சீன திட்டத்துக்கு இலங்கையை அழைக்கிறது பாகிஸ்தான்

சீன திட்டத்துக்கு இலங்கையை அழைக்கிறது பாகிஸ்தான்

பாகிஸ்தானில் சீனா செய்துவரும் China-Pakistan Economic Corridor (CPEC) திட்டத்தில் இலங்கையையும் இணைய பாகிஸ்தான் அழைத்து உள்ளது. அந்த அழைப்பை இலங்கை சென்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விடுத்துள்ளார். இந்த அழைப்பு இந்தியாவுக்கு கவலையை அளித்துள்ளது. அனால் இந்தியா பகிரங்கமாக கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. அரபு கடலோரம் பாகிஸ்தானில் அமைக்கப்படும் பெரிய Gwadar துறைமுகம், அந்த துறைமுகத்தை சீனாவின் Kashgar நகருடன் இணைக்க அமைக்கப்படும் Gwadar-Lahore-Islamabad-Kashgar ரயில் பாதை இரண்டும் CPEC திட்டத்தின் பிரதான பாகங்கள். […]

25 பேர் பயணித்த 8-ஆசன வாகனம் விபத்தில், 13 பேர் பலி

25 பேர் பயணித்த 8-ஆசன வாகனம் விபத்தில், 13 பேர் பலி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்து ஒன்றில் 13 பேர் பலியாகி உள்ளனர். அவர்களை பயணித்த Ford Expedition SUV வாகனத்தில் 8 பேருக்கு மட்டுமே ஆசனங்கள் உண்டு. ஆனால் அதில் 25 பேர் பயணித்து உள்ளனர். அந்த வாகனம் இரண்டு பெட்டிகளை இழுத்து செல்லும் கனரக வாகனம் ஒன்றின் குறுக்கே சென்று விபத்துக்கு உள்ளானது. பலியானோர் மெக்ஸிக்கோவில் இருந்து அமெரிக்காவுக்கு சென்ற அகதிகள் என்று கூறப்படுகிறது. அன்று குறைந்தது 44 பேர் எல்லை வேலியில் […]

பர்மாவில் மேலும் 38 ஆர்ப்பாட்டகாரர் பலி

பர்மாவில் மேலும் 38 ஆர்ப்பாட்டகாரர் பலி

பர்மாவில் பெப்ரவரி 1ம் திகதி இராணுவ கவிழ்ப்பு மூலம் ஆட்சிக்கு வந்திருந்த இராணுவ ஆட்சியை எதிர்த்து நடைபெறும் ஆர்பாட்டங்களுக்கு இன்று புதன்கிழமை 38 பேர் பலியாகி உள்ளதாக ஐ.நா. கூறியுள்ளது. அத்துடன் மேலும் பலர் காயப்பட்டும் உள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமையும் 18 ஆர்பாட்டக்காரர் படைகளால் கொலை செய்யப்பட்டு இருந்தனர். பெப்ருவரி 1ம் திகதி ஆட்சி கவிழ்ப்பு முதல் இதுவரை குறைந்தது 59 ஆர்பாட்டகாரர் படைகளால் கொலை செய்யப்பட்டு உள்ளனர். பெப்ருவரி 1ம் திகதி சனநாயக தேர்தல் மூலம் […]

சீனாவில் 1,058 Billionaires, அமெரிக்காவில் 696

சீனாவில் 1,058 Billionaires, அமெரிக்காவில் 696

2020ம் ஆண்டில் கரோனா உலக வர்த்தகத்தை பாதித்து இருந்தாலும், சீனாவில்  Billionaires உருவாகுவது குறையவில்லை. 2020ம் ஆண்டில் அங்கு மொத்தம் 1,058  Billionaires இருந்துள்ளனர். ஆனால் அதே காலத்தில் அமெரிக்காவில் 696  Billionaires மட்டுமே இருந்துள்ளனர். உலகில் முதலாவதாக ஒரு நாடு ஆயிரத்துக்கும் அதிகமான Billionaires வகுப்பை கொண்டது சீனாவிலேயே. கடந்த ஆண்டில் மட்டும் உலகில் 610 புதிய Billionaires உருவாகினர். அதிலும் 318 பேர் சீனர், 95 பேர் அமெரிக்கர் என்று கூறுகிறது Hurun Report. […]

இந்தியாவின் மனித எலும்பு கொண்ட வாவி

இந்தியாவின் மனித எலும்பு கொண்ட வாவி

இந்தியாவின் வடக்கே, உத்தரகண்ட் (Uttarakhand) மாநிலத்தில், உள்ள திரிசூல் (Trisul) மலையோரம் Roopkund Lake என்ற சிறு வாவி உண்டு. அது கடல் மட்டத்தில் இருந்து 5,029 மீட்டர் (16,500 அடி) உயரத்தில் உள்ள வாவி. பொதுவாக snow நிறைந்த இந்த வாவியின் அடியில் சுமார் 600 முதல் 800 வரையான மனிதர்களின் எலும்புகள் உள்ளன. 1942ம் ஆண்டு பிரித்தானியர் ஒருவர் இங்கு மனித எலும்புகள் இருப்பதை பதிவு செய்துள்ளார். ஆனால் இந்த எலும்புகள் யாருடையவை, எப்போது […]

