MiG பெறுமதி $7.83 மில்லியன், செலுத்தியது $15.66 மில்லியன்

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க (Udayanga Weeratunga) மீதான வழக்கு தொடர்பாக இலங்கை அரசு சமர்ப்பித்த ஆவணங்களின்படி இலங்கை அரசு 2006 ஆம் ஆண்டில் $7.83 மில்லியன் பெறுமதியான பாவித்த MiG விமானங்களுக்கும், அவற்றை பராமரிக்கும் சேவைகளுக்கும்மிகையான தொகையான $15.66 மில்லியன் பணத்தை வழங்கி உள்ளது. . அப்போதைய மகிந்த ராஜபக்ச அரசு மேற்படி கொள்வனவு யுக்கிரைன் மற்றும் இலங்கை ஆகிய இரண்டு அரசுகளுக்கும் நேரடியா இடையில் செய்யப்பட்ட ஒப்பந்தம் என்று கூறி இருந்தாலும், […]

பிரித்தானிய Conservative கட்சியின் பாதுகாப்பில் Lyca?

இலங்கையில் பிறந்தவரான சுபாஷ்கரன் அல்லிராஜா (Subaskaran Alliraja) என்பவரால் பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்டது Lycamobile என்ற நிறுவனம். இந்த நிறுவனம் பெருமளவு பண கடத்தலில் (money laundering) ஈடுபட்டுள்ளது என்ற கூறி பிரான்ஸ் செய்யும் விசாரணைகளுக்கு பிரித்தானியாவின் Conservative அரசாங்கம் இணங்க மறுத்துள்ளது. . Lycamobile நிறுவனம் தொடர்பான தகவல்களை BuzzFeed News என்ற செய்தி நிறுவனம் பெருமளவில் பகிரங்கப்படுத்தி வருகின்றது. இந்த செய்தி நிறுவனம் மீது Lycamobile வழக்கும் தொடர்ந்துள்ளது. . இந்த செய்தி நிறுவன கூற்றுப்படி […]

தென்கொரியாவுள் புகுந்தார் வடகொரிய தலைவர்

இன்று வெள்ளி வடகொரியாவின் தலைவர் கிம் ஜோங் உன் தென்கொரியாவுள் புகுந்து, தென்கொரிய ஜனாதிபதியை சந்தித்து உள்ளார். சுமார் 65 வருடங்களுக்கு முன்னர் உருவாகிய வட-தென் கொரியாக்களுக்கு இடையிலான எல்லையை வடகொரிய தலைவர் கடப்பது இதுவே முதல் தடவை. . எல்லையின் வடகொரியா பக்கத்தில் உள்ள Panmungak என்ற கட்டிடத்தில் இருந்து வெளியேறிய வடகொரியாவின் கிம், எல்லை கோடுவரை வந்துள்ளார். எல்லையில் அவரை வரவேற்ற தென்கொரிய ஜனாதிபதி தென்கொரியாவுள் நுழைய அழைத்துள்ளார். தெற்கே வந்த வடகொரிய கிம், […]

மலை உடைந்ததாலேயே அணு பரிசோதனை இடைநிறுத்தம்?

அண்மை காலம் வரை பெருமளவு அணு குண்டு பரிசோதனைகளை செய்துவந்த வடகொரிய தலைவர் திடீரென அவ்வகை அணு பரிசோதனைகளை தாம் நிறுத்துவதாக கூறியிருந்தார். இந்த தீர்மானத்தை வடகொரியா சுயமாகவே எடுத்திருந்தது. உலகம் வடகொரியாவின் இந்த மன மாற்றைத்தை அறிந்து வியந்தும் இருந்தது. . ஆனால் தற்போது சீனாவில் இருந்து வெளிவரும் சில அறிக்கைகள் வடகொரியா அணு குண்டு பரிசோதனைகளை செய்யும் மலை பகுதி அண்மையில் வெடிக்கப்பட்ட மிக பெரிய குண்டுகளின் தாக்கம் காரணமாக உடைந்து வீழ்ந்துள்ளது என்கின்றன. […]

இந்திய பிரதமர் மோதி சீனா பயணம்

இந்திய பிரதமர் மோதி சீனாவுக்கு பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்த மாதம் 27ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் இந்திய பிரதமர் மோதி சீனாவின் ஜனாதிபதியை சீனாவின் மத்திய பகுதியில் உள்ள வூகான் (Wuhan) நகரத்தில் சந்திக்கவுள்ளார். . இந்த சந்திப்பு ஒரு ‘informal’ சந்திப்பு என்று கூறப்பட்டாலும், இவர்கள் இருவரும் மிக முக்கிய விடயங்களை கலந்துரையாடுவார்கள் கூறப்படுகிறது. அனால் பேசப்படும் விடயங்கள் எதுவும் பகிரங்கம் செய்யப்படவில்லை. . அண்மையில் சீனாவின் Xiamen நகரில் இடம்பெற்ற BRICS மாநாட்டின்போது […]

