைந்தது 49 பேர் பலியாகி உள்ளனர்.மேலும் சுமார் 20 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். . அதேவேளை போலீசார் தாம் 3 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக கூறி உள்ளனர். அஸ்ரேலியாவை […]

அமெரிக்காவும் 737 MAX-8 விமானத்துக்கு தடை

அனைத்து Boeing தயாரிப்பான 737 MAX-8 மற்றும் மேலதிக நீளம் கொண்ட MAX-9 விமானங்களையும் சேவையில் இருந்து நீக்குமாறு அமெரிக்கா இன்று கட்டளை இட்டுள்ளது. முதலில் சீனாவே மேற்படி விமான பாவனைக்கு எதிராக இவ்வாறு முழு தடையை விதித்து இருந்தது. கூடவே இந்தோனேசியாவும், வேறு சில நாடுகளும் தடையை விதித்தன. . பின்னர் ஐரோப்பாவையும் தமது வான்பரப்புள் இந்த விமானத்தை தடை செய்தன. இறுதியில் இன்று அமெரிக்காவும், கனடாவும் தடையை விதித்து உள்ளன. . இந்த தடைகள் […]

அமெரிக்க பல்கலைக்கழக அனுமதியுள் ஊழல்

அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகங்களுக்கான அனுமதி பெற பெற்றார் பெரும் தொகை இலஞ்சம் வழங்கப்பட்டமை அறியப்பட்டுள்ளது. அது தொடர்பாக சுமார் 50 பேர் இன்று செவ்வாய் கைது செய்யப்பட்டும் உள்ளனர். கைது செய்யப்பட்டோருள் பல பிரபல ஹொலிவூட் நடிகைகளும் அடங்குவர். அவர்களுடன் மொத்தம் 33 பெற்றாரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். . அமெரிக்காவின் பிரபல Yale (1701), Stanford University (1891), University of Southern California, Wake Forest ஆகிய பல்கலைக்கழகங்களும் இந்த ஊழல் குற்றசாட்டுள் அடங்கி […]

பல நாடுகளில் 737 MAX-8 பாவனை இடைநிறுத்தம்

ஞாயிற்று கிழமை Ethiopian Airlines க்கு உரிய Boeing 737 MAX-8 விமானமும் (157 பேர் பலி), கடந்த அக்டோபர் மாதம் இந்தோனேசியாவின் Lion Air க்கு உரிய 737 MAX-8 விமானமும் (189 பேர் பலி) ஏறக்குறைய ஒரே முறையில் வீழ்ந்து நொறுங்கியதன் பின் பல நாடுகள் அவ்வகை விமானங்களை தமது நாடுகளில் இடைநிறுத்தம் செய்துள்ளன. . 2017 ஆம் ஆண்டு சேவைக்கு வந்திருந்த இந்த அதிநவீன விமானத்தில் பாரதூர கட்டமைப்பு (design) குறைபாடு இருக்கலாம் என்று […]

எதியோப்பிய விமானம் விபத்தில், 157 பேர் பலி

எதியோப்பியாவின் (Ethiopia) தலைநகர் அடிஸ் அபாபாவில் (Addis Ababa) இருந்து கென்யாவின் தலைநகர் நைரோபி (Nairobi) சென்ற Ethiopian Airlines விமானம் (Flight 302) கோளாறு காரணமாக வீழ்ந்ததில் 157 பேர் (149 பயணிகள் + 8 பணியாளர்) பலியாகி உள்ளனர். . உள்ளூர் நேரப்படி இன்று ஞாயிறு காலை 8:38 மணிக்கு மேலேறி விமானம், 6 நிமிடங்களின் பின், 8:44 மணிக்கு வீழ்ந்துள்ளது. இந்த Boeing 737 MAX 8 வகை விமானம் 4 மாதங்களுக்கு […]