இஸ்ரேலில் யூதமத கூடல் நெரிசலுக்கு 50 பேர் பலி

இஸ்ரேலில் யூதமத கூடல் நெரிசலுக்கு 50 பேர் பலி

இஸ்ரேலில் இன்று வியாழன் இரவு இடம்பெற்ற மத கூடல் ஒன்றில் ஏற்பட்ட நெரிசலுக்கு குறைந்தது 50 பேர் வரை பலியாகி உள்ளனர். அத்துடன் மேலும் பலர் படுகாயம் அடைந்தும் உள்ளனர். ஏன் இந்த திடீர் நெரிசல் ஏற்பட்டது என்பது இதுவரை அறியப்படவில்லை. கரோனா காரணமாக இந்த கூடலை அதிகாரிகள் தடுத்து இருந்தும் சுமார் 100,000 கூட்டத்தில் கலந்திருந்தனர். இவர்கள் கடும்போக்கு (ultra-Orthodox) யூதர்கள். Mount Meron என்ற இடத்தில் ஒவொரு ஆண்டும் இடம்பெறும் இந்த கூட்டம் கடந்த […]

சீன விண்வெளி ஆய்வு கூடத்தின் முதல் பாகம் ஏவப்பட்டது

சீன விண்வெளி ஆய்வு கூடத்தின் முதல் பாகம் ஏவப்பட்டது

இன்று வியாழன் சீனா தான் அமைக்கவுள்ள China Space Station (CSS) என்ற விண்வெளி ஆய்வு கூடத்துக்கான முதல் பாகத்தை ஏவி உள்ளது. சீனாவின் விண்வெளி ஆய்வுகூட கட்டுமானம் மொத்தம் 11 ஏவல்களை கொண்டிருக்கும். அனைத்து ஏவல்களும் அடுத்த ஆண்டு இறுதிக்கு முன் முடிவடைந்து அந்த ஆய்வுகூடம் செயற்பட ஆரம்பிக்கும். இன்று ஏவப்பட்ட பாகமே பிரதான பாகமாகும். CSS சேவைக்கு வந்தபின் இது 6 பேரை கொள்ளக்கூடியதாக இருக்கும். மேலும் இரண்டு ஏவல்கள் மேலும் இரு பாகங்களை […]

தென்சீன கடலை நோக்கி பிரித்தானிய யுத்த கப்பல்கள்

தென்சீன கடலை நோக்கி பிரித்தானிய யுத்த கப்பல்கள்

தென்சீன கடலை நோக்கி பிரித்தானியாவின் 65,000 எடைகொண்ட HMS Queen Elizabeth என்ற புதிய விமானம் தாங்கி கப்பலுடன் பெரும் தொகையான யுத்த கப்பல்கள் செல்லவுள்ளன. சீனாவுக்கு எதிராக பிரித்தானியாவின் பலத்தை காண்பிப்பதே இந்த படையெடுப்பின் பிரதான நோக்கம். 1982ம் ஆண்டு இடம்பெற்ற Falklands War யுத்தத்துக்கு பின் பிரித்தானியா அனுப்பும் மிகப்பெரிய கப்பல் படையணி இதுவே. HMS Queen Elizabeth விமானம் தாங்கி கப்பலுடன் கூடவே HMS Defender, HMS Diamond, HMS Kent, HMS […]

அமெரிக்காவில் கரோனா மருந்துக்கு $100, அது செலவல்ல வரவு

அமெரிக்காவில் கரோனா மருந்துக்கு $100, அது செலவல்ல வரவு

அமெரிக்காவின் West Virginia மாநிலம் கரோனா தடுப்பு மருந்து பெறும் 16 முதல் 35 வயதுக்கு உட்பட்டோருக்கு $100 வழங்க முன்வந்துள்ளது. இந்த செய்தியை ஆளுநர் Jim Justice தெரிவித்து உள்ளார். மேற்படி வயதினரை தடுப்பு மருந்து பெற ஊக்குவிப்பதே நோக்கம். அந்த $100 சன்மானம் saving bond மூலமே வழங்கப்படும். பொதுவாக Republican கட்சி முன்னணியில் உள்ள மாநிலங்களில் கரோனா தடுப்பு மருந்துக்கு ஆதரவு இல்லை. ரம்ப் போன்ற அரசியல்வாதிகளின் பேச்சுகளும் காரணம். ஆனால் ரம்ப் […]

HRW: இஸ்ரேல் இனவெறி குற்றம் செய்கிறது

HRW: இஸ்ரேல் இனவெறி குற்றம் செய்கிறது

Human Rights Watch (HRW) இன்று செவ்வாய் வெளியிட்ட அறிக்கையில் இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்கு எதிராக இனவெறி குற்றங்கள் (crimes of apartheid and prosecutions) செய்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவை தளமாக கொண்ட இந்த அமைப்பின் 213 பக்கங்களை கொண்ட அறிக்கை இஸ்ரேல் தொடர்ந்தும் பாலத்தீனர்களை அடக்கி ஆள முனைகிறது என்று கூறியுள்ளது. ஆக்கிரமிப்புக்கு உள்ளன பாலஸ்தீனர் மட்டுமன்றி, இஸ்ரேலில் உள்ள இஸ்ரேல் குடிவாசிகளான பாலஸ்தீனர்களையும் இஸ்ரேல் அரசு இரண்டாம் தரத்தினராக அடிமைப்படுத்துகிறது என்று மேற்படி […]

மக்கள் வீதிகளில் மரணிக்க, அமர்நாத் யாத்திரை?

