இன்று சனிக்கிழமை நாசா (NASA) தனது மிகப்புதிய RS-25 என்ற ஏவு இயந்திரத்தை ஒத்திகை செய்துள்ளது. மொத்தம் 8 நிமிடங்கள் இந்த பரிசோதனை இடம்பெற இருந்தாலும், 1 நிமிடம் 15 செக்கன்களில் பரிசோதனை இடைநிறுத்தப்படுள்ளது. பாதகமான தரவுகளே காரணம் என்றாலும், விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. வரும் காலங்களில் நாசா இந்த இயந்திரத்தை பயன்படுத்தியே அண்டவெளி பயணங்களை மேற்கொள்ளும். அண்டவெளி பயணங்களுக்கான ஏவுகலம் இந்த RS-25 என்ற பெயர்கொண்ட இயந்திரங்களில் நான்கை கொண்டிருக்கும். இந்த 4 இயந்திரங்களும் மொத்தம் […]
வரும் திங்கள்கிழமை வியாழனும் (Jupiter), சனியும் (Saturn) பூமியில் இருந்து பார்ப்பவருக்கு ஒரே நேர்கோட்டில் வரவுள்ளன. அதனால் வியாழனும், சனியும் ஏறக்குறைய ஒன்றாக தெரியும். சுமார் 800 ஆண்டுகளின் பின் இதை நாம் காணக்கூடியதாக இருக்கும். உண்மையில் இவ்வாறு வியாழனும், சனியும் 1623ம் ஆண்டும் ஏறக்குறைய ஒரே நேர்கோட்டில் வந்திருந்தன. ஆனால் அது சூரியன் பக்கமாக நிகழ்ந்ததால், சூரிய பிரகாசம் அதை கண்களால் காண்பதை முடியாமல் செய்திருந்தது. அதற்கு முன் 1226ம் ஆண்டு இரவு வேளையில் இரண்டும் […]
2021 ஆம் ஆண்டு முதல் சீனாவின் Huawei தனது சொந்த Operation System (OS) ஆனா Harmony OS 2.0 ஐ மட்டும் தனது smart phone களில் கொண்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது Huawei அமெரிக்க Google நிறுவனத்தின் Android OS ஐ மட்டுமே தனது smart phone களில் கொண்டுள்ளது. ரம்ப் அரசு சீனாவை தண்டிக்கும் நோக்கில் அமெரிக்க நிறுவனங்கள் Huawei க்கு தொழில்நுட்பங்களை வழங்குவதை தடை செய்திருந்தது. ரம்பின் தப்பு கணக்கு […]
அமெரிக்கா மீண்டும் சந்திரனுக்கு விஞ்ஞானிகளை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த திட்டத்துக்கு Artemis என்று பெயர் இடப்பட்டு உள்ளது. . இந்த திட்டத்தில் இணைய கனடா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஜப்பான், இஸ்ரேல், இந்தியா, அஸ்ரேலியா ஆகிய நாடுகளுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது. . அத்துடன் அமெரிக்கா ரஷ்யாவையும் இந்த திட்டத்தில் இணைக்க விரும்புகிறது. அதற்கான அழைப்பை NASA விடுத்து இருந்தாலும், ரஷ்யா இணையமறுத்துள்ளது. சீனாவுக்கு எதிரான அரசியல் அணி சேர்ப்பு இது என்கிறது ரஷ்யா. […]
நியோவைஸ் (Neowise, C/2020 F3) என்ற வால்வெள்ளியை (comet) வரும் சில நாட்களில் இலகுவாக காணக்கூடியதாக இருக்கும். பூமியின் மத்திய கோட்டுக்கு வடக்கே உள்ள நாடுகள் மட்டுமே இதை காணக்கூடியதாக இருக்கும். மத்திய கோட்டுக்கு தெற்கே உள்ள அஸ்ரேலியா போன்ற நாடுகள் காண முடியாது. . இந்த வால்வெள்ளி வரும் 23 ஆம் திகதி (ஜூலை 23) பூமிக்கு அண்மையில் செல்லும். அப்பொழுது இது பூமியில் இருந்து சுமார் 103 மில்லியன் km தொலைவில் இருக்கும். இதன் […]
