இலங்கை தத்தெடுப்பில் 70% போலி பிறப்பு சான்றிதழ்கள்

1970 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரையான காலத்தில் சுமார் 750 இலங்கை குழந்தைகள் சுவிஸ் நாட்டவரால் தத்து எடுக்கப்பட்டு உள்ளனர். ஆனால் அந்த குழந்தைகளில் சுமார் 70% குழந்தைகளுக்கு பொய்யான பிறப்பு சான்றிதழ்கள் (birth certificates) பயன்படுத்தப்பட்டு உள்ளதாக புதிய ஆய்வுகள் அறிந்துள்ளன. . Swiss Canton of St. Gallen விடுத்துள்ள அறிக்கையே இந்த தகவலை வெளியிட்டு உள்ளது. இவ்விசயம் தொடர்பாக ஜேர்மன் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றும் நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பி […]

இந்திய விமானியை பாகிஸ்தான் விடுதலை

புதன் கிழமை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய இந்திய MiG விமானத்தின் விமானியைஉள்ளோர் நேரப்படி இன்று வெள்ளி இரவு 9:00 மணிக்கு பாகிஸ்தான் விடுதலை செய்துள்ளது. விடுதலை செய்யப்பட்ட Abhinandan Varthaman என்ற தமிழ்நாட்டு இராணுவ விமானி Wagah எல்லையை கடந்து இந்தியாவில் நுழைந்துள்ளார். அவரை பல்லாயிரம் இந்தியர் வரவேற்று உள்ளனர். . இவரின் யுத்த விமானம் காஸ்மீரை ஊடறுக்கும் பாகிஸ்தான்-இந்திய எல்லையை (Line of Control) கடந்து பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஸ்மீருள் நுழைந்த போதே சுட்டு […]

Hong Kong இல் முடங்கிய சவுதி சகோதரிகள்

தமது குடும்ப கட்டுப்பாடுகளை விரும்பாத இரண்டு சவுதி பெண்கள் அஸ்ரேலியாவுக்கு  தப்பி ஓட முனைந்து, தற்போது Hong Kong நகரில் முடங்கி உள்ளனர். . கடந்த செப்டம்பர் மாதம் இலங்கைக்கு குடும்பத்துடன் உல்லாச பயணம் வந்த இந்த 18 மற்றும் 20 வயதுடைய சகோதரிகள் அங்கிருந்து அஸ்ரேலியாவுக்கு தப்பி ஓடும் நோக்கில் Hong Kong சென்றுள்ளனர். ஆனால் உண்மையை அறிந்த சவுதி அரசு அந்த பெண்களின் சவுதி கடவுசீட்டுகளை Hong Kong இல் பறிமுதல் செய்துள்ளது. இவர்களின் […]

இணக்கம் எதுவும் இன்றி முடிந்தது ரம்ப்-கிம் சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி ரம்புக்கும், வடகொரிய தலைவர் கிம்முக்கும் இடையில் வியடனாமின் ஹனோய் (Hanoi) நகரில் இடம்பெற்ற இரண்டாம் சந்திப்பும் இணக்கம் எதுவும் இன்றி முன்னராகவே முடிந்துள்ளது. . சிங்கப்பூரில் இடம்பெற்ற முதலாவது சந்திப்பின்போது இருந்த அளவு எதிர்பார்ப்புகள் வியடனாம் சந்திப்பில் இருந்திருக்கவில்லை. ஆனாலும் இரண்டாம் சந்திப்பில் இருந்த குறைந்த அளவு எதிர்பார்ப்புகளும் நிறைவேறவில்லை. . வடகொரியா பொருளாதார தடையை முற்றாக நீக்கவேண்டும் என்று கேட்பதாகவும் அதை செய்ய முடியாது என்றும் ரம்ப்  கூறியுள்ளார். பொருளாதார தடையை முற்றாக […]

இந்திய விமானத்தை பாகிஸ்தான் வீழ்த்தியது

இந்தியாவின் 2 யுத்த விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் இன்று கூறியுள்ளது. அத்துடன் ஒரு இந்திய விமானியையும் கைப்பற்றி உள்ளதாகவும் பாகிஸ்தான் கூறி உள்ளது. . இந்தியா தமது தரப்பில் ஓர் MiG 21 யுத்த விமானத்தை இழந்துள்ளதாக கூறியுள்ளது. அத்துடன் ஒரு விமானியும் தவறியுள்ளார் என்றும் இந்தியா கூறியுள்ளது. இந்திய தரப்பு இழப்பை வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் Raveesh Kumar அறிவித்துள்ளார். . பாகிஸ்தான் தரப்பு இணையங்களில் வீழ்ந்த இந்திய விமானியை தாக்குவது போன்ற காட்சிகள் […]

