ஒரு நாளுக்கு மேலாக சிரியாவில் அமைதி

சிரியாவில் 2011 ஆம் ஆண்டில் வெளிநாடுகளின் ஆதரவுடன் ஆரம்பித்து அண்மை வரை தொடர்ந்த யுத்தம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் ரஷ்ய ஜனாதிபதி பூட்டினும் இறுதியாக இணங்கி கொண்டதற்கு அமைய இந்த இருகிழமை யுத்த நிறுத்தம் 24 மணித்தியாலங்களுக்கு மேலாக அங்கு அமைதியை பேணுகிறது. . இந்த யுத்த நிறுத்தத்தின் முக்கிய நோக்கம் அங்கு அகப்பட்டு தவிக்கும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்ல வழி செய்வதே. ஐ.நா. கணிப்புப்படி குறைந்தது 30 இடங்கள் […]

Ransomware மூலம் வைத்தியசாலை பணயம் வைப்பு

ஜேர்மன் நாட்டு Neuss நகரில் உள்ள Lukas என்ற வைத்தியசாலை ransomware என்ற தொழில்நுட்ப வகை பணயம் வைத்தலுக்கு ஆளாகி உள்ளது. இவ்வாறு பல நிறுவனங்கள் ransomware மூலமான பாதிப்புக்கு உள்ளானாலும் ஒரு சில நிறுவனங்களே விடயத்தை பகிரங்கப்படுத்துகின்றன. ஏனையவை பணயக்காரர் கேட்கும் தொகையை வழங்கி தம்மை பாதுகாக்கின்றன. . தற்காலத்தில் வர்த்தக நிறுவனங்கள், வைத்தியசாலைகள் போன்ற எல்லா நிறுவனங்களும் தமது தரவுகளை கணனிகளில் சேமித்து வைக்கின்றன. அந்த கணனிகள் Internet தொடர்பையும் கொண்டிருக்கின்றன. சிலவேளை உலகின் […]

தென்சீன கடலுள் சீனாவின் யுத்த விமானங்கள்

தற்போது சர்ச்சைக்குரிய தென்சீன கடலில் (South China Sea) உள்ள Woody தீவுக்குள் சீனா தனது யுத்த விமானங்களை நகர்த்தியுள்ள செய்தியை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. Woody தீவு சர்ச்சைக்குரிய Paracel தீவு தொகுதிகளில் ஒன்றாகும். இச்செய்திப்படி சீன நனது Shenyang J-11 மற்றும் JH-7 வகை யுத்த விமானங்களை Woody தீவுக்கு நகர்த்தி உள்ளது. Paracel தீவுகளை சீனா மட்டுமன்றி தாய்வானும் வியட்னாமும் உரிமை கூறியுள்ளன. . கடந்த கிழமை சீனா இந்த Woody தீவுக்குள் HQ-9 […]

அமெரிக்காவின் Supreme Court நீதிபதியாக இந்திய தமிழர்?

அமெரிக்க Supreme Court நீதிபதிகளில் ஒருவரான Antonin Scalia மரணம் அடைந்ததன் காரணமாக நீதிபதிகளுக்கான வெற்றிடம் ஒன்று தோன்றியுள்ளது. அந்த வெற்றுடத்தை நிரப்ப ஜனாதிபதி ஒபாமா முனைகிறார். சட்டப்படி ஒபாமாவுக்கு அந்த உரிமை உண்டு. . ஆனால் தற்போது ஜனாதிபதி தேர்தல் வேலைகள் நடைபெறுவதால், அடுத்த ஜனாதிபதியிடம் அந்த பொறுப்பை விடும்படி எதிர் கட்சியான Republican கூறுகிறது. . ஒபாமா அந்த வெற்றிடத்தை நிரப்ப குறிப்பட்ட சிலரை கணிப்பீடு செய்வதாக கூறப்படுகிறது. அவ்வாறு கருத்தில் கொண்டோரில் ஒருவர் […]

சிரியாவில் 4 குண்டுகளுக்கு 140 பேர் பலி

சிரியாவில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இடம்பெற்ற 4 குண்டு தாக்குதல்களுக்கு 140 பேர் வரை பலியாகியுள்ளதுடன் 200 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர். சிரியாவின் டமாஸ்கஸ் (Damascus) மற்றும் Homs ஆகிய நகர்களிலேயே இந்த தாக்குதல்கள் இடம்பெற்று உள்ளன. அவற்றில் இரண்டு கார் குண்டு தாக்குதல்கள் என்றும் இரண்டு தற்கொலை தாக்குதல்கள் என்றும் கூறப்படுகிறது. . இந்த நகர்களில் பெரும்பாலும் அசாத் ஆதரவு மக்களே குடியுள்ளனர். இந்த நகர்கள் முன்னரும் பலதடவைகள் தாக்குதல்களுக்கு உள்ளாகி இருந்தன. கடந்த மாதம் […]

