Brexit பின் பிரித்தானியா, பிரான்ஸ் Jersey தீவில் முரண்பாடு

Brexit பின் பிரித்தானியா, பிரான்ஸ் Jersey தீவில் முரண்பாடு

கடந்த சில தினங்களாக, Brexit பிரிவுக்கு பின், பிரித்தானியாவும், பிரான்சும் மீன்பிடி உரிமைகளில் முரண்பட ஆரம்பித்து உள்ளன. பிரான்சுக்கு அண்மையில், சுமார் 22 km தூரத்தில் அமைத்துள்ள Jersey என்ற பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள தீவை சுற்றி உள்ள கடலில் மீன் பிடிக்கும் உரிமையே இந்த முரண்பாட்டுக்கு காரணம். அண்மையில் Jersey தீவு அதை சுற்றி உள்ள கடலில் மீன் பிடிக்கும் உரிமைக்கு மேலும் சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியது. அதனால் பாதிக்கப்பட்ட பிரென்சு மீனவர் இன்று தமது […]

போதை கடத்தி சிறை சென்றவர் தாய்லாந்தில் அமைச்சர்

போதை கடத்தி சிறை சென்றவர் தாய்லாந்தில் அமைச்சர்

Thammanat Propao என்பவர் அஸ்ரேலியாவுக்கு heroin என்ற போதை கடத்த முயன்ற பொழுது அகப்பட்டு அஸ்ரேலியாவில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவர். தண்டனை முடிய இவர் தாய்லாந்துக்கு திருப்பி அனுப்பப்பட்டார். தாய்லாந்து திரும்பிய இவர் அங்கு இராணுவத்தின் ஆதரவுடன் அரசியலில் குதித்து அமைச்சரும் ஆனார். முன்னாள் இராணுவ captain ஆனா இவர் தாய்லாந்தில் இராணுவ ஆட்சி செய்யும் Prayuth Chan-ocha வின் ஆதரவுடனேயே அமைச்சர் ஆனார். 1993ம் ஆண்டு இவர் $3.1 மில்லியன் பெறுமதியான 3.2 […]

மாலி நாட்டு தாய் 9 குழந்தைகள் பெற்றார்

மாலி நாட்டு தாய் 9 குழந்தைகள் பெற்றார்

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியின் (Mali) 25 வயது பெண் ஒருவருக்கு 9 குழந்தைகள் பிறந்து உள்ளன. Halima Cisse என்ற இந்த பெண்ணுக்கு 5 பெண் குழந்தைகளும், 4 ஆண் குழந்தைகளும் நேற்று செய்வாய் பிறந்து உள்ளன. தாயும், ஒன்பது குழந்தைகளும் நலமாகவே உள்ளனர். ஒன்பது குழந்தைகளும் அறுவை சிகிக்சை (C-section) மூலமுமே பிறந்தனர். ஆனால் ultrasounds சோதனை 7 குழந்தைகள் வயிற்றில் இருந்ததை மட்டுமே காட்டி இருந்தது. இந்த பெண் மாலி நாட்டவர் ஏற்றாலும், […]

மெக்ஸிக்கோ ரயில் மேம்பாலம் இடிந்து 23 பேர் பலி

மெக்ஸிக்கோ ரயில் மேம்பாலம் இடிந்து 23 பேர் பலி

மெக்ஸிக்கோ (Mexico) நாட்டில் உள்ள Mexico City என்ற நகரில் சிறு ரயில் செல்லும் மேம்பாலம் ஒன்று ரயிலுடன்  இடிந்து வீழ்ந்துள்ளது. இந்த விபத்தில் குறைந்தது 23 பேர் பலியாகியும், 65 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர். பாலம் உடைந்து விழ, அதில் பயணித்த ரயிலும் முறிந்து வீழ்ந்துள்ளது. அப்பொழுது கீழே வீதியில் ஒரு கார் இருந்தாலும் அதன் சாரதி தப்பியுள்ளார். இந்த விபத்து உள்ளூர் நேரப்படி திங்கள் இரவு 10:00 மணியளவில் நிகழ்ந்துள்ளது. நகரின் தென்கிழக்கு […]

Microsoft Bill Gates, Melinda 27 ஆண்டுகளின் பின் விவாகரத்து

Microsoft Bill Gates, Melinda 27 ஆண்டுகளின் பின் விவாகரத்து

Microsoft நிறுவனத்தை ஆரம்பித்த Bill Gates (வயது 65) மற்றும் அவரின் மனைவி Melinda Gates இருவருக்கும் இடையிலான 27 ஆண்டு விவாகம் விவாகரத்தில் முடிகிறது. இருவரும் விவாகரத்துக்கு இணங்கி உள்ளனர். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உண்டு. இவர்கள் 1994ம் ஆண்டு விவாகம் செய்து இருந்தனர். தற்போது Bill Gates உலகில் 4வது பெரிய செல்வந்தர் என்றாலும், நீண்ட காலமாக இவரே உலகின் முதலாவது செல்வந்தராக இருந்தவர். 1995 முதல் 2010 வரையும், பின் 2013 முதல் […]

