மொசாம்பிக் நகரை ஆயுத குழு கைப்பற்றியது, பலர் பலி

மொசாம்பிக் நகரை ஆயுத குழு கைப்பற்றியது, பலர் பலி

மொசாம்பிக் என்ற கிழக்கு ஆபிரிக்க நாட்டின் Palma என்ற எண்ணெய்வளம் கொண்ட நகரை இஸ்லாமிய ஆயுத குழு ஒன்று கைப்பற்றி உள்ளது. இந்த மோதலுக்கு வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட பலர் பலியாகி உள்ளனர். பிரான்சின் Total என்ற எண்ணெய் அகழ்வு நிறுவனம் தனது 1,000 ஊழியர்களை அங்கிருந்து வெளியேற்றுகிறது. பிரான்சின் Total என்ற எண்ணெய் அகழ்வு நிறுவனம் Palma வில் சுமார் $20 பில்லியன் செலவில் எரிவாயு (Liquefied Natural Gas) அகழ்வு வேலைகளை செய்து வந்தது. […]

போர்க்களம் ஆனது மியன்மார், இன்று 114 பேர் பலி

போர்க்களம் ஆனது மியன்மார், இன்று 114 பேர் பலி

கடந்த பெப்ருவரி 1ம் திகதி முதல் மியன்மாரில் இராணுவ கவிழ்ப்பு மூலம் ஆட்சியை கைப்பற்றிய இராணுவத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு இன்று சனிக்கிழமை மட்டும் குறைந்தது 114 பேர் பலியாகி உள்ளனர். இன்று சுட்டு கொலை செய்யப்பட்டோருள் 13 வயது சிறுமி ஒருத்தியும் அடங்குவர். பெப்ருவரி 1ம் திகதி முதல் இன்று வரை சுமார் 400 பேர் அங்கு பலியாகி உள்ளனர். அத்துடன் அங் சன் சு கீ உட்பட சுமார் 3,000 பேர் கைது செய்யப்பட்டும் உள்ளனர். […]

சீனா, ஈரான் 25 ஆண்டு வர்த்தக ஒப்பந்தம்

சீனா, ஈரான் 25 ஆண்டு வர்த்தக ஒப்பந்தம்

சீனாவும், ஈரானும் 25 ஆண்டு கால வர்த்தக உடன்படிக்கை ஒன்றில் இன்று சனிக்கிழமை கையொப்பம் இட்டுள்ளன. இந்த வர்த்தக ஒப்பந்தப்படி சீனா $400 பில்லியன் பெறுமதியான முதலீட்டை ஈரானில் செய்யும். இந்த ஒப்பந்தம் சீனாவுக்கு மத்திய கிழக்கில் ஆளுமையை செலுத்தவும் வழிவகுக்கும். சீனாவின் வெளியுறவு அமைச்சர் Wang Yi, ஈரான் வெளியுறவு அமைச்சர் Javad Zarif ஆகியோர் ஈரான் தலைநகர் தெகிரானில் இன்று உடன்படிக்கையில் கையொப்பம் இட்டனர். ஈரானின் வங்கித்துறை, தொலைத்தொடர்பு, துறைமுகம், வைத்தியத்துறை, தொழில்நுட்பம் ஆகிய […]

அடானியை வளர்க்கிறார் பிரதமர் மோதி?

அடானியை வளர்க்கிறார் பிரதமர் மோதி?

இந்தியாவின் தற்போதைய இரண்டாவது பெரிய செல்வந்தர் அடானியே (Gautam Shantilal Adani). அம்பானிக்கு அடுத்து தற்போது இவரே இந்தியாவின் பெரிய செல்வந்தர். இவர் 1981ம் ஆண்டில் தனது சகோதரனின் பொலித்தீன் இறக்குமதியில் தனது வர்த்தக முயற்சிகளை ஆரம்பித்து இருந்தாலும் அண்மை காலங்களிலேயே அவர் வேகமாக பெரும் செல்வந்தர் ஆனார். குறிப்பாக மோதி ஒவ்வொரு புதிய அரச கொள்கைகளை அறிமுகம் செய்யும் காலத்தில் அடானி அந்த துறையில் வர்த்தகம் செய்ய ஆரம்பித்து வருகிறார். நீண்ட காலமாக நிலக்கரியை பெரும் […]

பந்துல: டாலருக்கான மாற்று விகிதம் ரூபா 350 ஆகலாம்

பந்துல: டாலருக்கான மாற்று விகிதம் ரூபா 350 ஆகலாம்

அமெரிக்க டாலர் ஒன்றுக்கான இலங்கை நாணயத்தின் மாற்று விகிதம் ரூபா 250, 300 அல்லது 350 ஆகலாம் என்று கூறியுள்ளார் இலங்கை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன. ஆனாலும் எப்போது இலங்கை நாணயம் அந்த மாற்று விகிதங்களை அடையும் என்று அவர் கூறவில்லை. தற்போது அமெரிக்க டாலருக்கான இலங்கை நாணய மாற்று விகிதம் சுமார் Rs 200 ஆக உள்ளது. இலங்கை 1948ம் ஆண்டு சுதந்திரம் அடைந்தபோது ஒரு அமெரிக்க டாலருக்கான இலங்கை ரூபா மாற்று விகிதம் […]