பாகிஸ்தானை தாக்கின இந்திய விமானங்கள்

இந்திய விமானப்படை விமானங்கள் இன்று செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் உள்ளே பறந்து தாக்குதல்களை செய்துள்ளன. கடந்த கிழமை Pulwama என்ற இடத்தில் இந்திய பாதுகாப்பு போலீசார் மீது தடாத்திய தற்கொலை தாக்குதலுக்கு 40 இந்திய போலீசார் பலியாகி இருந்தனர். . இந்தியாவின் கூற்றுப்படி பாகிஸ்தானை தளமாக கொண்ட Jaish-e-Mohammmed என்ற ஆயுத குழுவே இந்த தாக்குதலை செய்துள்ளது. அத்துடன் பாகிஸ்தானில் உள்ள இந்த குழுவின் முகாம்கள் மீதே இந்திய விமானப்படை விமானங்கள் தாக்குதல் நிகழ்த்தியதாக இந்தியா கூறுகின்றது. . […]

கடும் காற்றில் தளம்பிய விமானம்

இன்று பிரித்தானியாவின் லண்டன் நகரில் இருந்து Gibraltar என்ற British Airways விமானம் கடும் காற்று காரணமாக தளம்பி உள்ளது. Gibraltar விமான நிலையத்தில் இறங்க முடியாத நிலையில், இந்த விமானம் இஸ்பெயின் நாட்டின் Malaga விமான நிலையத்தில் இறங்கி உள்ளது. . இன்று லண்டனில் இன்று காலை 8:25 மணிக்கு ஆரம்பித்த Flight BA 492 சேவையின் பயணிகள் காயம் எதுவும் இன்றி தரை இறங்கி உள்ளனர். . . .

இந்து சமுத்திர தீவுகளை பிரித்தானிய கைவிடவேண்டும்

இந்து சமுத்திரத்தில் உள்ள Chagos தீவுகளை பிரித்தானியா மீண்டும் Mauritius நாட்டிடம் கையளிக்க வேண்டும் என்று இன்று திங்கள் கேட்டுள்ளது ஐ.நா. நீதிமன்றம் (International Court of Justice). இந்த தீர்ப்பு சட்டபடியானது அல்ல (non-binding) என்றாலும், Mauritius நாட்டுக்கு இது ஒரு வெற்றியாகவே கருதப்படுகிறது. . இந்த தீவுகளிலேயே அமெரிக்காவின் டியேகோ கார்சியா (Diego Garcia) இராணுவ மற்றும் கடற்படை தளங்கள் உள்ளன. ஆசிய-பசுபிக் பகுதிகளில் அமெரிக்கா கொண்டுள்ள இரண்டு மிக பெரிய படை தளங்களுள் […]

பின்போட்ட அமெரிக்க-சீன வர்த்தக பேச்சு காலக்கெடு

மார்ச் 1 ஆம் திகதிக்கு முன் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் புதிய வர்த்தக இணக்கம் ஏற்படாவிடின் அமெரிக்கா சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% இறக்குமதி வரி அறவிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் முன்னர் கூறியிருந்தார். அதன்படி சனிக்கிழமை 2 ஆம் திகதி முதல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் அமெரிக்கா 25% இறக்குமதி வரி அறவிடவேண்டும். . ஆனால் இன்று ரம்ப் தனது கூற்றில் மார்ச் 1ஆம் திகதி ஆக […]

​வெனிசுவேலா எல்லைகளில் கலவரம், 4 பேர் பலி

வெனிசுவேலா எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் வெனிசுவேலாவுக்கு ​எடுத்துவரப்பட்ட உதவி பொருட்கள் வெனிசுவேலாவுள்ளே அனுமதிக்கப்படாதபோது எல்லை நகர்களில் கலவரங்கள் தோன்றி உள்ளன. இந்த கலவரங்களுக்கு இதுவரை 4 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. . உதவி பொருட்களை எடுத்து சென்ற வாகனங்கள் சில தீயிடப்பட்டும் உள்ளன. அவற்றில் இருந்த பொருட்களை கூடி நின்ற மக்கள் மீட்டனர். . அமெரிக்காவின் உதவி பொருட்களை தனது நாட்டின் ஊடு எடுத்துவர கொலம்பியா அனுமதித்தால், வெனிசுவேலா அரசு கொலம்பியாவுடனான உறவுகளை துண்டித்தும் […]