ஆப்கானிஸ்தான் இலஞ்ச தொகை $3.9 பில்லியன்

2012 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இலஞ்சமாக கொடுக்கப்பட்ட மொத்த தொகை US$ 3.9 என்கிறது UN அறிக்கை ஒன்று. இது அந்நாட்டின் மொத்த உள்நாட்டு வருமானத்தின் இரண்டு மடங்கு எனப்படுகிறது. இலஞ்சம் கொடுப்பதை வாழ்வில் ஒரு அங்கமாக கருதுகிறார்கள் பெரும்பாலான ஆப்கானிஸ்தான் மக்கள். இங்கு அதிகம் இலஞ்சம் பெறுவது நீதிபதிகளும், அரச சட்டத்துரையினருமே. இவர்கள் பெறும் சராசரி இலஞ்சம் சுமார் $300. வைத்திய துறையினர் சராசரி $100 பெறுகின்றனர். இலஞ்சம் காரணமாக கடந்த கார்த்திகை மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியம் […]

பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் விண்கல் 2012 DA14

வரும் வெள்ளிக்கிழமை (மாசி மாதம் 15 ஆம் திகதி) 2012 DA14 என்ற விண்கல் பூமிக்கு மிக அண்மையில் செல்லவுள்ளது. இந்த கல்லின் பாதை வழமையாக செய்மதிகள் சுற்றிவரும் பாதையை ஊடறுத்து செல்கிறது. ஆனாலும் இந்த கல்லால் பூமிக்கு எந்தவித பாதிப்பும் நிகழ மாட்டாது என NASA அறிவித்துள்ளது. மெரும்பாலான செய்மதிகள் பூமியில் இருந்து சுமார் 35,000 km உயரத்தில் சுற்றும். இந்த விண்கல் அந்த தூரத்திலேயே ஊடறுத்து செல்லும். பூமிக்கும் சந்திரனுக்கும் இடையேயான தூரம் சுமார் 385,000 km. இந்த […]

$5 பில்லியன் குற்றப்பணம் செலுத்தும் S&P

அமெரிக்க அரசு S&P (Standard and Poor”s) என்ற credit rating நிறுவனத்தை $5 பில்லியன் குற்றப்பணம் செலுத்துமாறு பணித்துள்ளது. இந்த நிறுவனம் பல தரக்குறைவான சொத்து நிறுவனங்களுக்கு அதியுயர் மதிப்பீடான AAA ஐ வழங்கியதால், பல முதலீட்டாளர்கள் அந்த நிறுவனங்களில் முதலீடு செய்து பின் 2008-2009 களில் பாரிய நட்டத்தை அடைந்திருந்தனர். அமெரிக்க மத்திய அரசு மட்டுமன்றி, 13 மாநில அரசுகளும் S&P  இக்கு எதிராக மேலும்பல வழக்குகளை தொடர்ந்துள்ளன. உதாரணமாக கலிபோர்னிய மாநிலம் $4 பில்லியன் நட்டஈடு கேட்டுள்ளது. […]

சாலமன் தீவு பகுதியில் 8.0 நிலநடுக்கம்

இன்று புதன்கிழமை சாலமன் தீவுகளுக்கு அண்மையில் 8.0 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நடுக்கம் 1.5 மீட்டர் உயர அலைகளை உருவாக்கி இருந்தாலும் பாதிப்புகள் அதிகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்துக்கு அண்மையில் உள்ள Vanuath என்ற இடத்தில் 11 cm வரையான அலைகள் தென்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் நிலைய கூற்றுப்படி இந்த நிலநடுக்கம் Lata என்ற இடத்தில் இருந்து 81 km மேற்கே, 5.8 km ஆழத்தில் இடம்பெற்றுள்ளது. சுமார் 200 தீவுகளை கொண்ட சாலமன் தீவுகளின் […]