மக்கள் வீதிகளில் மரணிக்க, அமர்நாத் யாத்திரை?

இந்திய வைத்தியசாலைகள் கரோனா நோயாளிகளால் நிரம்பி, புதிதாக வரும் நோயாளிகள் கட்டில் இன்றி வைத்தியசாலைகளின் முன் வீதிகளில் மரணிக்க, இந்தியா அமர்நாத் (Amarnath Cave Temple) என்ற அடுத்த இந்து யாத்திரைக்கு தயாராகுகிறது. ஏப்ரல் மாதத்தில் திடீரென கரோனா தெற்று இந்தியாவில் அதிகரிக்க கும்பமேளா யாத்திரையும், அங்கு அண்மையில் இடம்பெற்ற தேர்தல் ஊர்வலங்களும் பிரதான காரணங்களாக இருந்தன. தற்போது அமர்நாத் யாத்திரையும் அதில் இணைய உள்ளது. இணையம் மூலம் அமர்நாத் யாத்திரைக்கு பதிவு செய்யும் திட்டம் இருந்திருந்தாலும் […]

இந்தியாவின் செல்வந்தர் லண்டனுக்கு தப்பியோட்டம்

இந்தியாவின் செல்வந்தர் லண்டனுக்கு தப்பியோட்டம்

இந்தியாவில் கரோனா கடுமையாக பரவும் காரணத்தால் பிரித்தானியா இந்தியர்களின் வரவை தடை செய்ய தீர்மானித்த பின் குறைந்தது 8 சொகுசு விமானங்களில் இந்தியாவின் பெரும் செல்வந்தர் (super rich) லண்டனுக்கு  தப்பி ஓடியுள்ளதாக லண்டன் Times செய்தி வெளியிட்டு உள்ளது. பிரித்தானியாவின் Red List தடை கடந்த வெள்ளி காலை 4:00 am மணிக்கு நடைமுறைக்கு வர இருந்த நிலையில், இந்தியாவில் இருந்து கடைசி சொகுசு விமானம் 3:15 am அளவில் லண்டன் விமான நிலையத்தில் இறங்கி […]

பாக்தாத் கரோனா வைத்தியசாலை தீக்கு 82 பேர் பலி

ஈராக்கின் தலைநகரான பக்தாத்தில் கரோனா நோயாளிகளை கொண்டிருந்த Ibn al-Khatib என்ற வைத்தியசாலையில் oxygen tank ஒன்று சனிக்கிழமை இரவு வெடித்ததால் தீ மூண்டு, அத்தீக்கு குறைந்தது 82 பேர் பலியாகி உள்ளனர். அத்துடன் மேலும் 110 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர். அந்த வைத்தியசாலையின் ICU தளத்திலேயே தீ பரவி உள்ளது. அந்த தளத்தில் ICU சேவை பெறும் 30 நோயாளிகள் இருந்ததாக கூறப்படுகிறது. ஞாயிரு அதிகாலையில் தீ கட்டுப்பாட்டுள் கொண்டுவரப்பட்டு உள்ளது. தீயில் இருந்து […]

சீனாவின் அதிக பலம் கொண்ட யுத்தக்கப்பல் சேவையில்

சீனாவின் அதிக பலம் கொண்ட யுத்தக்கப்பல் சேவையில்

நேற்று வெள்ளிக்கிழமை சீனா அதிக பலம் கொண்ட Type 075 வகை யுத்த கப்பல் ஒன்றை சேவைக்கு விட்டுள்ளது. இந்த Type 075 கப்பலே உலகில் இரண்டாவது அதிக பலம் கொண்டது. அமெரிக்காவின் USS Zumwalt யுத்த கப்பலே உலகத்தில் முதலாவது அதிக பலம் கொண்டது. சீனாவின் இந்த புதிய Type 075 யுத்த கப்பல் மொத்தம் 30 யுத்த ஹெலிகளை கொண்டிருக்கும். அத்துடன் இதில் முன்னும், பின்னுமாக இரண்டு ஏவுகணை ஏவிகள் உண்டு. ஒவ்வொன்றும் 64 […]

சீனா கரோனாவை கட்டுப்படுத்தியதை மறைவாக ஏற்கும் மேற்கு

சீனா கரோனாவை கட்டுப்படுத்தியதை மறைவாக ஏற்கும் மேற்கு

சீனா வெளியிடும் கரோனா தொடர்பான எல்லா அறிக்கைகளையும் நம்ப மறுக்கும் மேற்கு நாடுகள் சீனா கரோனா பரவலை திறமையாக தடுத்ததை தற்போது மறைமுகமாக ஏற்றுக்கொள்கின்றன. அமெரிக்கா வெளிநாடுகளுக்கு செல்லும் தனது மக்களுக்கு கரோனா தொடர்பான எச்சரிக்கையை Level 1 முதல் Level 4 வரையான அளவீடு மூலம் தெரிவிக்கிறது. அம்முறையில் Level 1 நாடுகள் குறைந்த (low) கரோனா ஆபத்தை கொண்டன, Level 4 நாடுகள் மிகையான ஆபத்தை (very high) கொண்டன. உலகின் சுமார் 80% […]