சிரியாவிலிருந்து வெளியேறுகிறது அமெரிக்கா

சிரியாவில் நிலைகொண்டிருந்த சுமார் 2,000 அமெரிக்க விசேட படையினர் அங்கிருந்து விரைவில் வெளியேறவுள்ளதாக அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது. IS குழுவை அழிக்கவென்று அங்கு சென்ற அமெரிக்க படைகளை ரம்ப் திடீரென திருப்பி அழைப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. . அமெரிக்கா சிரியாவுள் IS குழுவை அழிக்க என்று கூறி சென்றாலும், சிரியாவின் அரசை அழிப்பது, சிரியாவுள் ஈரானின் செல்வாக்கை அழிப்பது, Kurd குழுக்களுக்கு ஆதரவு வழங்குவது போன்ற உள் நோக்கங்களையும் அமெரிக்கா கொண்டிருந்தது. . அமெரிக்காவின் இந்த […]

இஸ்ரேல் துறைமுகம் சீனாவுக்கு, அமெரிக்கா விசனம்

015 ஆம் ஆண்டு இஸ்ரேல் தனது மிக பெரிய துறைமுகமான ஹைபாவை (Haifa) சீனாவுக்கு 25 வருட குத்தகைக்கு வழங்கி இருந்தது. இஸ்ரேலின் போக்குவரத்து அமைச்சும், சீனாவின் Shanghai International Port Group நிறுவனமும் இணைந்து இந்த துறைமுகத்தை சீனாவின் Belt and Road திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்ய இணங்கின. . இங்கு சீனா $2 பில்லியன் முதலீட்டைஇதில் செலவிடவுள்ளது. பதிலுக்கு சீனா 25 வருடங்களுக்கு இந்த துறைமுகத்தின் பெரும்பான்மை உரிமையை கொண்டிருக்கும். . இந்த […]

அமெரிக்க Goldman Sachs மீது மலேசியா வழக்கு

அமெரிக்காவின் மிகப்பெரிய நிதி நிறுவனமான Goldman Sachs மீது புதிய மலேசிய அரசு நட்டஈட்டு வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. முன்னைய அரசின் ஆட்சி காலத்தில் இடம்பெற்ற 1MDB ஊழலுக்கு Goldman Sachs உதவி செய்துள்ளது என்றே மலேசிய அரசு குற்றம் சுமத்தி உள்ளது. மலேசிய அரசு நட்டஈடாக சுமார் $2.7 பில்லியன் தொகையை கேட்டுள்ளது. . 2012 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையான காலத்தில் மலேசியாவின் அபிவிருத்திக்கு பயன்படுத்த என்று கூறி […]

சீனாவில் முழுமை பெற்ற முதல் Boeing 737 MAX

இன்று சனிக்கிழமை அமெரிக்காவின் Boeing விமான தயாரிப்பு நிறுவனம் முதல் முறையாக சீனாவில் முழுமை ஆக்கிய 737 MAX விமானத்தை Air China சேவைக்கு கையளித்துள்ளது. அமெரிக்காவின் Boeing விமான தயாரிப்பு நிறுவனம் அமெரிக்காவுக்கு வெளியே தனது விமான தயாரிப்பின் இறுதி பணிகளை (completion work) செய்வது சீனாவில் மட்டுமே. . Boeing நிறுவனமும் சீனாவின் Commercial Aircraft Corp of China (COMAC) இணைந்து இந்த இறுதி பணிகளில் ஈடுபட்டுள்ளன. அதற்காக Shanghai நகருக்கு அண்மையில் […]

எகிப்தில் 4,400 வருட பழைய கல்லறை

சுமார் 4,400 வருட பழைய கல்லறை (tomb) ஒன்று எகிப்தில் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு உள்ள மற்றைய புராதன கல்லறைகளுடன் ஒப்பிடுகையில் இந்த கல்லறை மிக குறைந்த பாதிப்புக்களையே கொண்டுள்ளது. திருடர்கள், மற்றும் எதிரிகளின் கண்களில் இந்த கல்லறை அகப்படாது இருந்தமையை காரணமாகலாம். . அக்காலத்தில் இப்பகுதி King Neferirkare ஆட்சியில் இருந்தது என்று கூறப்படுகிறது. இவரின் ஆட்சி கி.மு. 2500 முதல் 2300 வரையில் இருந்துள்ளது. . கைரோவுக்கு (Cairo) அண்மையில் உள்ள Saqqara கல்லறை தொகுதிகளில் […]

