ஜெருசலேமில் அமெரிக்க தூதுவராலயம்?

தற்போது ரெல் அவிவ் (Tel Aviv) நகரில் உள்ள அமெரிக்காவின் இஸ்ரவேலுக்கான தூதுவராலயத்தை சர்ச்சசைக்குரிய ஜெருசலேம் (Jerusalem) நகருக்கு நகர்த்தும் திட்டத்தை நாளை அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் அறிவிப்பார் என கூறப்படுகிறது. பல உலக நாடுகள் இந்த நகர்வை வன்மையாக கண்டித்துள்ளன. . 1995 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் திகதி அமெரிக்காவின் யூதர்கள் ஆதிக்கம் கொண்ட காங்கிரஸ் ஒரு சட்டத்தை உருவாக்கியிருந்தது. அந்த சட்டப்படி அமெரிக்கா தனது இஸ்ரவேலுக்கான தூதுவராலயத்தை ஜெருசலேம் நகருக்கு […]

Bitcoin என்ற digital நாணயம்

தற்போது நாணய சந்தையை உலுக்கி வருகிறது bitcoin என்ற மின்னியல் நாணயம் (digital currency). சிலர் இதை ஒருவகை முக்கோண சீட்டு என்கின்றனர். வேறு சிலர் இதுதான் வருங்கால நாணயம் என்கின்றனர். இந்த நாணயம் ஏனைய நாணயங்கள் போல் அச்சடிக்கப்படுவது இல்லை. இந்த நாணயம் எந்தவொரு நாட்டின் மத்திய வங்கியாலும் மேற்பார்வை செய்யப்படுவதும் இல்லை. இந்த நாணயம் எந்தவொரு நாட்டின் பொருளாதாரத்தை பிரதிபலிப்பதுவும் இல்லை. இது ஒரு digital currency. . இந்த நாணய முறை Satoshi […]

சர்வதேச நீதிமன்றில் குற்றவாளி நஞ்சருந்தி மரணம்

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் யுகோசிலவியாவுக்கான நீதிமன்றம் (ICTY அல்லது International Criminal Tribunal for the former Yugoslavia), அங்கு இடம்பெற்ற யுத்த குற்றங்கள் தொடர்பாக, பல முன்னாள் இராணுவ மற்றும் அரசியல் தலைமைகளை விசாரணை செய்து தண்டித்து வருகிறது. . அந்த விசாரணைகளில் ஒரு அங்கமாக குரோசியன் (Croatia) ஜெனரல் Slobodan Praljak என்பவரும் விசாரணை செய்யப்பட்டிருந்தார். இவர் 2004  ஆம் ஆண்டில் தானாகவே விசாரணைக்கு சமூகம் செய்திருந்தார். இவர் ஒரு war crime […]

இந்தியாவும் விரைவில் முதியோர் இல்லமாகலாம்

அண்மைக்காலங்களில் ஏற்பட்டுவரும் சனத்தொகை மாற்றங்களால் இந்தியாவும் விரைவில் ஒரு முதியோர் (60+ வயதுடையோர்) நிறைந்த நாடாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த முதியோர் பெரும்பாலும் தனிமையிலேயே வாழவும் நேரிடும். . தற்போது இந்தியாவில் சுமார் 100 மில்லியன் முதியோர் உள்ளதாக கணிப்பிடப்பட்டு உள்ளது. அத்துடன் கடந்த சில ஆண்டுகளாக முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பு வீதம், இந்தியாவின் சனத்தொகை அதிகரிப்பு வீதத்தின் இரண்டு மடங்காக இருந்து வருகிறது. இந்நிலை தொடரின், 2050 ஆம் ஆண்டில் இந்தியாவின் சனத்தொகையின் 25% […]

வடகொரியாவின் புதிய ஏவுகணை 13,000 km பாயும்

வடகொரியா இன்று மீண்டும் ஒரு ஏவுகணையை ஏவியுள்ளது. இந்த ஏவுகணை சுமார் 13,000 km பாயும் வல்லமை கொண்டது என கணிப்பீடு செய்யப்பட்டுள்ளது. உகந்த கோணத்தில் ஏவினால் இந்த ஏவுகணை அமெரிக்காவின் சிக்காகோ, வெள்ளைமாளிகை உள்ள வாஷிங்டன் DC போன்ற இடங்களை இலகுவில் அடையும். . வடகொரிய நேரப்படி செவ்வாய்க்கிழமை அதிகாலை 3:00 அளவில் ஏவப்பட்ட இந்த கணை 4,500 km உயரம்வரை சென்று, 1,000 km தொலைவில் வீழ்ந்துள்ளது. எதிரியை தாக்கும் நோக்குடன் ஏவப்படும் கோணத்தில் […]

