தப்புக்கணக்கு போட்டு தற்பெருமையில் மோதி

2014 ஆம் ஆண்டு ஆரம்பித்த தனது ஆட்சி காலத்தில் 35 புதிய விமான நிலையங்கள் கட்டப்பட்டதாக கூறி இந்திய பிரதமர் மோதி அண்மையில் புகழ்ச்சி அடைந்துள்ளார். ஆனால் தரவுகள் அவரின் கூற்றில் உண்மை இல்லை என்று நிரூபிக்கின்றன. . அவர் தனது கூற்று ஒன்றில் “2014 ஆம் ஆண்டுவரை, சுதந்திரம் அடைந்து 67 ஆண்டு காலத்தில், 65 விமான நிலையங்களே இருந்தன.” என்றும் தற்போது 100 விமான நிலையங்கள் உள்ளதாகவும் கூறியுள்ளார். அதாவது தனது காலத்தில் 35 […]

இந்தோனேசியாவின் சுனாமிக்கு 384 பேர் பலி

நேற்று வெள்ளி (September 28) மாலை இந்தோனேசியாவை தாக்கிய 7.5 அளவிலான நில நடுக்கம் சுனாமியையும் தோற்றுவித்தது. தற்போது வெளிவரும் செய்திகளின்படி இந்த சுனாமிக்கு குறைந்தது 384 பேர் பலியாகி உள்ளனர். இத்தொகை மேலும் அதிகரிக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. . இந்தோனேசியாவின் Sulawesi தீவை தாக்கிய இந்த சுனாமி சுமார் 380,000 குடியிருப்பாளரை கொண்ட Palu என்ற நகரையே கடுமையாக தாக்கி உள்ளது. மேற்குறிப்பிடப்பட்ட 384 பேரும் Palu நகரிலேயே பலியாகி உள்ளனர். அதேவேளை Donggala நகரும் […]

Elon Musk மீது பங்குச்சந்தை ஊழல் குற்றச்சாட்டு

இலான் மஸ்க் (Elon Musk) என்ற பிரபல தொழில்நுட்ப துறை வர்த்தகர் மீது அமெரிக்காவின் SEC (Securities and Exchange Commission) பங்குச்சந்தை ஊழல் குற்றச்சாட்டை பதிந்துள்ளது. . 1971 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்காவில் பிறந்த இவர் தனது 17ஆவது வயதில் கனடாவுக்கு இடம்பெயர்ந்து இருந்தார். கனடாவின் Queen’s Universityயில் பயில ஆரம்பித்த இவர் இரண்டு வருடங்களின் பின்னர் அமெரிக்கா சென்று தனது உயர் படிப்பை தொடர்ந்தார். . முதலில் Zip2 என்ற தொழில்நுட்ப நிறுவனத்தை […]

அங்கோலாவில் முன்னாள் ஆட்சி மகன் கைது

ஆபிரிக்க நாடான அங்கோலாவின் (Angola) முன்னாள் ஜனாதிபதி Jose Eduardo dos Santos என்பவரின் மகனான Zenu என்று அழைக்கப்படும் Jose Filomeno dos Santos அந்நாட்டு புதிய அரசால் ஊழல் குற்றசாட்டுகள் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார். . Zenuவின் தந்தை அங்கோலாவை 1979 ஆம் ஆண்டு முதல் 2017 ஆண்டுவரை ஆட்சி செய்தவர். ஜனாதிபதியான தந்தை 2013 ஆம் ஆண்டில் 35 வயதான மகனை அங்கோலாவின் sovereign wealth fund குக்கு chairman ஆக நியமித்தார். […]

சிரியாவுக்கு S-300, அமெரிக்கா, இஸ்ரேல் குமுறல்

சிரியாவுக்கு தனது S-300 ஏவுகணைகளை விற்பனை செய்ய ரஷ்யா இன்று திங்கள் தீர்மானித்துள்ளது. இந்த ஏவுகணைகள் இரண்டு கிழமைகளுக்குள் சிரியாவை அடையும் என்றும் கூறப்படுகிறது. இதனால் அமெரிக்காவும், இஸ்ரேலும் விசனம் கொண்டுள்ளன. . சில தினங்களுக்கு முன் சிரியாவை தாக்க சென்ற இஸ்ரேல் யுத்த விமானங்களை நோக்கி சிரியா தனது S-200 வகை ஏவுகணையை ஏவி இருந்தது. உடனே இஸ்ரேல் விமானங்கள் அங்கு பறந்துகொண்டிருந்த ரஷ்ய வேவுபார்க்கும் விமானம் ஒன்றி பின் மறைந்து கொண்டன. அதனால் ஏவப்பட்ட […]

மாலைதீவு தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி?