​ மோதி வீழ்ச்சி, மாட்டமைச்சர் தோல்வி

அண்மையில் நடைபெற்ற இந்திய மாநில தேர்தல்களில் மோதியின் பா.ஜ. கட்சி பலத்த தோல்வியை அடைந்துள்ளது. குறிப்பாக பா.ஜ. கட்சி ஆளுமை கொண்டிருந்த மாநிலங்களில் மோதியின் ஆளுமை அழிந்து உள்ளதால், 2019 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் பதவிக்கு வரலாம் என்று நம்பப்படுகிறது. . ராஜஸ்தான் (Rajasthan), மத்திய பிரதேசம் (Madhya Pradesh), சடீஷ்ஹார் (Chhattisgarh), மிசோரம் (Mosoram), தெலங்கானா (Telangana) ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் இடம்பெற்றன. அதில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சடீஷ்ஹார் […]

ரோமர் காலத்தில் மாந்தை ஒரு பெரும் துறை

ரோமர் (Roman Empire) காலத்தில், சுமார் 1500 வருடங்களின் முன், மன்னாரை அண்டியுள்ள மாந்தை பகுதி பெரியதோர் வர்த்தக துறைமுகமாக இருந்திருக்கலாம் என்று புதிய தொல்பொருள் ஆய்வுகள் கூறுகின்றன. அத்துடன் அக்காலத்தில் ரோமர், வணிக நோக்கங்களுடன், மாந்தை பகுதியில் தற்காலிக வதிவிடங்களையும் கொண்டிருந்திருக்கலாம் என்றும் இந்த ஆய்வுகள் கருதுகின்றன. . இலங்கை அகழ்வாய்வு திணைக்களத்துடன், University College Londonனின் ஆய்வாளர் Eleanor Kingwell-Banhamமும் இணைந்து செய்யும் ஆய்வுகளே இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளன. . யுத்தம் காரணமாக 1984 […]

மொசாம்பிக் அரசில் 30,000 மாய ஊழியர்கள்

ஆபிரிக்க நாடான மொசாம்பிக்கில் (Mozambique) சுமார் 30,000 மாய ஊழியர்கள் அரச ஊதியம் பெற்று வந்துள்ளமை அறியப்பட்டுள்ளது. அரச ஊதியம் பெற்றுவந்த இந்த ஊழியர்கள் உண்மையில் ஏற்கனவே மரணித்தவர்கள், அல்லது பொய்யாக உருவாக்கப்பட்டவர்கள். . 2015 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டுவரை அந்நாட்டு அரசு தமது திணைக்களங்களில் தொழில்புரியும் ஊழியர்களின் திறன்களை அறியும் நோக்கில் தகவல் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அப்போதே இந்த மாய ஊழியர் விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. . இந்த மாய […]

பிரித்தானிய வெளியேற்ற வாக்கெடுப்பு பின்போடல்

நாளை பிரித்தானிய பாராளுமன்றத்தில் இடம்பெறவிருந்த ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தான வெளியேற்ற வாக்கெடுப்பு மீண்டும் பின்போடப்பட்டு உள்ளது. பிரித்தானிய பிரதமர் தெரேசா மே ஏற்படுத்திக்கொண்ட பிரிவு திட்டம் போதிய வாக்குகளை வெற்றி கொள்ளாது என்ற காரணத்தாலேயே வாக்கெடுப்பு பின் போடப்பட்டு உள்ளது. . மே  தனது உரையில் “நாம் திட்டமிட்டபடி நாளை வாக்கெடுப்பை நடாத்தினால் பிரிவு திட்டம் அதிக வாக்குகளால் நிராகரிக்கப்படும்” என்று கூறியுள்ளார். . மே தலைமயிலான கூட்டணியின் 100 உறுப்பினர்வரை இந்த திட்டத்தை எதிர்ப்பதாக கூறப்படுகிறது. […]

ரம்பின் புதிய இழப்பு John Kelly

அமெரிக்க ஜனாதிபதி ரம்பின் ஆட்சியில் இருந்து விலகிய அல்லது விலக்கப்பட்ட அதிகாரிகளின் வரிசையில் இணையவுள்ளார் தற்போது White House Chief of Staff பதவியில் உள்ள John Kelly. John Kelly இந்த மாத இறுதியில் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். . ரம்ப் அரசுக்குள் குழப்பங்கள் உருவானபோது, அவற்றை கடுப்பாட்டுள் கொண்டுவரும் நோக்கிலேயே முன்னாள் இராணுவ ஜெனரல் John Kelly இந்த பதவிக்கு அமர்த்தப்பட்டார். ஆனால் அவராலேயே தொடர்ந்தும் செயல்பட முடியாது இருந்துள்ளது. . […]