நாட்டுக்கு அனுப்பும் பணத்தில் இந்தியா முதலிடம்

அந்நிய நாடுகளில் வாழும் அல்லது தொழில் புரியும் மக்கள் தம் நாடுகளுக்கு பணம் அனுப்புவது வளமை. இவ்வகை பணத்தை (remittances) பெறும் நாடுகளில் முதலாவதாக உள்ளது இந்தியா. 2017 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு $69 பில்லியன் பணம் இவ்வகையில் கிடைத்துள்ளது என்கிறது உலக வங்கி (Worl Bank). இத்தொகை 2016 ஆம் ஆண்டுக்கான தொகையிலும் 9.9% அதிகம். ஆனால் 2014 ஆம் ஆண்டிலேயே இந்தியா அதிக தொகையான $70.4 பில்லியன் பணத்தை இவ்வகையில் பெற்றிருந்தது. . இரண்டாவது […]

விமானத்தில் வழங்கிய அப்பிள், தண்டம் $500

அமெரிக்காவுள் எடுத்துவரப்படும் பல பொருட்களுக்கு பெரும் தடைகள் உண்டு. அவற்றுள் சில பொருட்கள் தடுத்துவைப்பின் பின் உரிமையாளரிடம் விடுவிக்கப்படும், ஏனையவை அழிக்கப்படும். உயிரினங்கள், தாவரங்கள், இறைச்சி, முட்டை, மரங்கள் என பல பொருட்கள் இந்த தடைக்குள் அடங்கும். இவ்வகை பொருட்கள் அனைத்தையும் declare செய்வது அவசியம். . அண்மையில் Crystal Tadlock என்ற அமெரிக்க பெண் பிரான்சின் பாரிஸ் நகரில் இருந்து Delta Airlines விமானம் மூலம் அமெரிக்கா திரும்பியுள்ளார். அந்த பயணத்தின்போது உண்பதற்காக Delta விமானம் […]

ஹமாஸ் உறுப்பினர் மலேசியாவில் படுகொலை

பாலஸ்தீனரின் விடுதலை இயக்கமான ஹமாஸின் (Hamas) உயர்மட்ட உறுப்பினர் ஒருவர் மலேசியாவில் வைத்து படுகொலை செய்யப்பட்டு உள்ளார். இஸ்ரேலின் மொஸாட் (Mossad) இதை செய்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. . பாலஸ்தீன பொறியியலாளர் Fadi al-Batsh, வயது 35, காலை தொழுகைக்காக சென்றுகொண்டு இருக்கையிலேயே மலேசியா நகரில் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார். கொலை செய்தவர்கள் சுமார் 20 நிமிடங்கள் அவ்விடத்தில் காத்திருந்தே கொலையை செய்துள்ளனர். . al-Batsh நோக்கி 10 சூடுகள் செய்யப்பட்டிருந்தாலும், அவரின் உடலில் 4 சூட்டு […]

Interpol மகேந்திரனுக்கு Red Notice

பிரித்தானியாவை தளமாக கொண்ட சர்வதேச போலீஸ் அமைப்பான Interpol இலங்கையின் முன்னாள் மத்திய வங்கி governor அர்ஜுன மகேந்திரனுக்கு (Arjuna Mahendran) எதிராக red notice விடுத்துள்ளது. இந்த அறிக்கையின்படி மகேந்திரனின் இருப்பிடம் அறிந்து, அவரை கைது செய்ய கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. . மகேந்திரன் இலங்கை மத்திய வங்கி bond விற்பனை விடயத்தில் ஊழல் செய்திருந்தார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டாகும். இந்த ஊழல் 2015 ஆம் ஆண்டில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இலங்கையில் பிறந்த மகேந்திரன் ஒரு […]

பாரடா பிரபாகரா

பாரடா பிரபாகரா

விளக்கம் கேட்டவரை துரோகியென்று போட்டாயடா விளக்கமாக கூறியவரையும் துரோகியென்றே என்று போட்டாயடா . நீயெடுத்த உரிமையை உன் சகோதரர்க்கு மறுத்தாயடா Douglas அழிப்புக்காய் உன் கரும்புலியொன்றும் வெடித்தாளடா . அப்பவெல்லாம் வருடிகளை உன் காலடியில் வளர்த்தாயடா இப்போ பாரடா பிரபாகரா உன் வருடிகளின் அரசியல் உறவுகளை… . வெடித்தவள் உயிர் விரயமாக போனதடா எடுத்த கருமம் மட்டுமல்ல அரையில் உருத்திருந்ததும் பறி போனதடா . இப்ப பாரடா பிரபாகரா நீ விதைத்த அழிவுகளை பாவம் உன் மக்கள் […]