மாலைதீவில் ஞாயிறுக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் தாமே வென்றுள்ளதாக எதிர்க்கட்சி கூட்டணி கூறியுள்ளது. அத்துடன் எதிரணி வேட்பாளர் Ibrahim Mohamed Solih தனது ஆட்சியை அங்கரிக்குமாறும் கேட்டுள்ளார். இந்தியாவும் உடனடியாக எதிர்க்கட்சி தலைவரை வாழ்த்தி உள்ளது. ஆனால் மேலும் பல நாட்களுக்கு சட்டப்படியாக முடிவுகள் அறிவிக்கப்பட மாட்டாது. . தற்போது ஆட்சியில் உள்ள ஜனாதிபதி Abdulla Yameen இடம்பெற்ற தேர்தல் தொடர்பாக இதுவரை எந்தவொரு கருத்தையும் தெரிவித்து இருக்கவில்லை. . தற்போதைய ஜனாதிபதியின் கட்சி (PPM, Progressive […]

மோதி மீது புதிய ஊழல் குற்றச்சாட்டு

2016 ஆம் ஆண்டில் இந்தியாவின் மோதி அரசு 36 Rafale யுத்த விமானங்களை பிரான்ஸிடம் இருந்து $8.7 பில்லியனுக்கு கொள்வனவு செய்திருந்தது. அந்த கொள்வனவின் ஊழல் இடம்பெற்று இருக்கலாம் என்று தற்போது கருதப்படுகிறது. . இந்திய சட்டப்படி இவ்வகை கொள்வனவின் 30% இந்தியாவில் முதலீடு செய்யப்படல் அவசியம். அதன்படி இந்திய செயல்பாடுகளுக்கு மோதி தனது நண்பர் அனில் அம்பானியின் Reliance Group நிறுவனத்தை பலவந்தமாக புகுத்தி உள்ளார்  என்று தற்போது அறியப்படுகிறது. அத்துடன் இந்த கொள்வனவுக்கு, ஊழல் […]

ஈரான் இராணுவ ஊர்வலம் மீது தாக்குதல், 24 பேர் பலி

இன்று சனிக்கிழமை ஈரானில் இடம்பெற்ற இராணுவ ஊர்வலம் ஒன்றின் மீது குறைந்தது 4 ஆயுததாரிகள் தாக்கியதில் 24 பேர் பலியாகியும், சுமார் 50 பேர் காயமடைந்தும் உள்ளனர். மரணித்தோரில் பொதுமக்களும் அடங்குவார். ஆயுதாரிகளில் 3 பேர் கொல்லப்பட்டும், ஒருவர் அகப்பட்டும் உள்ளார் என்றும் கூறப்படுகிறது. . இந்த தாக்குதல் ஈரான்-ஈராக் எல்லையோரம் உள்ள Khuzestan Ahvaz என்ற தென்மேற்கு மாகாணத்தின் தலைநகர் Ahvaz இல் இடம்பெற்று உள்ளது. . தாக்குதல் செய்த ஆயுததாரிகள் இராணுவ உடையிலேயே அங்கு […]

சீனா S-400, Su-35 கொள்வனவு, அமெரிக்கா தடை

சீனா ரஷ்யாவின் நவீன S-400 ஏவுகணைகளையும், பத்து Su-35 யுத்த விமானங்களையும் கொள்வனவு செய்ததை காரணம் கூறி, அமெரிக்காவின் CAATSA விதிகளின் கீழ், சீனா மீது சில தடைகளை விதித்துள்ளது அமெரிக்கா. பதிலுக்கு தாமும் அமெரிக்காவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறியுள்ளனர் சீன அதிகாரிகள். . Equipment Development Department என்ற சீன இராணுவ தளபாட கொள்வனவு திணைக்களம், அதன் அதிகாரி Li Shangfu உட்பட சிலர் மீது அமெரிக்கா இந்த தடையை விதித்துள்ளது. . உண்மையில் […]

பிரான்சில் மாணவர்க்கு smartphone தடை

இந்த மாதம் முதல் பிரான்சில் மாணவர்கள் பாடசாலையில் smartphone பயன்படுத்துவது அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. வகுப்பறை மட்டுமன்றி, பாடசாலையின் மைதானம் போன்ற பகுதிகளிலும் இந்த smartphone பயன்பாட்டு தடை நடைமுறையில் இருக்கும். . முதலாம் வகுப்பு மாணவர் முதல் ஒம்பதாம் வகுப்பு மாணவர் வரை இந்த தடைக்கு உள்ளாவர். . கடந்த வருட கணிப்பின்படி, பிரான்சில் 12 வயது முதல் 17 வயது வரையான மாணவர்களுள் 93% மாணவர்கள் smartphone வைத்திருந்துள்ளனர். . மாணவர்கள் smartphone களை […]

1 2 3