மரண தொகையை மறைக்க இந்தியா அழுத்தம்

மரண தொகையை மறைக்க இந்தியா அழுத்தம்

இந்தியாவில் கரோனாவுக்கு பலியாகும் மக்களின் தொகையை குறைக்க, மறைக்க இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகள் அழுத்தி வருவதாக சம்பவங்கள் காட்டுகின்றன. வழமையாக பாஜ ஆதரவு கொண்ட பத்திரிகைகளும் பொறுமையை இழந்து உண்மைகளை வெளியிட ஆரம்பித்து உள்ளன. வழமையாக பாஜ ஆதரவு கொண்ட Dainik Bhaskar என்ற ஹிந்தி மொழி பத்திரிகை “அரச தரவுகள் பொய், தகனங்கள் உண்மையை கூறுகின்றன” என்று முன்பக்க செய்தி வெளியிட்டு உள்ளது. ஏப்ரல் 15ம் திகதி Bhopal நகரில் 4 பேர் […]

இந்திய மாநில தேர்தல் முடிவுகள்

இந்திய மாநில தேர்தல் முடிவுகள்

மார்ச் மாதம் 27ம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 29ம் திகதி வரை இந்தியாவின் அசாம், கேரளா, பாண்டிச்சேரி (union territory), தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெற்று முடிவுகள் வெளிவருகின்றன. சட்டப்படியான இறுதி முடிவுகள் வெளிவரவில்லை என்றாலும், ஒவ்வொரு மாநிலத்திலும் கட்சிகளின் நிலைகள் பின்வருமாறு: அசாம் (126 ஆசனங்கள், பெரும்பான்மைக்கு 64):இங்கே BJP முன்னணியில் இருந்தாலும், பெரும்பான்மைக்கு தேவையான 64 ஆசனங்களை பெறுமா என்பது தற்போதும் கேள்விக்குறியே. […]

இந்திய நிகழ்வுகளும், இரண்டாம் கரோனா பரவலும்

இந்திய நிகழ்வுகளும், இரண்டாம் கரோனா பரவலும்

இந்தியாவின் இரண்டாம் கரோனா பரவலுக்கு அரசின் அசமந்த போக்கே பிரதான காரணம் என்பதை அக்கால நிகழ்வுகள் காட்டுகின்றன. பல நிகழ்விகளை மத்திய அரசு தடுத்து இருந்திருந்தால் கரோனா பரவல் தொடர்ந்தும் கட்டுப்பாடில் இருந்திருக்கும். பின்வரும் சில நிகழ்வுகள் அதை காட்டி நிற்கின்றன. ஜனவரி 28: கரோனாவை திறமையாக கட்டுப்படுத்துவதன் மூலம் இந்தியா உலகை காப்பாற்றி உள்ளது என்றார் பிரதமர் மோதி. இந்தியாவில் அன்றைய கரோனா தொற்று தொகை 18,855 மட்டுமே. மார்ச் 7: நாங்கள் கரோனா பரவலின் […]

இந்தியாவிலிருந்து அஸ்ரேலியா சென்றால் 5 ஆண்டு சிறை

இந்தியாவிலிருந்து அஸ்ரேலியா சென்றால் 5 ஆண்டு சிறை

இந்தியாவில் இருந்து அஸ்ரேலியா செல்வது குற்ற செயலாக நடைமுறை செய்யப்படவுள்ளது. அதன்படி அஸ்ரேலிய குடியுரிமை கொண்டோர் தமது நாடான அஸ்ரேலியாவுக்கு மீள முன்னான 14 தினங்களில் இந்தியா சென்று இருந்தால் அவர்கள் அஸ்ரேலியா சென்றவுடன் 5 ஆண்டுகள் சிறை செல்வதோடு, A$ 66,000 (சுமார் US$51,000) தண்டமும் செலுத்த நேரிடும். தற்போது சுமார் 9,000 அஸ்ரேலிய குடியுரிமை கொண்டோர் இந்தியாவில் உள்ளதாக கூறப்படுகிறது. அதில் 650 பேர் கரோனா தொற்றுக்கு சாதகமானவர்களாக கருதப்படுகிறது. இந்த சட்டம் மே […]

73 ஆண்டுகளின் பின் இலங்கை பொருளாதாரம் 3.6% வீழ்ச்சி

73 ஆண்டுகளின் பின் இலங்கை பொருளாதாரம் 3.6% வீழ்ச்சி

இலங்கையின் பொருளாதாரம் 2020ம் ஆண்டில் 3.6% வீழ்ச்சி அடைந்துள்ளது என்று கூறுகிறது வெள்ளிக்கிழமை வெளிவந்த இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை. கடந்த 73 ஆண்டுகளில் இதுவே மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி. இந்த வீழ்ச்சிக்கு கரோனா தொற்றும் ஒரு காரணம். கரோனாவுக்கு முன், 2019ம் ஆண்டில், இலங்கை 2.3% பொருளாதார வளர்ச்சியை கொண்டிருந்தது. 2020ம் ஆண்டில் இலங்கையின் கடனும் GDPயின் 101% ஆக இருந்துள்ளது. 2019ம் ஆண்டில் இலங்கையின் கடன் GDPயின் 86.8% ஆக மட்டுமே இருந்தது. இரண்டு […]