அமெரிக்காவின் தனியார் நிறுவனமான SpaceX புதன்கிழமை (மே 27) இரண்டு அமெரிக்க விண்வெளிவீரரை International Space Station (ISS) க்கு எடுத்து செல்லவுள்ளது. கடந்த 9 ஆண்டுகளின் பின் அமெரிக்கர் ISS க்கு அமெரிக்காவின் கலத்தில் பயணிப்பது இதுவே முதல் தடவை. கடந்த 9 வருடங்களாக அமெரிக்கர் ரஷ்யாவின் ஏவுகலம் மூலமே ISS சென்று வந்தனர். . புதன்கிழமை Robert Behnken, Douglas Hurley ஆகிய இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்களே SpaceX கலத்தில் ISS செல்லவுள்ளனர். […]
வரும் சில மாதங்களில் செவ்வாய் கிரகத்துக்கு சீனா தனது ஆய்வு கலம் ஒன்றை அனுப்பவுள்ளது. செவ்வாய்க்கான சீனாவின் இந்த முதல் கலத்தின் பெயரை வெள்ளிக்கிழமை சீனாவின் CNSA (China National Space Administration) வெளியிட்டு உள்ளது. செவ்வாயின் தரையில் இறங்கி ஆய்வு செய்யவுள்ள 200 kg எடைகொண்ட சீன கலம் TianWen 1 என பெயரிடப்பட்டு உள்ளது. . TianWen என்பது “தேவலோகத்து கேள்விகள்” என்று கருத்தை கொண்டது. TianWen என்ற தலைப்பு 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட […]
தனது 5 ஆம் மற்றும் 6 ஆம் விமானம் தாங்கி கப்பல் தயாரிப்பு வேலைகளை சீனா இடைநிறுத்தி உள்ளது. புதிய தொழிநுட்பங்களை கொண்டதாக அந்த கப்பல்களை கட்டும் பணிகளில் ஏற்படுள்ள இடர்பாடுகள் தயாரிப்பு வேலைகளை இடைநிறுத்த காரணம் என்று கூறப்படுகிறது. . சீனா முதலில் சோவியத் கைவிட்ட விமானம் தாங்கி கப்பல் ஒன்றை கொள்வனவு செய்து, புதிதாய் மெருகூட்டி தனது முதலாவது (Type 001) விமானம்தாங்கியை தயாரித்தது. இது தற்போது சேவையில் உள்ளது. . முதலாம் விமானம் […]
இன்று திங்கள் அதிகாலை இந்தியா தனது Chandrayaan-2 என்ற சந்திரனுக்கான ஆளில்லா பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. இந்த பயணத்தின்போது இந்தியாவின் விண்கலம் சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கும். மனித கலம் ஒன்று சந்திரனின் தென் துருவம் போவது இதுவே முதல் தடவை. இங்கே நீர் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. . Geosynchronous Satellite Launch Vehicle Mark III என்ற இந்த ஏவுகலம் (Launch Vehicle) தன்னுள் 2,400 kg எடை கொண்ட orbiter, 1,500 kg எடை […]
பாதுகாப்பான இடங்களுக்குள் அனுமதி வழங்கல், வங்கிகள் போன்ற இடங்களில் ஆளை அடையாளம் கண்டு சேவை வழங்கல் போன்ற சேவைகளுக்கு முன்னர் password கொண்ட அடையாள அட்டைகள் (ID Card) பயன்படுத்தப்பட்டன. போலி அடையாள அட்டைகள், திருடப்பட்ட அடையாள அட்டைகள் ஆகியவற்றின் பாவனை அடையாள அட்டைகளின் நம்பகத்தன்மையை கேள்விக்குறி ஆக்கியது. அத்துடன் திருட்டுகளை தவிர்க்க வேறு வழிமுறை காணப்படவேண்டிய அவசியம் ஏற்பட்டது. . அடையாள அட்டைகள் நம்பகத்தன்மையை இழந்த போது கை ரேகை (fingerprint reader), கண்விழி (iris […]