எகிப்தில் ஈரானிய ஜனாதிபதி Ahmadinejad

சுமார் 32 வருடங்களின் பின் ஈரானிய ஜனாதிபதி ஒருவர் எகிப்துக்கு பயணம் செய்துள்ளார். மாசி மாதம் 6 ஆம் திகதி எகிப்தில் நடைபெற உள்ள Organisation of Islamic Cooperation (OIC) இல் பங்கு கொள்வதற்காக அங்கு சென்ற Ahmadinejad எகிப்திய ஜனாதிபதி மோர்சி உட்பட பல உயர்மட்ட எகிப்திய அதிகாரிகளை சந்திக்கவுள்ளார். 1980 களில் எகிப்து அமெரிக்காவின் கைப்பொம்மை ஆனபின், எகிப்துவுக்கும் ஈரானுக்கும் இடையில் உறவுகள் முறிந்திருந்தன. அம்முறிவு முபாரக் பதவியில் இருந்து 2012 ஆம் ஆண்டில் துரத்தப்படும்வரை நீடித்தது. […]

FIFA உட்பட உதைபந்து போட்டிகளில் ஊழல்

Europol என்ற ஐரோப்பிய சங்க காவல்துறை பிரிவு செய்த விசாரணைகளின்படி, கடந்த 18 மாதங்களில் ஐரோப்பாவில் நடைபெற்ற 380 உதைபந்தாட்ட போட்டிகளிலும் ஐரோப்பாவுக்கு வெளியே 300 வரையான உதைபந்தாட்ட போட்டிகளில் திட்டமிட்டு தோல்விகளை தழுவுதல் (match-fixing) நடைபெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்போட்டிகளின் போது ஊழல் குழுக்கள் பந்தயங்களை நடைமுறைப்படுத்தி, பின் திட்டமிட்டு தரமான குழுக்களுக்கு தோல்வியை கொடுத்து இலாபம் அடைந்துள்ளன. இவ்வாறு செய்வதன் மூலம் US $11 மில்லியன் வரை இலாபம் அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் உண்மையான தொகை இதைவிடவும் அதிகமாக இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்கு […]

சீனாவில் வாணவேடிக்கை வாகன விபத்து, 9 பேர் பலி

சீனாவின் G30 என்ற பெரும்தெருவில் உள்ள 30 மீட்டர் உயரமான பாலம் ஒன்றில் வாணவேடிக்கை பொருட்களை ஏற்றி சென்ற பாரிய வாகனம் ஒன்று வெடித்ததால் 80 மீட்டர் நீள பாலத்துண்டு உடைந்து வீழ்ந்துள்ளது. அப்போது அதில் சென்றுகொண்டிருந்த சுமார் 25 வாகனங்களும் 30 மீட்டர் வரை வீழ்ந்ததால் 9 பேர் பலியாகியும் பலர் காயமடைந்தும் உள்ளனர். உள்ளூர் நேரப்படி இவ்விபத்து காலை 8:50 அளவில் இடம்பெற்றுள்ளது. 4400 km நீளமான G30 பெரும்தெரு சீனாவில் கிழக்கு-மேற்காக செல்லும் நீளம் கூடிய பெரும்தெரு ஆகும். மாசி […]

மெக்ஸிகோவில் வெடிவிபத்து, 14 பேர் பலி

மெக்ஸிகோவின் அரச எரிபொருள் நிறுவனமான PeMex இனது தலைமையகத்தில் இடம்பெற்ற வெடிவிபத்துக்கு 14 பேர் பலியாகியும், 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். மேலும் சிலர் இன்னமும் இடிபாடுகளுள் உள்ளனர். இந்த வெடிப்பு உள்ளூர் நேரப்படி இன்று வியாழன் பிற்பகல் 3:30 மணியளவில் மெக்ஸிகோவின் தலைநகர் Mexico City யில் இடம்பெற்றுள்ளது. இந்த 51 மாடி கட்டடத்தின் நிலக்கீழ் பகுதியில் ஏற்பட்ட மின் ஒழுக்கும் எரி வாயு ஒழுக்கும் இவ் வெடிப்புக்கு காரணமாகி இருக்கலாம் என நம்பப்படுகிறது. ஆனால் வெடிப்பின் காரணம் உத்தியோக பூர்வமாக இதுவரை வெளியிடப்படவில்லை. […]