சுமார் 8% மரக்கூழ் கொண்ட அமெரிக்க Parmesan cheese

அமெரிக்காவில் தயாரிக்கப்படும் Parmesan என்ற cheese வகையில் சுமார் 8% மரக்கூழ் என்ற உண்மை வெளியாகியுள்ளது. அத்துடன் இவ்வாறு cheese மரக்கூழை கொண்டிருப்பது அமெரிக்க அரசால் அனுமதிக்கப்பட்ட முறைமையே. பொதுவாக 1% முதல் 2% வரையான பங்கே மரக்கூழ் ஆக இருப்பது அனுமதிக்கப்பட்டு இருந்தாலும் சில அமெரிக்க Parmesan cheese தயாரிப்புகள் 8% வரை மரக்கூழாக உள்ளதாம். . Parmesan cheese திரண்டு கட்டியாகாமல் இருப்பதற்காகவே இவ்வாறு மரக்கூழ் சேர்க்கப்படுகிறது. உண்மையில் இது நன்கு அரைக்கப்பட்டு cellulose […]

Ghanaவில் விபத்து, 71 பேர் பலி

ஆபிரிக்காவின் மேற்கே உள்ள நாடான கானாவில் (Ghana) இடம்பெற்ற பஸ்-கனரக வாகன மோதலுக்கு 71 பேர் பலியாகியுள்ளதுடன் பலர் படுகாயமடைந்தும் உள்ளனர். அரச பஸ் சேவையான Metro Mass Transit க்கு சொந்தமான பஸ்சும் தக்காளி ஏற்றி சென்ற கனரக வாகனமுமே இவ்வாறு மோதியுள்ளன. . உள்ளூர் நேரப்படி இந்த விபத்து புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. இரண்டு வாகனங்களும் ஒரு திருப்பமான வீதியில் விதிமுறைக்கு மிதமான வேகத்தில் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. . பயணிகள் சென்ற பஸ் வேறு […]

கியூபா செல்கிறார் ஒபாமா

அடுத்த மாதம் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கியூபா செல்லவுள்ளார். சுமார் 90 வருடங்களின் பின் பதவியில் உள்ள அமெரிக்க ஜனாதிபதி கியூபா செல்வது இதுவே முதல் தடவை. 2014 ஆம் ஆண்டு அமெரிக்காவும் கியூபாவும் தம்மிடையே உறவுகளை புதிப்பித்ததன் பின் இரண்டு நாடுகளுக்கும் இடையில் பல தொடர்புகள் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளன. . கடந்த வருடம் இரு தரப்பும் தூதுவர் மனைகளை ஆரம்பித்து இருந்தன. மார்கழியில் இரண்டு நாடுகளும் தமக்குள் தபால் சேவையை ஆரம்பித்து இருந்தன. கடந்த […]

துருக்கி குண்டு தாக்குதலுக்கு 28 பேர் பலி

துருக்கியின் தலைநகர் அன்கராவில் (Ankara) இடம்பெற்ற குண்டு தாக்குதல் ஒன்றுக்கு 28 பேர் பலியாகியுள்ளதுடன் 60க்கும் மேலானோர் காயமடைந்துள்ளனர். உள்ளூர் நேரப்படி புதன்கிழமை பிற்பகல் 6:30 மணியளவில் அந்நாட்டின் இராணுவ தலைமையும் அமைந்துள்ள இடத்திலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. . இந்த தாக்குதலுக்கு எவரும் இதுவரை உரிமை கொண்டாடவில்லை. . துருக்கி தற்போது மூன்று எதிரிகளுடன் போராடுகிறது. அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளுடன் இணைந்து IS என்ற குழுவுக்கு எதிராக போராடுகிறது. அதேவேளை அமெரிக்க ஆதரவுடன் போராடும் […]

Yemenனில் சவுதி cluster குண்டுகளை பாவித்தது

சிரியாவைப்போல் சவுதிக்கு தெற்கே உள்ள யெமென் (Yemen) என்ற நாட்டிலும் வெளிநாடுகளால் உருவாக்கப்பட்ட ஒரு பன்முக யுத்தம் நடைபெறுகிறது. அந்நாட்டின் அரச தரப்புக்கு சவுதியும் சிறுபான்மை இனத்தை கொண்ட எதிர் தரப்புக்கு ஈரானும் உதவி வருகின்றன. எதிர்தரப்பு கட்டுப்பாடில் வைத்துள்ள இடங்களில் சவுதி தமது யுத்த விமானங்கள் மூலம் குண்டுகளை போடுகிறது. . Human Rights Watch (HRW) என்ற அமைப்பு வெளிட்ட அறிக்கையின்படி சவுதி அங்கு அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட cluster குண்டுகளை குடியிருப்பு பகுதிகளில் வீசியுள்ளதாம். […]