மீண்டும் குமுறுகிறது இந்தோனேசியா எரிமலை

இந்தோனேசியாவின் பாலி (Bali) தீவில் உள்ள Agung எரிமலை கடந்த சில நாட்களாக குமுற ஆரம்பித்துள்ளது. நாளுக்குநாள் இதன் குமுறல் உக்கிரம் அடைந்தும் வருகிறது. தற்போது 100,000 வரையான பொதுமக்கள் எரிமலை பகுதியில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டு உள்ளனர். Agung மலையில் இருந்து 10 km தூரத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மக்களே தற்போது நகர்த்தப்பட்டு உள்ளனர். . பாலி தீவு இந்தோனேசியாவில் உள்ள உல்லாச பயணிகளுக்கான முதன்மை இடம். இந்தோனேசியா செல்லும் உல்லாச பயணிகளில் […]

பாலஸ்தீனமும் ரம்பை பயமுறுத்தியதா?

நேற்று வெள்ளிக்கிழமை பாலஸ்தீனர் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி ரம்பின் (Trump) அரசு முன்னுக்கு பின் முரணான நடவடிக்கை ஒன்றை (U-turn) எடுத்துள்ளது. அதற்கு காரணம் தற்போது எல்லாவற்றையும் இழந்த பாலஸ்தீனம் அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட முனைந்ததா என்று வினாவ வைத்துள்ளது. . கடந்த கிழமை அமெரிக்காவின் தலைநகர் Washington DC யில் செயல்பட்டுவந்த பலஸ்தீனர்களின் அலுவலகத்தை மூடிவிடுமாறு ரம்ப் அரசு கட்டளை பிறப்பித்து இருந்தது. இஸ்ரவேலுக்கு எதிராக ஐ.நா. உட்பட எந்தவொரு சர்வதேச அமைப்புகளுடனும் பாலத்தீனம் இணைந்து […]

இந்திய விருப்பத்துக்கு மாறாக மாலைதீவிலும் சீனா

மாலைதீவு சுதந்திரம் அடைந்ததை முதலில் அனுசரித்த நாடு இந்தியா. அன்றுமுதல் மாலைதீவு இந்தியாவுடன் நெருக்கம் கொண்ட ஒரு நாடாகவே இருந்து வந்துள்ளது. மாலத்தீவுக்கு தேவையான பொருட்களை இந்தியாவும், இலங்கையுமே பெருமளவில் வழங்கி வந்துள்ளன. ஆனால் தற்போது மாலைதீவு இந்தியாவையும் மீறி சீனாவின் நட்பு நாடாக மாறியுள்ளது. . 2014 ஆம் ஆண்டு சீன ஜனாதிபதி மாலைதீவு சென்றிருந்தார். அப்போது சீனாவும், மாலத்தீவும் பல உடன்பாடுகளை செய்துகொண்டன. மாலைதீவு சீனாவின் One-Road-One-Belt திட்டத்திலம் இணைந்து கொண்டது. இந்த வருடம் […]

இலங்கை, தென்னிந்தியா வரும் பெருமழை

இலங்கை மற்றும் தமிழ்நாடு, கேரளா உட்பட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு மீண்டும் பெருமழை வருகிறது. உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இடியுடனான இந்த பெருமழை இப்பகுதிகளில் பொழியலாம். . இலங்கைக்கும், அந்தமான் தீவுகளுக்கும் இடையிலான வங்காள விரிகுடாவின் தென்பகுதியில் ஏற்படும் காலநிலை மாற்றங்களே இந்த பெருமழைக்கு காரணம். . சென்னை, மதுரை, கோயம்புத்தூர், கோச்சி போன்ற தென்னிந்திய நகரங்கள் இம்மழையால் பெரிதும் பாதிக்கப்படும். இலங்கையின் முழுப்பகுதியும் இந்த மலையின் தாக்குதலுக்கு உள்ளாகும். . தொடர்ச்சியாக பொழியவுள்ள […]

எகிப்து மசூதி தாக்குதலுக்கு 235 பேர் வரை பலி

எகிப்தின் சைனாய் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் இடம்பெற்ற குண்டு, மற்றும் துப்பாக்கி தாக்குதல்களுக்கு குறைந்தது 235 பேர் பலியாகியும், மேலும் 100 வரை காயப்பட்டும் உள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை மசூதியில் வழிபாடுகள் இடம்பெற்ற வேளையிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. . எகிப்தின் சைனாய் பகுதியில் உள்ள El Arish என்ற நகருக்கு அண்மையில் உள்ள Bir al-Abed என்ற சிறுநகரில் உள்ள Al Rawdah என்ற மசூதி மீதே இந்த தாக்குதல் இடம்பெற்று உள்ளது.  முதலில் […]