சுயஸ் கால்வாயை தடுக்கிறது புதைந்த பெரும் கப்பல்

சுயஸ் கால்வாயை தடுக்கிறது புதைந்த பெரும் கப்பல்

சுயஸ் கால்வாய் (Suez Canal) ஊடு சென்ற மிக பெரியதோர் கொள்கலன் கப்பலின் அடிப்பாகம் மண்ணுள் புதைந்து உள்ளதால் அந்த கால்வாய் ஊடு செல்லும் கப்பல் போக்குவரத்துக்கு முற்றாக தடைப்பட்டு உள்ளது. இத்தடை ஐரோப்பாவில் சில பொருட்களுக்கு தற்காலிக தட்டுப்பாட்டை ஏற்படுத்தலாம். அங்கு எரிபொருள் விலையும் அதிகரிக்கலாம். தாய்வானின் Evergreen நிறுவனத்துக்கு சொந்தமான Ever Given என்ற கப்பலே புதைந்து உள்ளது. இந்த கப்பல் 400 மீட்டர் நீளமும், 59 மீட்டர் அகலமும் கொண்டது. இதன் மொத்த […]

பங்களாதேச ரோஹிங்கியா முகாமில் தீ, பலர் பலி

பங்களாதேச ரோஹிங்கியா முகாமில் தீ, பலர் பலி

மியன்மாரில் இருந்து அகதிகளாக இடம்பெயர்ந்து பங்களாதேசத்தில் தங்கியிருந்த ரோஹிங்கியா அகதிகளின் Balukhali முகாமில் ஏற்பட்ட தீக்கு குறைந்தது 20 அகதிகள் பலியாகி உள்ளனர். அத்துடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இங்கு சுமார் 1 மில்லியன் ரோஹிங்கியா அகதிகள் தங்கி உள்ளனர். ஐ.நா. அகதிகள் அமைப்பின் பிரதிநிதி Louise Donovan குறைந்தது 400 அகதிகளை தற்போதும் காணவில்லை என்றுள்ளார். அத்துடன் சுமார் 45,000 பேர் மீண்டும் அகதிகள் ஆகினர் என்றும் கூறியுள்ளார். அகதி முகாமை சுற்றி வைக்கப்பட்டு […]

இலங்கைக்கு எதிராக UNHRC வாக்களிப்பு, இந்தியா கபடம்

இலங்கைக்கு எதிராக UNHRC வாக்களிப்பு, இந்தியா கபடம்

இன்று செவ்வாய் இடம்பெற்ற இலங்கை தொடர்பான வாக்களிப்பில் UNHRC தீர்மானத்துக்கு ஆதரவாக 22 நாடுகள் வாக்களித்து உள்ளன. மொத்தம் 47 வாக்குகள் கொண்ட அவையில் 14 நாடுகள் வாக்களியாத நிலையில் தீர்மானம் வெற்றி பெற்றது. பாம்புக்கு வாலும் மீனுக்கு தலையும் காட்டும் இந்தியா வாக்களியாது இன்று மறைந்து (abstained) உள்ளது. ஆனால் வாக்களிப்புக்கு முன் இந்தியா 13ம் திருத்தத்துக்கு அமைய இலங்கை செயற்படவேண்டும் என்று அறிக்கை விடுத்துள்ளது. கூடவே பஹ்ரைன், கமரூன், இந்தோனேசிய, ஜப்பான், லிபியா, நேபாள், […]

ஜெனீவாவில் இலங்கை வாக்கெடுப்பு செவ்வாய்க்கு பின்போடல்

ஜெனீவாவில் இலங்கை வாக்கெடுப்பு செவ்வாய்க்கு பின்போடல்

ஜெனீவாவில் இடம்பெறவிருந்த UNHRC சபையின் இலங்கை மீதான தீர்மானத்துக்கான வாக்கெடுப்பு இன்று திங்கள்கிழமை இடம்பெற திட்டமிடப்பட்டு இருந்தாலும், இறுதி நேரத்தில் அது செவ்வாய்க்கிழமைக்கு பின்போடப்பட்டு உள்ளது. கால அட்டவணை தயாரிக்கும் நெருக்கடியே காரணம் என்று கூறப்பட்டு உள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை சனாதிபதி கோத்தபாயா Organization of Islamic Cooperation (OIC) செயலாளருடன் தொலைபேசி தொடர்பு கொண்டு இலங்கைக்கு இறுதி நேர ஆதரவு தேடியுள்ளார். அதேவேளை பிரதமர் மகிந்த பஹ்ரைன் நாட்டின் Deputy King உடன் உரையாடி இறுதி […]

அஸ்ரேலியாவில் தொடரும் வெள்ள அனர்த்தம்

அஸ்ரேலியாவில் தொடரும் வெள்ள அனர்த்தம்

அஸ்ரேலியா தொடர்ந்தும் வெள்ள அனர்த்தத்தால் பாரிய பாதிப்பை அடைந்து வருகிறது. அங்கு பல்லாயிரம் மக்கள் இடம்பெயர்ந்து உள்ளனர். மாடுகள் போன்ற பண்ணை மிருகங்கள் மிதமான வெள்ளத்துள் மூழ்கி மரணிக்கின்றன. சில மரணித்த மாடுகளின் உடல்கள் கடலில் இருந்து மீட்கப்பட்டு உள்ளன. மாடு ஒன்று தனது தலையை மட்டும் நீரின் மேல உயர்த்தி பிடித்து தன்னை பாதுகாக்க முனைவது வீடியோ ஒன்றில் பதிவாகி உள்ளது. குறிப்பாக New South Wales பகுதியே மிகையான வெள்ளத்தை கொண்டுள்ளது. இங்கு கடந்த […]