பர்மாவில் 18 ஆர்ப்பாட்டகாரர் பலி

பர்மாவில் 18 ஆர்ப்பாட்டகாரர் பலி

பர்மாவில் இராணுவ கவிழ்ப்பு மூலம் ஆட்சிக்கு வந்திருந்த இராணுவ ஆட்சியை எதிர்த்து நடைபெறும் ஆர்பாட்டங்களுக்கு இன்று ஞாயிரு 18 பேர் பலியாகி உள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் கூறியுள்ளது. அத்துடன் மேலும் 30 பேர் காயப்பட்டும் உள்ளனர். பெப்ருவரி 1ம் திகதி அங்கு இராணுவ கவிழ்ப்பு இடம்பெற்று இருந்தது. சனநாயகம் மூலம் தெரிவு செய்யப்பட்ட Aung San Suu Kyi உடனே இராணுவத்தால் கைது செய்யப்பட்டு இதுவரை தடுப்பில் உள்ளார். மேலும் சுமார் 1,000 Aung […]

அமெரிக்காவில் 1-ஊசி கரோனா தடுப்பு மருந்து

அமெரிக்காவில் 1-ஊசி கரோனா தடுப்பு மருந்து

அமெரிக்காவின் FDA (Food and Drug Administration) இன்று சனிக்கிழமை Johnson & Johnson நிறுவனத்தின் கிளை நிறுவனமான Janssen தயாரிக்கும் கரோனா தடுப்பு மருந்தை அங்கீகாரம் செய்துள்ளது. ஏனைய கரோனா தடுப்பு மருந்துகள் 2 ஊசிகளை கொண்டிருக்க, Janssen மருந்து 1 ஊசியை மட்டுமே கொண்டுள்ளது. இந்த மருந்து சுமார் 66% வெற்றிகரமானது. அமெரிக்காவில் அங்கீகாரம் பெறும் மூன்றாவது கரோனா தடுப்பு மருந்து இதுவாகும். ரஷ்ய, சீன மருந்துகள் அமெரிக்காவில் அங்கீகாரம் பெற இதுவரை விண்ணப்பித்து […]

நைஜீரியாவில் மேலும் 317 மாணவிகள் கடத்தல்

நைஜீரியாவில் மேலும் 317 மாணவிகள் கடத்தல்

நைஜீரியாவின் வடமேற்கு பகுதில் உள்ள Zamfara மாநிலத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆயுததாரர் 317 மாணவிகளை கடத்தி உள்ளனர் என்கிறது அந்நாட்டு போலீஸ். இது கடந்த ஒரு கிழமைக்குள் இடம்பெறும் இரண்டாவது கடத்தல். மேற்படி மாணவிகள் Jangebe என்ற நகரத்தில் உள்ள Government Girls Science Secondary School என்ற பாடசாலையில் இருந்தே கடத்தப்பட்டு உள்ளனர். அவர்களை தேடும் பணியில் இராணுவம் உள்ளதாக அரசு கூறுகிறது. கடந்த டிசம்பர் மாதம் 344 மாணவன்கள் வடமேற்கு பகுதியில் உள்ள Kankara […]

கசோகி கொலை அறிக்கையை அமெரிக்கா வெளியிடும்

கசோகி கொலை அறிக்கையை அமெரிக்கா வெளியிடும்

2018ம் ஆண்டு பத்திரிகையாளர் கசோகியை (Jamal Khashoggi) துருக்கியில் உள்ள சவுதி தூதுவரகத்துள் படுகொலை செய்ததை அமெரிக்காவின் உளவுப்படை ஆராய்ந்து, அறிக்கை ஒன்றை ரம்ப் காலத்து அமெரிக்க அதிகாரிகளுக்கு வழங்கி இருந்தது. ஆனால் சவுதி மீது விருப்பு கொண்டிருந்த முன்னாள் சனாதிபதி ரம்ப் அந்த அறிக்கை பகிரங்கத்துக்கு வருவதை தடுத்து இருந்தார். ஆனால் தற்போதைய அமெரிக்க சனாதிபதி பைடென் அந்த அறிக்கையை விரைவில் பகிரங்கம் செய்யவுள்ளார். அதில் குறிப்பாக சவுதியின் இளவரசர் Mohammed bin Salman படுகொலையில் […]

அம்பாந்தோட்டை குத்தகை 198 ஆண்டுகளுக்கு நீடிக்கலாம்

அம்பாந்தோட்டை குத்தகை 198 ஆண்டுகளுக்கு நீடிக்கலாம்

சீனாவுக்கான இலங்கையின் அம்பாந்தோட்டைதுறைமுக குத்தகை தேவைப்பட்டால் 198 ஆண்டுகளுக்கு நீடிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. முதல் 99 ஆண்டு குத்தகையின் முடிவில் மேலும் ஒரு 99 ஆண்டுகளுக்கு குத்தகையை நீடிக்க குத்தகை இணக்கத்தில் இடம் உண்டு என்று கூறப்படுகிறது. இந்த ‘தவறை’ முன்னைய அரசு செய்துள்ளது என்று கூறுகிறார் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன. சீனாவிடம் இருந்து பெற்ற கடன் தொல்லையால் 2017ம் ஆண்டு செய்யப்பட்ட இந்த குத்தகை இணக்கத்தை மாற்ற முனைவதாக இலங்கை அரசின் உறுப்பினர்கள் கூறி […]